<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781</id><updated>2012-01-21T19:24:03.626+05:30</updated><title type='text'>இளங்கோ கிருஷ்ணன்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>44</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-3660862384524245375</id><published>2012-01-21T19:16:00.003+05:30</published><updated>2012-01-21T19:24:03.636+05:30</updated><title type='text'>சீசரை யார் கொன்றார்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-WaPB4kR9Ce0/TxrDZbfp3BI/AAAAAAAAAHI/HqKsvADkwCQ/s1600/061_painting_death_of_julius_caesar_naples_mus.jpg_480_480_0_64000_0_1_0.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 224px;" src="http://3.bp.blogspot.com/-WaPB4kR9Ce0/TxrDZbfp3BI/AAAAAAAAAHI/HqKsvADkwCQ/s320/061_painting_death_of_julius_caesar_naples_mus.jpg_480_480_0_64000_0_1_0.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700083120035453970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்முதுகில் முதல் குத்தை&lt;br /&gt;கடவுள் இறக்கினார் சீசர்&lt;br /&gt;பிறகு ஒன்றை மிகுந்த பாசத்துடன்&lt;br /&gt;உன் தாய் தந்தாள்&lt;br /&gt;உன் காதலியும்&lt;br /&gt;உடன் பிறந்தவர்களும்&lt;br /&gt;வெறுக்கமுடியாத நண்பனும்&lt;br /&gt;வாள் எடுப்பதை பார்த்த பிறகே&lt;br /&gt;உன் எதிரி எடுத்தான்&lt;br /&gt;ஒரு முத்தத்திற்கு தயாராவதை&lt;br /&gt;போல நீ உன் வாளுக்கு தயாரானாய்&lt;br /&gt;"Et tu, Caesar,," (then Caesar die)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-3660862384524245375?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/3660862384524245375/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2012/01/blog-post_21.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/3660862384524245375'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/3660862384524245375'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2012/01/blog-post_21.html' title='சீசரை யார் கொன்றார்கள்'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-WaPB4kR9Ce0/TxrDZbfp3BI/AAAAAAAAAHI/HqKsvADkwCQ/s72-c/061_painting_death_of_julius_caesar_naples_mus.jpg_480_480_0_64000_0_1_0.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-410792613731235216</id><published>2012-01-12T17:38:00.002+05:30</published><updated>2012-01-12T17:53:22.872+05:30</updated><title type='text'>வம்சம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-7TmZpH373ik/Tw7QkIFh8vI/AAAAAAAAAG8/wG9J52pcny8/s1600/homosexual_family_painting_gay_couple_with_kids.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 318px;" src="http://2.bp.blogspot.com/-7TmZpH373ik/Tw7QkIFh8vI/AAAAAAAAAG8/wG9J52pcny8/s320/homosexual_family_painting_gay_couple_with_kids.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5696719897734804210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;லேட்.அப்பாவுக்கு&lt;br /&gt;மூன்று மகன்கள்&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ஒரு அணில் குஞ்சு&lt;br /&gt;அடுத்தவன் பொண்டாட்டியை காப்பாற்ற&lt;br /&gt;மண் சுமந்து&lt;br /&gt;தன் பொண்டாட்டிய தொலைச்ச கதை&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததோ ஒரு&lt;br /&gt;ஓட்டை பானை&lt;br /&gt;கிணறு முழுக்க தண்ணி இருந்தும்&lt;br /&gt;தவிச்ச வாய் நனைச்சதில்ல&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறந்தான் நான் வந்தேன்&lt;br /&gt;அழகான பாசிமணி&lt;br /&gt;பசிக்குதுன்னு மெல்ல முடியல&lt;br /&gt;படக்குன்னு எடுத்து வீச மனமில்லை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-410792613731235216?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/410792613731235216/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/410792613731235216'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/410792613731235216'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2012/01/blog-post.html' title='வம்சம்'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-7TmZpH373ik/Tw7QkIFh8vI/AAAAAAAAAG8/wG9J52pcny8/s72-c/homosexual_family_painting_gay_couple_with_kids.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-3460866959092672028</id><published>2011-09-02T13:20:00.002+05:30</published><updated>2011-09-02T13:23:10.902+05:30</updated><title type='text'>சமயவேலின் மின்னிப்புற்களும் மிதுக்கம் பழங்களும் தொகுப்பை முன்வைத்து</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-lMVAnqWCPPk/TmCLV76ncII/AAAAAAAAAG0/hqy8Trltz00/s1600/samayavel-1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 93px; height: 120px;" src="http://1.bp.blogspot.com/-lMVAnqWCPPk/TmCLV76ncII/AAAAAAAAAG0/hqy8Trltz00/s320/samayavel-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5647667141699661954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மனிதன், தன்னைப் படைத்த சக்திகளால் கைவிடப்பட்ட மிருகம் &lt;br /&gt;                                        – ழான் பால் சார்த்தர்&lt;br /&gt;எல்லாம் எல்லாம் எல்லாம் எரிகின்றன &lt;br /&gt;போதிசத்துவர்களே காண்பவையும் காண்பவனும் &lt;br /&gt;எல்லாம் எல்லாம் எல்லாம் எரிகின்றன&lt;br /&gt;					-  தம்மபதம்&lt;br /&gt;i)&lt;br /&gt;Existentialism எனப்படும் இருத்தலியம் சார்ந்த உரையாடல்களின் போதெல்லாம் தமிழில் தவறாது குறிப்பிடப்படும் படைப்பாளிகளில் சமயவேலும் ஒருவர். பத்தொன்பதாம்  நூற்றாண்டில் துவங்கி உலகப் போர்கள் வரை ஒரு பேரலையென மேற்கின் அறிவுலகை ஆதிக்கம் செலுத்திய இந்தக் கருத்தியலானது தமிழில் 1970களில்தான் ஒரு தத்துவ சொல்லாடலாக பிரபலமடைந்தது. ஆனால் எந்தவொரு நவீன சிந்தனையாயினும் அதன் எதாவது ஒரு சாரம்சமோ அல்லது முழுதுமோ எல்லாப் பண்பாடுகளிலும் வரலாற்றின் ஏதாவது ஒரு தருணதில் இருந்தே வந்திருக்கிறது என்பதற்கேற்ப தமிழிலும் இருத்தலியத்தின் சிந்தனைக் கூறுகளை நாம் சங்க இலக்கியங்களில் கூட காண முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இருத்தலியம் என்ற நவீன கோட்பாட்டிற்கான இலக்கணத்தை மேற்கின் வரையறைகளில் வைத்து பேசுவோம் எனில் தமிழில் தனிப்பாடல் திரட்டுகளில் இருந்தே இருத்தலிய சிக்கல்களால் ஆன கவிதைகள் எழுதப்படத் துவங்கின எனலாம்.    வரலாற்றுரீதியாக தமிழில் தனிப்பாடல்களின் காலம் என்பது நவீனத்துவம் அறிமுகமாகத் துவங்கிய காலம். அதாவது ஆங்கிலேய அரசின் வழியாக இந்தியச் சமூகம் மேற்கின் நவீன சிந்தனைகளுக்குள் ஆற்றுப்படத்துவங்கிய காலம். இதை தமிழ் இருத்தலியத்தின் துவக்ககாலம் என்றே சொல்ல முடியும். இந்திய குடிமைச் சமூகம் நிலப்பிரபுத்துவ விழுமியங்களுக்கு மாற்றாக முதலாளித்துவ விழுமியகளுக்குள் பயணப்படத் துவங்கிய இக்காலக்கட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகள் கவிஞனின் ஆற்றாமையையும், வறுமையையும், சமூக ஒறுப்பையும் தங்கள் காலகட்டத்திற்குள் இருந்தே பேசின எனவே இதில் மேற்கின் இருத்தலியதின் அடிப்படைகூறுகளான  நவீன விஞ்ஞானவாதம் உருவாக்கிய இருப்பு குறித்த அபத்தம், அந்நியமாதல் போன்ற சொல்லாடல்கள் இடம் பெற சாத்தியமில்லை. தனிப்பாடல் திரட்டுகள் முதல் பாரதிக்கு சற்று பிந்தைய காலக்கட்டம் வரை தமிழ் இருத்தலியமானது இவ்வாறே இருந்து வந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைக்கு பிறகான புதிய குடிமைச் சமூகதில் பிறந்த படைப்பாளிகள் எழுத வந்த போது இங்கு முதலாளித்துவம் நன்கு வேரூன்றியிருந்தது. ஒரு தலைமுறைக்கும் மேலாக இங்கு நடைபெற்ற முதலாளித்துவ-ஜனநாயகம் அறிவுச் சூழலில் ஆழமான அவநம்பிக்கைகளையும், மாற்றுச் சமூகத்திற்கான தேடலையும் உருவாக்கியது.  தமிழில் மட்டுமல்ல இந்தியாவெங்குமே 70 மற்றும் 80 களின் தசமம் என்பது இலட்சியவாதங்களாலும், புதிய சமூக உருவாக்திற்கான கனவுகளாலும் நிறைந்திருந்தது. மறுபுறம் நவீன விஞ்ஞானம் உருவாக்கிய காலம் வெளி குறித்த கருத்துகள், பிரபஞ்சம் பற்றிய உண்மைகள் போன்றவை நவீன தமிழ் மனதை தனது இருப்பு குறித்த விசாரனைகளுக்குள் தள்ளியது. இதனால் நம்பிக்கையின்மை, விரக்தி, அபத்தம், அந்நியமாதல் போன்ற உணர்வுகளில் சிக்கித் தவித்த இளம்படைப்பாளிகள் மேற்கின் இருத்தலிய சிந்தனைகளால் கவரப்பட்டார்கள். உண்மையில் இந்தக் காலக்கட்டத்தையே தமிழ் இருத்தலியத்தின் செவ்வியல் காலம் என நாம் குறிப்பிட இயலும். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்விடத்தில் தமிழ் இருத்தலியம் எனும் போது அது தமிழ் சூழலில் குறிப்பாக இலக்கியத்தில் எப்படி உள்வாங்கப்பட்டது என நாம் பார்க்க வேண்டும். மேற்கை போலவே இங்கும் இருத்தலியம் என்பது  நம்பிக்கையின்மை, விரக்தி, அபத்தம், அந்நியமாதல் போன்ற விஷயங்களை பேசினாலும் தமிழில் அது அரசியல் நீக்கம் உடையதாகவே இருந்தது. மேற்கில் சாத்தர் போன்றவர்கள் மனிதன் தன் இருப்புக்கும் செயலுக்கும் தானே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி நேரடி அரசியலோடு தங்களை இணைத்துக் கொண்ட போது தமிழில் நேரடி அரசியலோடு தொடர்பற்ற இருத்தலியமே இயங்கியது. விதிவிலக்காக ஆத்மாநாமின் சில கவிதைகளையும் சமயவேலின் சில கவிதைகளையும் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இருத்தலியத்தின் செவ்வியல் காலக்கட்டத்தை சேர்ந்த படைப்பாளியான சமயவேல் தமிழ் இருத்தலியத்தின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவர் என்று நான் சொல்வேன். அதாவது இப்படிச் சொல்லலாம் தமிழ் இருத்தலியமானது சமயவேலால் தனது உலகளாவிய செவ்வியல் பண்பை கவிதைகளில் எட்டியது. &lt;br /&gt;&lt;br /&gt;காலம் மற்றும் வெளி பற்றிய பிரக்ஞையே துவக்க கால சமயவேல் கவிதைகளின் அடிப்படையாக இருக்கின்றன. அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பிற்கே “அகாலம்” என்றுதான் பெயர். மனிதனின் அறிவின் முன் முடிவற்ற நேற்றும் முடிவற்ற நாளையுமாய் விரிந்து கிடக்கும் இப்பிரபஞ்சம், விரிந்து கொண்டே போகும் அதன் வெளி, அவ்வளவு பெரிய பிரமாண்டத்தின் முன் இவ்வளவு சிறிதாய் இருக்கும் தனது இருப்பு, ஒரு எலுமிச்சை பழ அளவே இவ்வளவு பெரிய பிரபஞ்சம் ஒரு காலத்தில் இருந்தது.. ஒரு அரைகண நேர பெருவெடிப்பில் அது உருவானது என்ற உண்மை, இன்னொரு அரைக்கண நேரத்தில் அது இல்லாமல் போகவும் சாத்தியமுள்ளது என்ற தர்க்கம் ஏற்படுத்தும் பிரமிப்பு, அச்சம், அபத்தம்,  இது எதையும் உணராது இங்கு நடந்து கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்கள் ஆகியனவே சமயவேலுக்கு எழுதுவதற்கான மன உந்தத்தை கொடுக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இவரது துவக்ககால கவிதைகளில் இருக்கும் இன்னொரு பண்பு நிலமின்மை. அதாவது சமயவேல் கவிதைகள் எந்தவொரு குறிப்பிட்ட பண்பாட்டு வெளிக்குள்ளும் கால வெளிக்குள்ளும் நின்று பேசுவன அல்ல. அது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் கவிதையாக காலமற்ற காலத்தில் நின்று நிலமற்ற நிலத்தில் எல்லாக் காலத்துக்குமான எல்லா மனிதர்களுக்குமான ஒட்டுமொத்த இருத்தல் குறித்த உணர்வை நேரடியான மொழியில் பேசுபவை. உதாரணமாக ஒரு கவிதை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;என் பெயர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூமியின் கோடிக் கணக்கான&lt;br /&gt;ஜீவன்களில் நானும் ஒன்று என்&lt;br /&gt;துக்கம் தாகம் சந்தோஷமென&lt;br /&gt;நானொரு பெரும் சமுத்திரம்&lt;br /&gt;&lt;br /&gt;என் அலைகளுக்குள் &lt;br /&gt;நானே மூழ்கும் சந்தோஷம்&lt;br /&gt;என் சிகரங்களை நானே&lt;br /&gt;படைக்கும் பரிதாபம்&lt;br /&gt;&lt;br /&gt;என்னில் நானும் நானில் என்னும்&lt;br /&gt;எரிந்து கலந்து கிளம்புகையில்&lt;br /&gt;வேரில் சுண்டும் பூமி&lt;br /&gt;உயிரில் குறி வைத்து அடிக்கும்&lt;br /&gt;பேருயிர்&lt;br /&gt;&lt;br /&gt;நானொரு&lt;br /&gt;இறந்து/வாழ்ந்து கொண்டிருப்பவன்&lt;br /&gt;என் பெயர் மியாக்கண்ணு&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கவிதையில் எந்தவொரு நிலமோ பண்பாடோ காலச்சூழலோ இல்லை. இது காலமற்ற காலத்தில் எல்லா மனிதனுக்குமான இன்னும் சொல்லப்போனால் எல்லா&lt;br /&gt;உயிருள்ள உயிரற்ற ஜடப் பொருட்களுக்குமான கவிதையாக எல்லாக் காலத்திலும் பொருளாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;காற்றின் பாடல், அகாலம் ஆகிய இரு தொகுப்பிலும் இவ்வகை நிலமற்ற கவிதைகளே அதிகமாக உள்ளன. ஒரு சில கவிதைகளில் நிலமும் பண்பாட்டுச்சூழலும் இருக்கிறது ஆனால் அவைகளும் கூட கவிதையின் மையப் படிமத்துக்கு துணை செய்யும் அசைக்க இயலா சொற்களாக இல்லை உதரணமாக சமயவேலின் இன்னொரு புகழ் பெற்ற கவிதையைப் பார்க்கலாம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அவன் பாடல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆறுமுகக் கிழவன் பாடிக் கொண்டிருக்கிறான்&lt;br /&gt;ராத்திரி முழுதும் விடிய விடிய&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகள் இழந்தான் கிழவியும் இறந்தாள்&lt;br /&gt;சொத்தும் அற்றான் இரத்தம் உலர்ந்து&lt;br /&gt;தசைகள் கரைந்து எண்ண முடியாக்&lt;br /&gt;கோடுகளாகத் தோலும் சுருங்க&lt;br /&gt;மீதி உயிரையும் பாடலாக்கி&lt;br /&gt;இரவை நிரப்புகிறான்&lt;br /&gt;&lt;br /&gt;கைத்தடிச் சப்தம் தெருக்களில் எழுப்பி&lt;br /&gt;தட்டு நிரப்பி நாட்களைத் தொடர்கின்றான்&lt;br /&gt;&lt;br /&gt;கூடை பின்னலில் விறகு கீறலில்&lt;br /&gt;ஒயில் கும்மியில் சிலம்பக் கழிகளில்&lt;br /&gt;வாடிக் கள்ளில் கறுப்புப் பெண்களில்&lt;br /&gt;கடந்து முடிந்த வாழ்வு முழுதும்&lt;br /&gt;பாடலாகி வெளியை நிரப்ப&lt;br /&gt;காலியான நெஞ்சினோடு&lt;br /&gt;காற்றில் தூங்குகிறான்&lt;br /&gt;ஆறுமுகக் கிழவன் அனாதைதான்&lt;br /&gt;உலகு போல வானம் போல.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கவிதையில் ஆறுமுகக் கிழவன் எனும் ஒரு பெயர் உள்ளது மேலும் ஒயில் கும்மியில், சிலம்பக் கழிகளில், வாடிக் கள்ளில் போன்ற சொற்கள் வழியாக ஒரு பண்பாட்டு காலச்சூழல் சுட்டப்படுகிறது. ஆனால் //ஆறுமுகக் கிழவன் அநாதைதான்/ உலகு போல வானம் போல// எனும் கவிதையின் இறுதி இரு வரிகள் வழியாக இந்தக் கவிதையின் மையம் கொடுக்கும் மன உணர்வு எந்த பண்பாட்டோடும், காலச்சூழலோடும்  தொடர்புடையதல்ல. அது ஒட்டு மொத்த மானுடகுலத்தன்மை உடையது. இந்த வகைக் கவிதைகளே சமயவேலின் உச்சபட்ச சாதனை என்று நான் சொல்வேன். இந்த வகைக் கவிதைகள் வழியாகவே சமயவேல் தமிழ் இருத்தலியத்தின் முதன்மையான கவியாக ஆகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ii) &lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் இருத்தலியத்தின் செல்வாக்கு 90களின் பிற்பகுதியில் மெல்ல மங்கத் துவங்கியது. இந்தக் காலக்கட்டத்தை நாம் தமிழ் இருத்தலியத்தின் மூன்றாவது காலக்கட்டம் எனலாம்.    இன்றும் கூட எழுதப்படும் கவிதைகளில் இருத்தலியச் சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன என்றாலும் 1970 அல்லது 80 களில் இருந்ததை போன்ற தத்துவார்த்தமான இருத்தலியல் மோகம் இப்போது இல்லை என்பதே உண்மை. மேற்கில் பின் அமைப்பியல் மற்றும் பின் நவீனத்துவ கோட்பாடுகள் இருத்தலியத்தை அப்புறப்படுத்திய சூழலில்தான் இங்கு இருத்தலியம் செல்வாக்கோடு இருந்தது.  தமிழிலும் அமைப்பியல், பின் அமைப்பியல் மற்றும் பின் நவீனத்துவம் தொடர்பான உரையாடல்கள் நிகழத்துவங்கிய காலத்தில் எழுத வந்த புதிய தலைமுறை ஒன்று தங்கள் இருத்தலிய அகமனச் சிக்கல்களை கடந்து அரசியல் பிரக்ஞையோடு எழுதத் துவங்கின. மேலும் பெண்ணியம் மற்றும் தலித்தியம் போன்ற எழுச்சியோடு கிளம்பிய விளிம்பு நிலை உரையாடல்களும் இருத்தலிய உரையாடல்களை சற்றுப்  பின் நோக்கித் தள்ளின. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்றாவது காலகட்டத்தில் தமிழ் இருத்தலியமானது இரண்டாவது காலக்கட்டத்தை விடவும் அதிகமாக சமகால அரசியலை பேசுவதாக இருக்கிறது என்பதைக் குறிப்பிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காலக்கட்டத்தை சேர்ந்த சமயவேலின் கவிதைகள் அவரின் முந்தைய கவிதைகளில் இருந்து சற்று மாறுபட்டவையாகவே இருக்கின்றன. காலம் மற்றும் வெளி உருவாக்கும் அபத்த உணர்விலிருந்து சற்று விடுபட்டதாக இருக்கின்றன. ”மின்னிப்புற்களும் மிதுக்கம் பழங்களும்” என்ற தொகுப்பில் ஒரு கவிதை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நானும் என் நிழலும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்த இடமென்று இல்லை&lt;br /&gt;என்னிலிருந்து&lt;br /&gt;என் நிழலை உருவி&lt;br /&gt;வீழ்த்துகின்றன ஒளிக்கற்றைகள்&lt;br /&gt;சாக்கடையிலும் குப்பைமேட்டிலும் கூட&lt;br /&gt;விழுகின்றன&lt;br /&gt;என் நிழல்கள்&lt;br /&gt;..........................&lt;br /&gt;.........................&lt;br /&gt;&lt;br /&gt;என் நிழல்தான்&lt;br /&gt;ஆனால் என் விருப்பம்&lt;br /&gt;என் சம்மதம் என்று&lt;br /&gt;எதையும் அது கேட்பதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;..........................&lt;br /&gt;.........................&lt;br /&gt;........................&lt;br /&gt;&lt;br /&gt;பெளதிக உலகில்&lt;br /&gt;ஒரு பெளதிகப் பண்டம் நீ&lt;br /&gt;நிழல் சொல்கிறது&lt;br /&gt;ஒளி சொல்கிறது&lt;br /&gt;ஏன் சுவரே சொல்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;பெளதிக உலகில்&lt;br /&gt;ஒரு பெளதிகப் பண்டம் நீ&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை இல்லை என&lt;br /&gt;அலறுகிறது&lt;br /&gt;எனக்குள் ஏதோ ஒன்று&lt;br /&gt;      &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு முடியும் இக்கவிதை இருத்தலிய அபத்தத்தை நம்ப மறுக்கிறது. அதைக் கடந்து போக விழைகிறது. மேலும் இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் இவரது முந்தைய கவிதைகளை விடவும் நிலம் சார்ந்து இயங்குகின்றன. மின்னிப்புற்கள், மிதுக்கம் பழங்கள், முசுமுசுக்கைச் செடி, நுணாமரப்புதர், மயில் கழுத்து நீலம், மந்தைக் கருப்புசாமியின் ஆங்காரம் என மண்வாசம் நிறைந்த கவிதைகளாக இந்தத் தொகுப்பில் உள்ளன. அகாலம் என்று ஒரு தொகுப்புக்கு பெயரிட்டு காலமற்ற நிலமற்ற வெளியில் இயங்கும் கவிதைகளை எழுதிய கவிஞர் ”மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும்”  என்ற தொகுப்பின் வழியாக மண் சார்ந்த படிமங்களை பேசுபவராக மாறி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தொகுப்பின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்றான “இரவின் தீராப்பகை”  எனும் நெடுங்கவிதை நம் கைவிட்டு போய்க்கொண்டிருக்கும் பண்பாட்டு பழக்கவழக்கங்கள் பற்றி கருப்பின் ஆங்காரமான குரலில் பேசுகிறது. சமயவேலின் கவிதைகள் அவரது முந்தைய கவிதைகளை விடவும் அரசியலாக்கம் பெற்றிருப்பதற்கு இந்த கவிதை ஒரு சான்று.&lt;br /&gt;iii)பிளைன் பொயட்டிரி எனப்படும் நேரடிக் கவிதைகள் அல்லது ஓருடல் கவிதைகளில் சமயவேல் ஒரு சாதனையாளர். தமிழில் இன்றும் சிறந்த முறையில் எழுதப்படும் நேரடி கவிதைகளுக்கான முன்னோடிகளில் சமயவேலும் ஆத்மாநாமும் சுகுமாரனும் முக்கியமானவர்கள். நேரடிக் கவிதைகள் எழுதும் ஒவ்வொரு கவிஞருக்கும் ஒரு பாணி உள்ளது. பாசாங்கற்ற எளிய மொழியில் உள்ளார்ந்த இசைமையோடு நெஞ்சு கொப்பளித்து பெருகி வரும் இவரின் சொற்கள் வாசகனை முதல் வாசிப்பிலேயே சொக்க வைத்து விடும் வலிமை கொண்டவை. இந்தத் தொகுப்பில் நேரடிக் கவிதைகளைக் தவிரவும் ”குற்ற நிலவறை” “முள்ளில்” போன்ற உரைநடைத் தன்மை மிக்க கவிதைகளும் பார்மலஸ் பொயட்டிரி எனப்படும் உருவுமைகடந்த கவிதைகளும் சோதனை முயற்சியாக எழுதப்பட்டிருக்கிறது.   &lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக சொல்வதெனின், இவ்வளவுக்கும் பிறகும் இப்பூமியில் நான் இருக்க விரும்புகிறேன் அதுதான் என் சாரம்சம் என்று  சொல்லும் சமயவேலின் கவிதைகள் மனித வாழ்வின் சாரம்சத்தை தத்துவங்களின் வியாக்கானங்கள் வாயிலாகவும் கவிதையின் உணர்வுபோதத்தின் வாயிலாகவும் புரிந்து கொள்ள முயல்பவை. புரிய இயலா சந்தர்பங்களில் சற்று அவநம்பிக்கை கொண்டாலும் புரிந்து கொள்வதற்கான முயற்சியை தொடர்ந்து செய்துகொண்டேயிருப்பவை.   &lt;br /&gt;&lt;br /&gt;( 28.08.2011 கோவையில் நடந்த “அகத்துறவு” இலக்கிய நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-3460866959092672028?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/3460866959092672028/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2011/09/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/3460866959092672028'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/3460866959092672028'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2011/09/blog-post.html' title='சமயவேலின் மின்னிப்புற்களும் மிதுக்கம் பழங்களும் தொகுப்பை முன்வைத்து'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-lMVAnqWCPPk/TmCLV76ncII/AAAAAAAAAG0/hqy8Trltz00/s72-c/samayavel-1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-3986216403734587681</id><published>2011-08-26T19:36:00.001+05:30</published><updated>2011-08-26T19:38:25.433+05:30</updated><title type='text'>மரணதண்டனைக்கு எதிராக மனு கொடுப்போம்</title><content type='html'>From&lt;br /&gt;&lt;br /&gt;.............&lt;br /&gt;&lt;br /&gt;..............&lt;br /&gt;&lt;br /&gt;..............&lt;br /&gt;&lt;br /&gt;............&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;To&lt;br /&gt;&lt;br /&gt;The Hon’ble Chief Minister&lt;br /&gt;&lt;br /&gt;Tamil Nadu&lt;br /&gt;&lt;br /&gt;Secretariat&lt;br /&gt;&lt;br /&gt;Fort St. George&lt;br /&gt;&lt;br /&gt;Chennai. 600 009&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;APPEAL TO THE HON’BLE CHIEF MINISTER OF TAMIL NADU TO SAVE THE LIFE OF&lt;br /&gt;&lt;br /&gt;MURUGAN, SANTHAN &amp; PERARIVALAN, WHO WERE SENTENCED TO DEATH IN RAJIV&lt;br /&gt;&lt;br /&gt;GANDHI’S CASE AND WHOSE MERCY PETITIONS WERE RECENTLY REJECTED BY&lt;br /&gt;&lt;br /&gt;THE HON’BLE PRESIDENT OF INDIA&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;Respected Madam:&lt;br /&gt;&lt;br /&gt;Mahatma Gandhi long ago wrote in the Harijan :&lt;br /&gt;&lt;br /&gt;“God Alone Can Take Life&lt;br /&gt;&lt;br /&gt;Because He Alone Gives It”&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;In one of the most civilized countries of the world, it is saddening, death penalty still reigns.&lt;br /&gt;&lt;br /&gt;We are shocked beyond words that 3 youngsters, who have spent almost their entire life&lt;br /&gt;&lt;br /&gt;since their teens in solitary confinement, are condemned to face the gallows. Murugan,&lt;br /&gt;&lt;br /&gt;Santhan and Perarivalan who were sentenced to death in Rajiv Gandhi’s case appealed to&lt;br /&gt;&lt;br /&gt;the President of India for clemency under Article 72 of the Constitution on 26th April 2000.&lt;br /&gt;&lt;br /&gt;They have all along been hopeful that they would either be released from prison or their&lt;br /&gt;&lt;br /&gt;death sentence would be converted into life imprisonment by the President of India. They&lt;br /&gt;&lt;br /&gt;have been awaiting almost every dawn a news of relief from the President. Alas ! The&lt;br /&gt;&lt;br /&gt;President of India turned down their clemency petition after making them wait for more than&lt;br /&gt;&lt;br /&gt;eleven long years.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;The Supreme Court of India has in the past converted death sentence into imprisonment for&lt;br /&gt;&lt;br /&gt;life only on the ground that clemency petition of a convict was pending with the President of&lt;br /&gt;&lt;br /&gt;India for more than 2 years. A five Judge Bench of the Supreme Court of India has in&lt;br /&gt;&lt;br /&gt;Smt.Triveniben Vs. State of Gujarat held : “As between funeral fire and mental worry it is the&lt;br /&gt;&lt;br /&gt;latter which is more devastating, for, funeral fire burns only the dead body while the mental&lt;br /&gt;&lt;br /&gt;worry burns the living one.” The death sentence of these 3 persons were confirmed by the&lt;br /&gt;&lt;br /&gt;Supreme Court on 11 May 1999. It is more than 12 years since their death sentences were&lt;br /&gt;&lt;br /&gt;confirmed and it is more than eleven years since they made clemency petitions to the&lt;br /&gt;&lt;br /&gt;President of India. They have been under the shadow of death all these years suffering&lt;br /&gt;&lt;br /&gt;every moment in a condemned cell.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;There have been cases that even after the rejection of the clemency petition by the President&lt;br /&gt;&lt;br /&gt;of India, State Governments have considered afresh the need for clemency and converted&lt;br /&gt;&lt;br /&gt;the death sentence into imprisonment for life.&lt;br /&gt;&lt;br /&gt;As early as in February 1979, the Supreme Court of India speaking through Justice&lt;br /&gt;&lt;br /&gt;V.R.Krishna Iyer, while converting death sentence of a convict into life imprisonment, said:&lt;br /&gt;&lt;br /&gt;“Our culture is at stake, our karuna is threatened, our Constitution is brought into contempt by&lt;br /&gt;&lt;br /&gt;a cavalier indifference to the deep reverence for life and a superstitious offering of human&lt;br /&gt;&lt;br /&gt;sacrifice to propitiate the Goddess of Justice”&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;It is submitted that the sovereign power under Article 161 of the Constitution can be exercised&lt;br /&gt;&lt;br /&gt;by the Hon’ble Governor on the advice of Council of Ministers for converting the death&lt;br /&gt;&lt;br /&gt;sentence of Murugan, Santhan and Perarivalan into imprisonment for life even after the&lt;br /&gt;&lt;br /&gt;rejection of their clemency petitions by the Hon’ble President of India under Article 72 of the&lt;br /&gt;&lt;br /&gt;Constitution.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;It is submitted that pendency of the clemency petitions of these 3 persons with the Hon’ble&lt;br /&gt;&lt;br /&gt;President of India for more than 11 years may be considered as a significant factor for&lt;br /&gt;&lt;br /&gt;exercising the sovereign power under Article 161 of the Constitution and for converting their&lt;br /&gt;&lt;br /&gt;death sentence into imprisonment for life. Their incarceration for more than 20 years may&lt;br /&gt;&lt;br /&gt;also be treated to be an important factor for commutation of their death sentence into life&lt;br /&gt;&lt;br /&gt;imprisonment.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;We earnestly appeal to the Hon’ble Chief Minister of Tamil Nadu to save the lives of these 3&lt;br /&gt;&lt;br /&gt;persons by exercising the sovereign power of the State of Tamil Nadu under Article 161 of&lt;br /&gt;&lt;br /&gt;the Constitution, for which act the world Tamil community would ever be grateful.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;Yours sincerely,&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-3986216403734587681?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/3986216403734587681/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2011/08/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/3986216403734587681'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/3986216403734587681'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2011/08/blog-post.html' title='மரணதண்டனைக்கு எதிராக மனு கொடுப்போம்'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-1550950364075060675</id><published>2011-06-27T13:22:00.002+05:30</published><updated>2011-06-27T13:26:22.741+05:30</updated><title type='text'>நீர் வழிப்படும் புணை நீங்கள் நான் மற்றும் மரணம்: எஸ்.செந்தில்குமாரின் நாவல் குறித்து</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-Z3fB9iaBNUI/Tgg3iykU12I/AAAAAAAAAGs/YdfLUZYE-qk/s1600/Surreal-Paintings-by-Joel-Rea-1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-Z3fB9iaBNUI/Tgg3iykU12I/AAAAAAAAAGs/YdfLUZYE-qk/s320/Surreal-Paintings-by-Joel-Rea-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5622805205601277794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழுக்கு நாவல் என்ற வடிவம் மேற்கிலிருந்து வந்திருந்தாலும் தமிழ் நாவல் வரலாற்றை மேற்கின் நாவல் வரலாற்றோடு இணைத்து பேசுவதும் தமிழ் நாவலின் அழகியலை மேற்கின் நாவல் அழகியலோடு இணைத்து பேசுவதும் சற்று சிரமமான காரியம் என்று தோன்றுகிறது. இதற்கு முக்கியமான காரணமாக நான் கருதுவது நாம் புதுக்கவிதையை போலவே நாவல் என்ற வடிவத்தையும் மேற்கிலிருந்து வாங்கி அதை இங்குள்ள சூழலுக்கு ஏற்றார் போல பிரதிபலித்துக் கொண்டோம். எனவே மேற்கின் நாவல் வரலாற்றை துவக்ககாலம், செவ்வியல் காலம், எதார்த்தபாணி காலம், நவீன காலம், பின் நவீன காலம் என மேற்கின் விமர்சகர்கள் பிரித்துக் கொள்வதைப் போல தமிழ் நாவல்களை பிரித்துப் பார்ப்பது இயலாததாக இருக்கிறது.   &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாயிரத்திற்கு பிறகு எழுதப்படும் தமிழ் நாவல்கள் பெரும்பாலும் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் சொல்லல் முறையிலும் எதார்த்தபாணி நாவல்களாகவே உள்ளன. இவைகளை நாம் நவீனத்துவத்திற்கு பிறகான எதார்த்தவாதம் எனலாம். மேற்கின் இருத்தலியம், அமைப்பியல்வாதம் போன்ற சிந்தனைகள் தமிழுக்கு அறிமுகமான போது இங்கு எதார்த்தவாத நாவல்களுக்கு மாற்றான நவீன நாவல்கள் எழுதப்பட்டன. நகுலனின் நினைவுப்பாதை, சுந்தரராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள், ஆதவனின் இரவுக்கு முன் வருவது மாலை, எம்.வி வெங்கட்ராமின் காதுகள் போன்ற நாவல்கள் உடனடியாக நினைவுக்கு வருவன. தமிழில் நவீனத்துவ அலை ஒன்று வந்து சென்றிருந்தாலும் தமிழ் நாவல்களின் ஆகப்பெரும் சாதனைகள் எல்லாம் எதார்த்தபாணி நாவல்களாலேயே செய்யப்படன என்று துணிந்து கூறலாம். இப்படி நேர்ந்ததிற்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கின்றன. இவைகளில் பிரதானமானது தமிழ் எதார்த்தபாணி நாவல்களின் உள்வாங்கும் பண்பு எனலாம். அதாவது நவீனத்துவத்துக்குப் பிறகான எதார்த்தபாணி நாவல்கள் அதற்கு முன்பு எழுதப்பட்ட எதார்த்தபாணி நாவல்களில் இருந்து சற்று மாறுபட்டதாக இருக்கிறது. நவீனத்துவ நாவலின் சொல்லல் முறை அல்லது உள்ளடக்கம் அல்லது வடிவம் இவற்றில் எதாவது ஒன்றை உட்செறிந்து கொண்டு எதார்த்தவாத பாணியில் எழுதப்படுவதுதாக  இத்தகைய நாவல்கள் உள்ளன. இதற்கு எவ்வளவோ உதாரணங்கள்  இருந்தாலும்  இந்தக் கட்டுரையின் மையமாக உள்ள ”நீங்கள் நான் மற்றும் மரணம்” எனும் இந்த நாவலையே கூட உதரணமாக கூற முடியும். நம் காலத்தில் நடக்கும் இந்த நாவலில் மகாபாரத திரெளபதியும், பாரதியை காதலித்த கண்ணம்மாவும், ஒளவையும் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். முந்தைய எதார்த்தபாணி நாவல்களில் கதையின் களம், காலம் மீறிய வெளியில் கதாபாத்திரங்கள் வருவது சாத்தியமற்றது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் நான் மற்றும் மரணம் எனும் இந்த நாவல் தென்மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நம் சமகாலத்தில் நிகழ்வதாக சித்தரிக்கப்படுகிறது. பாலமுருகன், பாரிஜாதம், துரைசிங்கம், கோமதி என்ற நான்கு கதைமாந்தர்களும் பத்துக்கும் மேற்பட்ட துணைபாத்திரங்களுமாக விரியும் கதையில் விதி ஒரு அரூப பாத்திரமாக அனைவரையும் இயக்கும் ஒரு மையவிசையாக இருக்கிறது. இந்த நாவலின் ஓரிடத்தில் விதி நம் அனைவரையும் ஒரு நாயைப் போல் பின் தொடர்கிறது என்று ஒரு வரி வருகிறது. இதுவே இந்நாவலின் மையப்படிமம் என்று தோன்றுகிறது.  இந்நாவலின் கதை மாந்தர்கள் அனைவரும் மிகச் சாதரணமானவர்கள் செட்டியாரின் அடகுக்கடையில் கணக்கு எழுதும் பாலமுருகன் சினிமா தியேட்டரில் சைக்கிளுக்கு டோக்கன் போடும் துரைசிங்கம் என விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை முன் வைத்து அவர்களின் வாழ்க்கைக்கு என்ன பொருள் என்ற தத்துவார்த்தமான தேடலை செய்திருக்கிறது இந்நாவல். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நாவலின் மையமான பேசு பொருள்களில் ஒன்றாக பெண்களின் வாழ்வு உள்ளது. இந்நாவல் முழுதும் இவ்வுலகில் உள்ள எல்லா பெண்களுக்குமான பிரதிநிதியாக நின்று திரெளபதி பேசுகிறாள். அவளின் கேள்விகள் ஒவ்வொன்றும் துயரத்தோடும் ஆங்காரத்தோடும் எரிச்சலோடும் வெளிப்படுன்றன. ஆண்களுக்கு இடையே சிக்கி பெண்கள் படும் துயரங்கள். பெண் மனதின் வலிகள் காயங்கள் துல்லியமாக இந்நாவலில் பதிவாகி உள்ளன. தாங்கள் வெறும் உடலாக மட்டுமே பார்க்கப்படும் சமூகத்தில் இயல்பாக தங்களுக்கு உள்ள காமம் மீதான விழைவு, அதனால் ஒரு ஆணை நெருங்கி பெறும் வாதைகள் என காமத்தை விரும்பியும் விரும்பாமலும் விட்டு விடமுடியாமலும் படும் பாடுகள் நாவல் முழுதும் பெரும்பாலான பெண்களால் சொல்லப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;தன் சொந்த மகளையே வண்புணர்ச்சி செய்யும் கோமதியின் தந்தை கருப்பு, அடுத்தவன் மனைவியிடம் உறவு வைத்துக்கொளவதில் எந்தக் குற்றவுணர்ச்சியுமற்ற பாலமுருகன் தன் மனைவியின் கள்ள உறவு குறித்தறிந்தும் ஏதும் செய்யாத துரைசிங்கம் என மூன்று ஆண்கள் இந்நாவலில் வருகிறார்கள். இவர்களை தவிரவும் இளம் விதவையாக வேலைக்கு செல்லும் கோமதியிடம் ஆசைவார்த்தை பேசும் வேல்முருகன் மற்றும்  எண்ணற்ற நபர்கள் என அனைத்து ஆண்களுமே  பெண்ணை வெறும் உடலாக பார்ப்பவர்கள். தங்கள் உடலில் மிருகம் போல் வந்தடையும் காமத்தை வழித்து எறிவதற்காக கூச்சமின்றி எதையும் செய்பவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பாரிஜாதம் பால முருகனோடு கள்ள உறவு வைத்திருக்கிறாள். அவள் கணவன் துரைசிங்கமோ அவர்களின் அந்தரங்க உறவை அறிந்திருந்தும் தன் இயலாமை காரணமாக அவ்வுறவை கண்டு கொள்ளாதிருக்கிறான். நாவலின் துவக்கப் பகுதியில் துரைசிங்கம் பாலமுருகனை கொலை செய்யப் போவதாக கூறினாலும் அவன் அதைச் செய்யவில்லை மாறாக தனக்கு நெருங்கிய குடும்பத்தைச் சேர்ந்த கோமதியை பாலமுருகனுக்கு கட்டி வைப்பதன் மூலம் பாலமுருகன் தன் பிடியை விட்டும் தன் மனைவி பிடியை விட்டும் செல்லாதிருப்பான் என்று கணக்கு போடுபவனாகவே இருக்கிறான். பாரிஜாதம் தன் கணவனுக்கு தெரியும் என்றறிந்தும் பாலமுருகனோடு உறவு வைத்திருக்கிறாள். இது குறித்து அவளிடம் குற்றவுணர்வுகள் ஏதும் இல்லை. இதற்கு நேர் எதிராக  கோமதியோ தன் கணவன் பாலமுருகன் இறந்த பிறகும் அவன் நினைவாகவே வாழ்பவளாக இருக்கிறாள். வேலைக்கு செல்லும் இடத்தில் அவளை ஒருவன் திருமணம் செய்ய முன் வந்த போது கூட அவள் தன் உடலை இறந்த கணவனுக்கு மட்டுமே சொந்தமானது என கருதி அந்தக் காதலை மறுக்கிறாள்.  &lt;br /&gt;&lt;br /&gt;நீ வெறும் உடல் உடல் என பெண்ணிடம் திரும்ப திரும்ப சொல்லப்படும் போது அந்த உடல் மீதான முற்றுரிமையை ஆண் கோரும் போது அவள் மேலும் மூர்க்கமாக தன் உடலை பாதுகாத்துக் கொள்ளவோ அல்லது மேலும் மூர்க்கமாக உடலை துறந்து செல்லவோ முயல்கிறாள். அப்படி செல்லும் போது ஏற்படும் உறவுச் சிக்கல்கள் மனச்சிக்கல்கள் வாழ்வை எப்படி மாற்றுகின்றன  என பாரிஜாதம் X கோமதி என்ற இரு எதிர்வுகள் வழியாக பேசுகிறது இந்நாவல்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரிஜாதம் காமத்தை துய்ப்பதன் வழியாக உடலை துறந்து உடல் குறித்த தன்னுணர்வை துறந்து விடுதலையை அடைய முயல்கிறாள் எனில் கோமதியோ உடலைப் பாதுகாப்பதன் வழியாக கற்பை போற்றி சமூக பொதுபுத்தியின் உன்னதமாக்கல் வழியாக தன் விடுதலையை தேடுபவளாக இருக்கிறாள் என்று சொல்லலாம். மறுபுறம் கோமதியின் தங்கையான பொம்மியோ காமத்தை துறந்து உடலை ஒடுக்கி காரைக்கால் அம்மையாரைப் போல ஆண்டாளை போல sublimation வழியாக தன் விடுதலையை தேடுபவளாக இருக்கிறாள்.&lt;br /&gt;எளிதாக நிகழும் சம்பவங்களுக்குள் எளிய மனிதர்கள் மிக எளிய முறையில் வினையாற்றுகிறார்கள் சம்பவங்கள் மெல்ல முறுகலாக மாறும் போது அனைவரும் ஒரு பொறிக்குள் சிக்கிக் கொண்டதைப் போல தவித்து விடுபட வேண்டும் என்ற படபடப்பில் சிக்கலை மேலும் பெரிதாக்குகிறார்கள். இறுதியில் பெரிய துயரமொன்று நிகழ்ந்து வெறுமை மட்டுமே எஞ்சுகிறது என்ற வழமையான எதார்த்தபாணி நாவலின் நேர்கோட்டு தன்மையில்தான் பயணிக்கிறது இந்நாவலும் என்றாலும் நாவலில் ஆங்காங்கே கேட்கப்படும் தத்துவார்த்தமான கேள்விகளும் நிகழ்த்தப்படும் தத்துவார்தமான உரையாடல்களும் விசைக்கொண்டு கொண்டு இயங்கும் கதையோட்டமும் இந்நாவலுக்கு ஒரு செவ்வியல் நாவலின் அந்தஸ்த்தை கொடுக்கிறது என்றே சொல்ல வேண்டும்.&lt;br /&gt;உதாரணமாக விதியை மையமாக வைத்து கேட்கப்படும் கேள்விகளைச் சொல்லலாம். பாலமுருகன் இறந்ததும் பாரிஜாதம் கேட்டுக் கொள்கிறாள்: அவன் ஏன் என்னை ஸ்நேகித்தான்? அவன் என்னை சந்தித்தது. உறவு கொண்டது. எனக்கு உதவியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் சிக்கியது. எல்லாம் அவன் மரணமடைய வேண்டும் என்பதற்காகத்தானா? என்று.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு சகலமும் மரணத்தை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறதா? மனிதனுக்குள் காமம் இருப்பது மரணித்திற்குதானா? தன் நீட்சியாக ஒரு உயிரை உருவாக்குவதன் மூலம் மரணத்தை நாம் வெல்ல வேண்டும் என்பதற்காக காமம் இருக்கிறதா? அல்லது மரணத்தை நோக்கி அழைத்து செல்லத்தான் அது இருக்கிறதா? &lt;br /&gt;நிறைமாத கர்ப்பிணி ஒருத்தி தன்னை விட இளையவன் ஒருவனுடன் உறவு கொள்வதைப் பார்க்கும் திரெளபதியிடம் அவள் ஆழ்மனம் சொல்கிறது. ஐவருடன் கூடி பிள்ளை பெற வேண்டும் என்பது உன் விதி.. அதை போலவே அவளும் வேறொரு ஆணுடன் கூடி பிள்ளை பெற வேண்டும் என்பது அவளின் விதி அவ்வளவே என. அப்படியானால் தன் கணவன் அல்லாதவனோடு உறவு கொள்ள வேண்டும் என்பதுதான் பாரிஜாதத்தின் விதியா? பாரிஜாதத்தின் விதியால்தான் பாலமுருகனின் விதி நிர்ணயிக்கப்படுகிறாதா? எமனுக்கு காலன் என்றோர் பெயருண்டு எனில் ஒரு நாயைப் போல் நம்மை பின் தொடரும் விதிதான் காலபைரவனோ? காலத்திற்குள் ஒரு பந்தைப் போல் மிதந்து கொண்டிருக்கிறோமா நாம்? காலம் தான் மரணம் என்றால் இங்கு இருப்பது நீங்களும் நானும் மரணம் மட்டும் தானா? என பெருகிக் கொண்டே போகும் எண்ணற்ற கேள்விகளுக்கு சாத்தியமானதாக இருக்கிறது இந்தப் பிரதி. &lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.செந்தில்குமாருக்கு மூன்றாவது நாவல் இது. எந்த தடையுமின்றி மிக சரளமாக கதை சொல்ல வருகிறது இவருக்கு. வாசகனுக்கு எந்த இம்சையும் தராமல் மெளனிக்க வேண்டிய இடத்தில் மெளனித்து அழுந்தச் சொல்ல வேண்டிய இடத்தில் அழுந்தச் சொல்லி வெகு லாவகமாக கதையை நகர்த்திக் கொண்டு போகும் பக்குவமான மொழி வளம். ஒரு தேர்ந்த தூரிகைக்காரனின் கை போல வெகு வேகமாக ஒரு சில சொற்களிலேயே காட்சிகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார். இது எல்லா எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை தகுதிதான் என்றாலும் அதற்குள் தனக்கென ஒரு மொழியை உருவாக்கி கொள்வதென்பது முதிர்ந்த எழுத்தாளனுக்கு மட்டுமே வாய்க்கும். அது எஸ்.செந்தில்குமாருக்கு வாய்த்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சொல்லிச் சொல்லி சொல்லில் மயங்கி சொல்லும் சுகத்துக்காகவே சொல்வதல்ல இவர் மொழி, மேலும் வைரத்தை அறுத்து வைத்தது போன்ற தர்க்கக் கூர்மையுடன் வெளிப்படுவதுமல்ல, மேலும் கட்டற்ற உணர்ச்சியின் அபோதத்தில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவதுமல்ல. மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட பிரிக்கப்படாத தங்கம் போன்று ஒளியும் ஒளியின்மையுமாய் மயங்கித் தெரியும் ஒரு விசித்திர மொழி எஸ்.செந்தில்குமாருடையது. இவரின் எழுத்து மொழியை யாருடனாவது ஒப்பிட முடியுமென்றால் நான் க.நா.சு வுடன் மட்டுமே ஒப்பிடுவேன். க.நா.சு ஒரு தேர்ந்த கை அவர் எழுத்தில் மொழி எனும் குதிரை எந்தச் சண்டித்தனமும் இன்றி சரளமாக ஓடுகிறது. எஸ்.செந்தில்குமார் சில இடங்களில் லகானை தவற விடுகிறார். தடுமாறுகிறார் ஆனால் பயணம் பாதுகாப்பாகவேயிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மொதத்தில் ”நீங்கள் நான் மற்றும் மரணம்” எனும் நாவல் இந்த பதின்மத்தில் வெளிவந்த நாவல்களுள் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நாவலை எழுதியதன் மூலம் நம் நம்பிக்கையை மேலும் அதிமாக்கியிருக்கிறார் எஸ்.செந்தில்குமார். தமிழில் நாவல்கள் தரமானதாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறது. ஆனால் பேரிலக்கியம் என்று சொல்லும் மகத்தான படைப்புகள் எதையாவது நாம் எழுதியிருக்கிறோமா என்றால் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அதற்கு தகுதியான படைப்பாளிகள் இருந்தும் நம் மொழியில் இது நிகழவேயில்லை. நான் அறிவேன் எஸ்.செந்தில்குமார் நிச்சயம் அதை செய்யும் அளவிற்கு தகுதியான எழுத்தாளர்தான். அதற்காக அவர் இன்னமும் மெய்வருத்தம் கொள்ள வேண்டும். விமர்சகன் எப்போதுமே எழுதப்படாத நாவலின் வாசகன் என்று சொல்வார்கள். என்ன செய்ய  கண்களில் கனவு மின்ன விமர்சகன் சொல்கிறான் அதோ அதோ அங்கே என. தொலைவில் தெரிகிறது இலக்கு. வழிகூட தெரியும் அவனுக்கு வண்டி ஓட்டத்தான் தெரியாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-1550950364075060675?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/1550950364075060675/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2011/06/blog-post.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/1550950364075060675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/1550950364075060675'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2011/06/blog-post.html' title='நீர் வழிப்படும் புணை நீங்கள் நான் மற்றும் மரணம்: எஸ்.செந்தில்குமாரின் நாவல் குறித்து'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Z3fB9iaBNUI/Tgg3iykU12I/AAAAAAAAAGs/YdfLUZYE-qk/s72-c/Surreal-Paintings-by-Joel-Rea-1.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-4721516332578877178</id><published>2011-05-20T18:38:00.002+05:30</published><updated>2011-05-20T18:40:28.395+05:30</updated><title type='text'>361° காலண்டிதழை முன் வைத்து</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-nQOUq67LueE/TdZoNlXzUwI/AAAAAAAAAGg/vxOn-QKBliU/s1600/226257_10150179086222645_573037644_6813396_7156317_s.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 101px; height: 130px;" src="http://2.bp.blogspot.com/-nQOUq67LueE/TdZoNlXzUwI/AAAAAAAAAGg/vxOn-QKBliU/s320/226257_10150179086222645_573037644_6813396_7156317_s.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5608784968516064002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழ் அறிவுச் சூழலுக்கு சிற்றிதழ்கள்  செய்துள்ள  பணி குறிப்பிடத்தக்கது. புதிய கருத்தியல்கள், புதிய அழகியல்கள், புதிய தத்துவங்கள், புதிய சமூக-அரசியல் கோட்பாடுகள் போன்றவற்றை துறையார்ந்த ஆர்வலர்களிடம் உருவாக்கி தமிழை வளப்படுத்தும், தமிழ்ச் சூழலை உலக அரங்கிற்கு ஆற்றுப்படுத்தும் முண்ணனிப் படையாக செயல்பட்டு வருபவை சிற்றிதழ்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபமாக தமிழ்ச் சிற்றிதழ் மரபு அதன் சாரமான சில குணங்களை இழந்து வருகிறதோ என்ற ஐயம் எனக்கு உண்டு. இதைத் தமிழின் சென்ற தலைமுறை சிற்றிதழ்காரர்கள் ஒரு புகாராகவே சொல்லி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு இக்கட்டான சூழலிலும் விடாப்பிடியாக போர்குணத்தோடு, அர்பணிப்போடு இதழை தொடர்ந்து நடத்துதல், கொள்கைகளில் நிலைப்பாடுகளில் தீவிரமாக இருத்தல், நண்பர்கள் என்பதால் நிலைப்பாடுகளை கருத்தியல்களை வளைத்துக் கொள்ள தயாராக இல்லாமல் தன் சுயத்தை தக்க வைத்திருத்தல், நட்பு முறிவின் எல்லை வரையிலும் சென்று (சில சமயங்களில் நட்பையே முறித்துக் கொண்டு) கருத்தியல்களை வளர்த்தெடுத்தல், எந்த வகை அதிகார மையங்களோடும் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாதிருத்தல்.. போன்ற சில விழுமியங்கள் சமீபத்தைய சிற்றிதழ்காரகளிடம் குறைவாக உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனநிலையை உருவாக்கியதில் இடைநிலை இதழ்களின் பங்கு முக்கியமானது. 90களுக்குப்பிறகான தமிழ் வாசக சூழலில் ஏற்பட்ட மாற்றங்களை அவதானித்து உருவான இவ்வகை இதழ்கள் தீவிர இலக்கிய வாசிப்பை பொதுவாசக வெளிக்கு எடுத்துச் சென்றன. இது தமிழ் சிற்றிதழ் சூழலை ஒரளவு ஜனரஞ்சகப்படுத்தியது. இதன் மறுபக்கமாக தமிழ்ச் சிற்றிதழின் உண்மையான பண்பு நலன்கள் என்னென்ன என்று தெரியாத ஒரு புதிய தலைமுறை உருவாகியது.  அப்படி உருவாகி வந்த அந்த இளம் தலைமுறையை இடைநிலை இதழ்கள் தங்கள் குறுகிய அரசியல் செயல்திட்டங்களுக்காக பகடையாக பயன்படுத்த துவங்கின.   அதிகார மையங்களை நோக்கி நகர்வது, தங்களையே ஒரு சிறிய அதிகார மையமாக கட்டமைத்துக் கொள்வது, சூழலில் இயங்கும் எல்லோரையும் தங்கள் அரசியலுக்கான நண்பன் அல்லது பகைவன் என்ற இருமைகளில் அடக்கி ஒன்று அவனை தன் செயல்பாடுகளுக்கு உடந்தையாக்குவது அல்லது அவனை இல்லாதொழிப்பது, புதிய கருத்தியல்கள் ,அழகியல்கள், சிந்தனைகள் போன்ற எதையும் சூழலுக்குள் கொண்டுவராதிருப்பது போன்ற செயல்பாடுகள் வழியாக நடுநிலை இதழ்கள் இந்த இளம் தலைமுறை சிற்றிதழ்காரனை கட்டுபடுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் சிற்றிதழ்காரன் என்பவன் ஏதேனும் ஒருவகையில் படைப்பாளியாகவும் இருப்பதால் அவனும் சாவகாசமாக நடுநிலை இதழ்கள் உருவாக்கிய இந்த குறுகல் மனோபாவம் உடையவனாகவே தன்னையும் அறியாமல் உருவாகி விடுகிறான். தன் சக படைப்பாளிகளின் படைப்பின் மேல் எந்த வித விமர்சனமும் இல்லாதிருப்பது, அதிகார மையங்களை பூச்செறிந்தே வாழ்வது, தமிழ் இடைநிலை இதழ் அல்லது சிற்றிதழ் சூழலைத் தாண்டி உலக இலக்கிய வாசிப்போ புதிய அழகியல்களுக்கான தேடலோ இல்லாமல் மந்தைதனமான கருத்தியல்களை கொண்டிருப்பது. இடைநிலை இதழ்கள் உருவாக்கி வைத்திருக்கும் மந்தைதனத்தை கடந்து செயல்படாத அளவிற்கு மோசமாக அரசியல் நீக்கம் பெற்றிருப்பது போன்றவற்றை குறிப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான சூழலில் நாம் இடை நிலை இதழ்களுக்கு முன்பான சிற்றிதழ்களின் சமூக செயல்பாடுகள் குறித்தும் அந்த காலத்தைய சிற்றிதழ்களின் பண்புகள் குறித்தும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. இப்போது நமக்கு தேவை அர்பணிப்பும் போர்குணமும் சுயமரியாதையும் நிறைந்த சிற்றிதழ்களே.. கூடவே அப்படி இயங்கி வரும் சிற்றிதழ்களுக்கு  மட்டுமே முன்னுரிமை கொடுத்து நாம் படைப்புகளை அனுப்ப வேண்டும் என்ற எண்ணமும் படைப்பாளிகளுக்கு வேண்டும்.    சிற்றிதழை ஒரு இயக்கமாக முன்னெடுத்து செல்ல நமக்கு வேண்டியதெல்லாம் இதுவே.&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர்கள் நரன் மற்றும் நிலாரசிகன் இருவரும் இணைந்து 361 என்ற சிற்றிதழை கொண்டு வந்திருக்கிறார்கள்.. அழகான வடிவமைப்பு, அழகான ஓவியங்கள், குறிப்பிடத்தக்க படைப்புகள் என இதழ் நிறைவாக உள்ளது. இவ்வளவு அழகான வடிவமைப்பும் செறிவான உள்ளடகமும் உள்ள பத்திரிக்கையில் 52 பக்கங்கள் என்பது மிகவும் குறைவோ என்று தோன்கிறது. குறைந்தது 100 பக்கங்களாவது கொண்டுவாருங்கள் நண்பர்களே. வாய்ப்பிருந்தால் தலையங்கம் எழுதலாம் அது இதழின் நிலைபாடுகளை புரிந்து கொள்ள உதவும். மேலும் வெறும் இலக்கியம் என்று இல்லாமல் அரசியல், பண்பாடு, தத்துவம் போன்ற துறைசார் விஷயங்களையும் இணைக்கலாம். குறைந்தபட்சம் ஓவியம், இசை,சினிமா, நாடகம் என வேறு கலைத்துறை சார்ந்த விஷயங்களையாவது இணைத்துக் கொள்ளுங்கள் என கேட்கத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இதழில் எனக்கு மிகவும் பிடித்ததென  நான் மனோஜின் சிறுகதையைச் சொல்வேன் (யாரவர்?) சிறந்த சிறுகதை. சொல்லல் முறையில் ஒருசில கிளிஷேவான விஷயங்கள் இருந்த போதும்  அந்தக் கதையின் உக்கிரம் சகலத்தையும் அடித்துச் சென்று விடுகிறது..  சபரிநாதனின்  கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. (சமீபமாக எனக்கு மிக நெருக்கமான கவிஞராக அவரை நான் உணர்கிறேன்). மற்றபடி பெரும்பாலான கவிதைகள் (என் கவிதை உட்பட) சிக்காகோ ஜீன்ஸ் வகையறாதான். ஆர்.அபிலாஷ் கவிதையை நன்றாக மொழி பெயர்த்திருக்கிறார் அந்த கவிதைதான் எனக்கு சுகிக்கவில்லை. ஜி.குப்புசாமி மொழி பெயர்த்த உருது சிறுகதை நன்றாக உள்ளது.  நேசமித்ரன் கவிதையை வழக்கம் போல் முதல் இரண்டு வரிகள் மட்டுமே படித்து விட்டு ஓடி வந்து விட்டேன். இசை நல்லாதான் கட்டுரை எழுதாறானோ? (எங்கூட சேர்ந்து கவிதையை பற்றி அவனும் காங்கீரீட்ட பேசிப்பழகிட்டான்.. கன்றும் கெட்டது) செல்வபுவியரசன் சிறுகதை அழகாக உள்ளது. அவர் தொடர்ந்து எழுத வேண்டும். அ.முத்துலிங்கம் பசங்க ஏதோ கேக்கறாங்க எதாவது கொடுப்போம் என்று வலது கைக்கு தெரியாமல் இடது கையால் வழங்கியிருக்கிறார். (இந்த மனுஷனை ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் இருவரும் பூ போட்டே கொல்லப்போறாங்க) தேவதச்சன், லீனா மணிமேகலை கவிதைகளை எப்போதும் போல் ரசித்தேன். கணேசகுமாரனின் சிறுகதை நன்றாக உள்ளது. தமிழுக்கு இன்னொரு சிறுகதை எழுத்தாளர் கிடைத்திருக்கிறார். ஓவியங்கள் இதழில் மிக அழகாக உள்ளன தேவையான இடங்களில் அதை இடம் பெறச் செய்த டிசைனர் (அவர் பெயர் மறந்துடுச்சு) கலக்கீட்டீங்க தலைவா..&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இலக்கியச் சூழலுக்கு ஆரோக்கியமான விஷயங்களை கொண்டு வந்த நல்ல சிற்றிதழ்கள் நிறைய உள்ளன.. குறிப்பாக இந்த இடை நிலை இதழின் வருகைக்குப் பிறகும் தங்கள் சுயத்தை தொலைத்து விடாமல் இயங்கிய/இயங்கும் கல்குதிரை, புது எழுத்து,ஆரண்யம், வனம், சிலேட்டு, புதுவிசை, தக்கை, இறக்கை, மணல்வீடு, சுகன், (இன்னும் சில இதழ்கள் விடுபட்டு போயின அது மறதியினால் மட்டுமே) போன்ற குறிப்பிடத்தக்க சிற்றிதழ்களின் வரிசையில் இடம் பிடிப்பதற்கான எல்லா சாத்தியமும் 361 இதழுக்கு உண்டு. அதற்காக நண்பர்கள் இருவரும் இன்னமும் நிறைய உழைக்க வேண்டியதிருக்கும் இன்னமும் நிறைய இழக்க வேண்டியதிருக்கும்..  மெய்வருத்தம் கொள்ளுங்கள் நண்பர்களே.. நமக்கு மீட்சி அதுவே.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;- கல்குதிரைக்கும், புது எழுத்துக்கும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-4721516332578877178?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/4721516332578877178/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2011/05/361.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/4721516332578877178'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/4721516332578877178'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2011/05/361.html' title='361° காலண்டிதழை முன் வைத்து'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-nQOUq67LueE/TdZoNlXzUwI/AAAAAAAAAGg/vxOn-QKBliU/s72-c/226257_10150179086222645_573037644_6813396_7156317_s.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-5423842016288203238</id><published>2011-05-17T19:28:00.001+05:30</published><updated>2011-05-17T19:34:09.646+05:30</updated><title type='text'>ஒரு கவிதை - வான்காவின் காது</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-HCPFgpO5_hc/TdKASu-0q1I/AAAAAAAAAGY/QUrGO4A7qKA/s1600/images.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 182px; height: 276px;" src="http://3.bp.blogspot.com/-HCPFgpO5_hc/TdKASu-0q1I/AAAAAAAAAGY/QUrGO4A7qKA/s320/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5607685545367219026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;    &lt;br /&gt;&lt;br /&gt;வான்கா வரைந்து கொண்டிருக்கிறார்&lt;br /&gt;பேச்சொலிகள் &lt;br /&gt;அவர் காதுகளில் ததும்புகின்றன&lt;br /&gt;&lt;br /&gt;நீதிகளும் சட்டங்களும் பேசிக் கொண்டிருக்கின்றன&lt;br /&gt;வயிறுகளும் ரொட்டிகளும் பேசிக் கொண்டிருக்கின்றன&lt;br /&gt;கலைகளும் தத்துவங்களும் பேசிக் கொண்டிருக்கின்றன&lt;br /&gt;ஆலயங்களும் பிரார்தனைகளும் பேசிக் கொண்டிருக்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;வான்கா வரைந்து கொண்டிருக்கிறார்&lt;br /&gt;பேச்சொலிகள் &lt;br /&gt;அவர் காதுகளில் ததும்புகின்றன&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளும் சாத்தானும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்&lt;br /&gt;விபச்சாரிகள், அதிகாரிகள்&lt;br /&gt;மதபோதகர்கள், திருடர்கள்&lt;br /&gt;வியாபாரிகள், அரசியல்வாதிகள்&lt;br /&gt;வறியவர்கள், பிச்சைக்காரக்கள்&lt;br /&gt;நோயாளிகள், மீட்பர்கள்&lt;br /&gt;யாவரும் யாவரும் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சுககள் கொட்டுகின்றன&lt;br /&gt;வர்ணங்கள் கொட்டுகின்றன&lt;br /&gt;இரத்தம் கொட்டுகிறது&lt;br /&gt;வான்கா வரைந்து கொண்டேயிருக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;• &lt;br /&gt;இரவுகளில் பேச்சொலிகள் &lt;br /&gt;இன்னும் நுட்பமாகின்றன&lt;br /&gt;கிரிக்கெட் பூச்சிகள் பேசிக்கொண்டேயிருக்கின்றன&lt;br /&gt;எலிகள், கரப்புகள்&lt;br /&gt;கொசுக்கள் பேசுகின்றன&lt;br /&gt;&lt;br /&gt;விண்கல் ஒன்று தன் கடைசிச் சொல்லை&lt;br /&gt;அந்தகாரத்தில் கரைக்கிறது&lt;br /&gt;இலைகள் முணுமுணுக்கின்றன&lt;br /&gt;நதியெங்கும் குழம்பிய பேச்சொலிகள்&lt;br /&gt;மிதந்து செல்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;• &lt;br /&gt;&lt;br /&gt;வான்கா பேச்சொலிகளை ஆராய்கிறார்&lt;br /&gt;பேச்சுக்கள் என்பவை&lt;br /&gt;ஒருவர் மற்றவரிடம் கூறிய&lt;br /&gt;எளிய சொற்கள் மட்டுமல்ல&lt;br /&gt;அவைகளுக்கும் உருவம் உண்டு&lt;br /&gt;ஆன்மாவும்  உணர்வுகளும் உண்டு&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சொலிகளும் சண்டையிடுகின்றன&lt;br /&gt;காதல் கொள்கின்றன&lt;br /&gt;எளிய பொறாமைகளால் மனம் பொங்குகின்றன&lt;br /&gt;சிறிதும் பெரிதுமான புகார்களையும் &lt;br /&gt;பெருமிதங்களையும் கொண்டிருக்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லப்பட்ட பேச்சொலிகளைப் போலவே&lt;br /&gt;சொல்லப்படாத பேச்சொலிகளும்&lt;br /&gt;சொல்லற்ற பேச்சொலிகளும் &lt;br /&gt;சொல்லுமை கடந்த பேச்சொலிகளும் உண்டு&lt;br /&gt;&lt;br /&gt;காற்று சொல்லப்பட்ட பேச்சொலிகளை&lt;br /&gt;மட்டுமே உண்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;வான்கா தன் கித்தான்களில் &lt;br /&gt;வர்ண கண்ணாடிகளை வரைந்து காட்டுகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;வான்காவின் ஓவியங்களில்&lt;br /&gt;தன் பிம்பங்களை கண்ட பேச்சொலிகள்&lt;br /&gt;விம்முகின்றன&lt;br /&gt;&lt;br /&gt;விம்மல் மெல்ல பெரும் அழுகுரலாகிறது&lt;br /&gt;வான்கா ஓசைகளை சகிக்கவியலாமல்&lt;br /&gt;ஒரு கத்தியை எடுத்து காதின் மேல் வைக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;இரத்தம் கொட்டுகிறது&lt;br /&gt;வர்ணங்கள் கொட்டுகின்றன&lt;br /&gt;பேச்சுக்கள் கொட்டுகின்றன&lt;br /&gt;வான்கா வரைந்து கொண்டிருக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:  361°  காலண்டிதழ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-5423842016288203238?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/5423842016288203238/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2011/05/blog-post_17.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/5423842016288203238'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/5423842016288203238'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2011/05/blog-post_17.html' title='ஒரு கவிதை - வான்காவின் காது'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-HCPFgpO5_hc/TdKASu-0q1I/AAAAAAAAAGY/QUrGO4A7qKA/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-5775203346801623345</id><published>2011-05-06T13:12:00.000+05:30</published><updated>2011-05-06T13:14:22.034+05:30</updated><title type='text'></title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-fy8fbBe0_YU/TcOmyELqbcI/AAAAAAAAAGQ/R0FF210oJU0/s1600/inv.%2Bfinal.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-fy8fbBe0_YU/TcOmyELqbcI/AAAAAAAAAGQ/R0FF210oJU0/s320/inv.%2Bfinal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5603505740425358786" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-5775203346801623345?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/5775203346801623345/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2011/05/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/5775203346801623345'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/5775203346801623345'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2011/05/blog-post.html' title=''/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-fy8fbBe0_YU/TcOmyELqbcI/AAAAAAAAAGQ/R0FF210oJU0/s72-c/inv.%2Bfinal.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-8771490373782670669</id><published>2011-04-25T18:06:00.001+05:30</published><updated>2011-04-25T18:12:41.551+05:30</updated><title type='text'>ஜெயமோகனின் ”இன்றைய காந்தி” குறித்து</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-HVjzgnk_ErY/TbVsMZnI-yI/AAAAAAAAAGI/SNerb9PmKJA/s1600/12.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 203px; height: 319px;" src="http://1.bp.blogspot.com/-HVjzgnk_ErY/TbVsMZnI-yI/AAAAAAAAAGI/SNerb9PmKJA/s320/12.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5599500671994362658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என் பதினெட்டாவது வயதில் காந்தியின் ’சத்திய சோதனை’ என்ற நூலை வாசித்தேன். அப்போது நான் இடது சாரிகளின் தத்துவ நூட்களை தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்த காலம். சத்திய சோதனையை வாசிக்கும் முன்பே தோழர்களின் நேரடிப் பேச்சின் வழியாகவும் ஒரிரு நூல்களின் வழியாகவும் காந்தி குறித்த எதிர்மறையான சிந்தனைகள் என்னுள் இருந்ததால் நான் சற்று விலகிய மனநிலையோடோ அந்த முதல் நூலின் வாசிப்பைச் செய்தேன். என்னுள் இருந்த எதிர் மனநிலையையும் கடந்து காந்தியின் அந்த நூல் என்னை வசிகரித்தது. அது முதல் தொடர்ந்து காந்தி குறித்தும் காந்தியம் குறித்தும் வாசித்து வருகிறேன்.   &lt;br /&gt;&lt;br /&gt;பாடதிட்டத்திற்கு வெளியே ஒரு மாணவனுக்கு இன்று காந்தி குறித்து வழங்கப்படும் சித்திரம் என்பதென்ன? பேரளவில் அவைகள் காந்திக்கு எதிரானவைகளே. எளிய பாலியல் நகைச்சுவைகளில் துவங்கி தத்துவ செறிவூட்டபட்ட தர்க்க பூர்வமான விவாதங்கள் வரை அவைகள் எண்ணற்று இருக்கின்றன. இந்திய அரசியல் தலைவர்களில் யாருக்காவது காந்தியின் அளவிற்கு வசைகளும் விதந்தோதல்களும் இருக்கிறதா என்றால் ஒப்பீட்டளவில் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. ஒருபுறம் அவர் மகாத்மா என்று உன்னதப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்க; மறுபுறம் அவர் மிக மோசமான மனிதர் என்பதற்கான தரவுகள் தேடிக் கண்டுபிடித்து அடுக்கப்படுகின்றன. ஒரு நடுநிலையான மனம் இருபுறமும் குவிந்து கொண்டே செல்லும் இந்த விவாதங்கள் முழுதையும் படித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் ஆயுளே முடிந்துவிடும் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;நிலைமை இப்படி இருக்கும் போது காந்தியை அறிய என்ன வழி என்று கேட்டால் ஒன்றுதான் சொல்லத் தோன்றுகிறது. காந்தியை மட்டுமல்ல எந்த ஒரு ஆளுமையை அறிவதற்கும் நாம் நமது ஆன்மாவை கொண்டு அதன் ஆன்மாவை உரசிப்பார்ப்பதே முறை என்று தோன்றுகிறது. திறந்த மனதோடு முன் முடிவுகள் ஏதும் இல்லாமல், நம் மனசாட்சிக்கு சரி என தோன்றுவதை அந்த ஆளுமை வரலாற்றின் அந்தத் தருணத்தில் எப்படிக் கையாண்டது என்று பார்ப்பதன் வழியாகவே நாம் அந்த ஆளுமையை மதிப்பிட முடியும். தரவுகளின் எண்ணற்ற தர்க்கச் சட்டகத்திற்குள் சிக்கிக் கொள்ளும் மொழிவளமற்ற ஒரு ஆய்வாளனை விடவும் மனதின் நுண்ணிய உணர்வெழுச்சிகளால் உண்மையின் பக்கங்களை கண்டறிந்தபடியே கட்டற்ற மொழிவளத்தோடு உணர்வுப்பிரவாகமாய் பாய்ந்தோடும் ஒரு எழுத்தாளனாலேயே இந்த வகை அறிதல் முறை நோக்கி நகர முடியும்.  அந்த வகையில் ஜெயமோகனின் “இன்றைய காந்தி” என்ற இந்த நூல் காந்தி குறித்த முக்கியமான நூல்களில் ஒன்றாக இருக்கிறது.   &lt;br /&gt;&lt;br /&gt;சென்ற நூற்றாண்டின் முற்பகுதியையும் அதற்கு முந்தைய நூற்றாண்டையும்  தத்துவங்களின் நூற்றாண்டு என்று சொல்வோமானால் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியையும் இந்த நூற்றாண்டையும் தத்துவச் சரிவுகளின் நூற்றாண்டு அல்லது தத்துவங்கள் மீதான அவநம்பிக்கைகளின் நூற்றாண்டு எனச் சொல்லலாம். உன்னதமான லட்சியங்கள், மிகப்பெரிய கனவுகள், மகத்தான தியாகங்கள் எல்லாம் மண்ணில் சரிந்து விழுந்ததை, விழுவதை கையறு நிலையோடு கவனித்துக் கொண்டிருக்கின்றன இவ்வுலகின் மிகப்பெரிய மூளைகளும் மிகப்பெரிய மனங்களும். இவ்வாறான சூழலில் காந்தியின் இன்றைய தேவை என்ன? காந்தியச் சிந்தனைகளால் நம் சமகால வாழ்வுக்கு உபயோகமாக எதையாவது வழங்க இயலுமா என்பதை இந்நூல் விவாதிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நூல் ஒரு நடுநிலையான வாசகன் மனதில் செய்வதென்ன? ஜெயமோகன் பாரிஸ்டர்.மோகந்தாஸீக்கு வக்கீலாக மாறி அவரின் எல்லா செயல்பாடுகளுக்கும் நியாயம் கற்பிக்கிறாரா என்று கேட்டால். இல்லை என்பேன். நமது அறிவுச்சூழலில் நிலவும் காந்தி குறித்த கருத்துகள் ஒருசில சிந்தனைப் பள்ளிகளால் உருவாக்கப்பட்டவை காங்கிரஸ்காரகளும், அரசு பாடத்திட்டமும் உருவாக்கியவை  இடதுசாரிகள் உருவாக்கியவை,  ஆர்.எஸ்.எஸ்காரர்கள் உருவாக்கியவை. இதைத் தவிர தலித்திய அறிவுஜீவிகளும் நவீன காந்தியர்களும் உருவாக்கியவை. இந்நூல் மேற்கூரிய இந்த சிந்தனைப்பள்ளிகளின் காந்தி குறித்த வழக்கமான வாய்ப்பாடுகளை எல்லாம் வாசக மனதிலிருந்து தகர்க்கிறது. காந்தியை வரலாற்றிற்குள் வைத்து முன் முடிவகளற்று வரலாற்றின் முரணியங்கியல் பார்வையில் காந்தி குறித்த கருத்துகளை முன்வைக்கிறது. &lt;br /&gt;முன்முடிவுகளோடு இந்நூலை அணுகும் ஒரு வாசகன். தான் நிற்கும் புள்ளியை நோக்கி வரலாற்றை வளைத்து வரலாறு தன் வீட்டு வழியாக செல்வதான பாவனையோடு நடந்து கொள்ளும் போது இந்நூல் அதற்கு எதிராக செல்வதாக அதிர்ச்சியடைகிறான்.    &lt;br /&gt;எனில் காந்தி குறித்து இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து கருத்துகளுமே சரியானதா என்று கேட்டால் அதைக் கண்டடைய வேண்டியது அந்த வாசகனின் கடமை என்றே சொல்வேன். ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல இது ஒரு எழுத்தாளரால் எழுதப்பட்ட நூல்.  எவ்வளவு தர்க்கபூர்வமாக சிந்தித்தாலும் ஒரு படைப்பாளியின் மனம் கலைபூர்வமாகவே செயல்படும். மனதின் நுண்ணிய உணர்வெழுச்சிகளின் வழியாக கண்டடையப்படும் தரிசனங்களை நம்பியபடியே முன்னேறும் படைப்பாளி அவரது மன அமைப்பிற்கேற்பவே விஷயங்களை கண்டடைவார். அவ்வாறு செய்யும் போது அவரது இயல்பான மனச்சாய்வின் பாதிப்புகள் அவர் கண்டடைந்த விஷயங்களிலும் இருக்கும். ஒரு நுட்பமான வாசகன் இந்த புள்ளியை மிகக் கவனமாக கடந்து விடுவான். லக்‌ஷ்மி மணிவண்ணன் என்னிடம் இந்த நூலை மிகவும் குறிப்பிட்டு பேசிவிட்டு சொன்னார். “அது முக்கிய நூல். ஆனால் அதில் உள்ள காந்தி ஜெயமோகனின் காந்தி”. இந்த புரிதல் மிக முக்கியம் என்று தோன்றுகிறது. ஒரு வரலாற்று ஆளுமையை புரிய வைக்க ஒரு எழுத்தாளைனைப் போல் வேறு யாராலும் முடியாது. ஆனால் அவனுக்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லைக்கு பிறகு எழுத்தாளன் நின்று விடுகிறான். வாசகன் அந்த ஆளுமையோடு தனியாக உரையாடி உண்மையை நோக்கி நகர வேண்டியதிருக்கிறது.   உதாரணமாக இந்த நூலின் இரண்டாம் பகுதியில் உள்ள கட்டுரைகளைச் சொல்லலாம். சேகுவோரா குறித்தும் அம்பேத்கார் குறித்தும் பெரியாரின் வைக்கம் போராட்டம் குறித்தும் உள்ள கட்டுரைகள் விவாத்திற்குரியவையாக உள்ளன. ”ஒரு கதாசிரியனுக்கு வேண்டுமானால் ஒரே ஒரு கதாநாயகன் மட்டும் தேவைப்படலாம். ஆனால் ஒரு வரலாற்றாசிரியனுக்கு அவ்வாறு இருக்கத் தேவையில்லை” என்ற இராமச்சந்திர குஹாவின் மேற்கோளை அம்பேத்காருக்கு எதிராக காந்திக்கு கோரும் போது மற்றவர்களுக்கு ஏன் கோரக்கூடாது என்று கேட்கத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளைகாரந்தான் இந்தியாவுக்கு சுதந்திரத்தை கொடுத்துட்டு போனான்; காந்தியா வாங்கிக் கொடுத்தார்? அவர் தனியாகவா வாங்கிக் கொடுத்தார்? என்பதில் துவங்கி அவர் தலித்துகளுக்கு என்ன செய்தார்? என்பது வரை கேட்கப்படும் சற்றும் வரலாற்று உணர்வற்ற கேள்விக்களுக்கு மிகுந்த பொறுப்போடும் தார்மீக கோபத்தோடும் நீண்ட விளக்கமான பதில்களை சொல்லியிருக்கிறார் ஜெயமோகன். மேலும் காந்தியின் சமகாலத்தில் இருந்த தலைவர்கள் குறித்தும் அவர்களுக்கிருந்த தத்துவ புரிதல்கள் வரலாற்று புரிதல்கள் குறித்தும் அவர்களின் மன அமைப்பு குறித்தும் அவர்கள் காந்தியை எதிர்கொண்ட போது ஏற்பட்ட சிக்கல்கள் குறித்தும் அவர்கள் விஷயத்தில் காந்தியின் செயல்பாடு குறித்தும் காந்தியின் குரலாக காந்தியின் ஆன்மாவாக நின்று பதில் சொல்லியிருக்கிறார் ஜெயமோகன். &lt;br /&gt;எப்படி காந்தியால் மக்களை ஒன்று திரட்ட முடிந்த்து? எப்படி காந்தி ஒரு மகத்தான தலைவர்? எப்படி அவர் அவரின் காலத்தில் இருந்த எந்த தலைவரை விடவும் மிகச்சிறந்த சிந்தனையாளர்? என நூல் முழுதும் காந்தியின் ஆளுமையை மிகச் சிறப்பாக நிறுவியிருக்கிறார். இதற்கு ஜெயமோகனின் அபாரமான மொழி வளமும், தத்துவ, வரலாற்று அறிவும் மிகவும் உதவியாய் இருந்திருக்கின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆளுமை, அரசியல், தரிசனம் என மூன்று பெரும் பகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ள இந்நூலில் உள்ள 20 கட்டுரைகள் வழியாக காந்தி என்ற வரலாற்று நாயகன் குறித்து உரையாடப்படுகிறது. காந்தியும் காமமும், காந்தியும் சாதியும், காந்தியும் தலித் அரசியலும், காந்தியும் பிற்படுத்தப்பட்டோரும் ஆகிய கட்டுரைகளும் பகுதி மூன்றில் உள்ள கட்டுரைகளும் மிகச்சிறப்பானவை. குறிப்பாக பகுதி மூன்றில் உள்ள காந்தியும் தொழில்நுட்பமும், காந்திய மருத்துவம், காந்திய தேசியம், காந்தியின் கிராம சுயராஜ்யம் போன்ற  கட்டுரைகள் காந்திய உரையாடல்கள் எவ்வாறு நவீன உலகிற்கு தேவையானதாக உள்ளது என்று மிகுந்த அக்கறையோடு பேசுகின்றன. நம் சமகால அரசியல்-பொருளாதார-பண்பாட்டு வாழ்வுக்கு புதிய திறப்புகளை அளிக்க கூடிய சாத்தியமுள்ளவைகளாக உள்ள இந்தக் கட்டுரைகள் ஜெயமோகனை நவீன காந்தியச் சிந்தனையாளர்களில் முக்கியமானவராக ஆக்குகின்றன.  &lt;br /&gt;2000 பிறகு தமிழ் அறிவுச் சூழலில் காந்தி குறித்து சில முக்கியமான நூல்கள் வந்திருக்கின்றன. அ.மார்க்ஸ், பிரேம், ஜெயமோகன் போன்ற வேறுபட்ட சிந்தனை முறை உடையவர்கள் காந்தி குறித்த உரையாடல்களை துவங்கியிருக்கிறார்கள். சற்று கூர்ந்து நோக்கினால் தமிழில் மட்டுமல்ல உலகம் முழுதுமே இன்று காந்தியம் குறித்த உரையாடல்கள் தீவிரமாகியிருப்பதை உணரலாம். இதன் பிண்ணனி என்ன என்பது குறித்தும். இன்றைய சூழலில் காந்தியின் தேவை என்ன என்பது குறித்தும் ஆழமான உரையாடல்கள் நம்மிடையே அவசியமாக இருக்கின்றன. இனியும் காந்தி ஒரு மனுவாதி என்றும் காந்தி ஒரு பாப்புலிச சிந்தனையாளர் என்றும் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை எனத் தோன்றுகிறது.  ஏனெனில் காந்தி என்ற ஆளுமை வெறும் அரசியல் தலைவராக மட்டுமே செயல்பட்டவரல்ல. அரசியல்,  பொருளாதாரம், சூழலியம் போன்ற பல்வேறு துறைகளை நோக்கி நவீன காந்தியம் தன் கிளைகளை பரப்பி ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை செய்து வருகிறது. காந்தியோ மார்க்ஸோ கொள்ள வேண்டியதை கொண்டு தள்ள வேண்டியதை தள்ளியபடியே வரலாறு இயங்கிக் கொண்டிருக்கிறது எனவே காந்தியம் சார்ந்த உரையாடல்களை முன் எடுக்க வேண்டிய தேவை ஒன்று இங்கு உருவாகியிருக்கிறது அதற்கான திறப்பை இந்நூல் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-8771490373782670669?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/8771490373782670669/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2011/04/blog-post_25.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/8771490373782670669'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/8771490373782670669'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2011/04/blog-post_25.html' title='ஜெயமோகனின் ”இன்றைய காந்தி” குறித்து'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-HVjzgnk_ErY/TbVsMZnI-yI/AAAAAAAAAGI/SNerb9PmKJA/s72-c/12.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-2193538119603415957</id><published>2011-04-21T18:26:00.002+05:30</published><updated>2011-04-21T18:31:07.838+05:30</updated><title type='text'>நசீம் ஹிக்மத் கவிதைகள்</title><content type='html'>ஆங்கிலத்தில்: ரிச்சர்டு மெக்கனே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாதாமரம்&lt;/strong&gt;&lt;br /&gt;என் தலை ஒரு மென்பஞ்சு மேகம், உள்ளும் புறமும் நான் கடல்&lt;br /&gt;நானொரு வாதாமரம் இஸ்தான்புல்லின் குல்ஹேன் பூங்காவில் உள்ள&lt;br /&gt;ஒரு வயதான,  கிளைமுறிவு-அடையாளங்களும் தளும்புகளுமுள்ள&lt;br /&gt;                                                           வாதாமரம்&lt;br /&gt;உங்களுக்கோ காவல்துறைக்கோ இது தெரியாது&lt;br /&gt;&lt;br /&gt;குல்ஹேன் பூங்காவில் உள்ள நானொரு வாதாமரம் &lt;br /&gt;என் இலைகள் மின்னுகின்றன நீரில் மீன் என &lt;br /&gt;என் இலைகள் படபடக்கின்றன பட்டுக் கைக்குட்டையென&lt;br /&gt;அதில் ஒன்றைக் கிள்ளி என் அன்பே உன் கண்ணீரைத் துடைத்துக்கொள்&lt;br /&gt;என் இலைகள் என் கைகள், எனக்கு நூறு ஆயிரம் கைகளுண்டு&lt;br /&gt;இஸ்தான்புல்லே உனை நான் தொடுகிறேன் நூறு ஆயிரம் கைகளால்&lt;br /&gt;என் இலைகள் என் கண்கள் அதில் காண்பவைகளை கண்டு நான் அதிர்கிறேன்&lt;br /&gt;நான் உனைக் காண்கிறேன் இஸ்தான் புல்லே ஒரு நூறு ஆயிரம் கண்களால்&lt;br /&gt;என் இலைகள் துடிக்கின்றன, துடிக்கின்றன நூறு ஆயிரம் இதயங்களோடு&lt;br /&gt;&lt;br /&gt;குல்ஹேன் பூங்காவில் உள்ள நானொரு வாதாமரம்&lt;br /&gt;உங்களுக்கோ காவல்துறைக்கோ இது தெரியாது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில்: ராண்டி பிளாஸிங் &amp; முட்லு கோனுக்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என் கவிதை குறித்து&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடம் வெள்ளிப் பூணுள்ள குதிரை கிடையாது&lt;br /&gt;மூதாதையர் வழிச் செல்வம் கிடையாது வாழ&lt;br /&gt;பணக்காரனோ நிலச்சுவாந்தாரோ கிடையாது&lt;br /&gt;ஒரு பானைத் தேன் மட்டுமே உண்டு&lt;br /&gt;நெருப்பைப் போல் சிவந்த&lt;br /&gt;ஒரு பானைத் தேன்&lt;br /&gt;&lt;br /&gt;என் தேனே என் எல்லாமும்&lt;br /&gt;நான் பாதுகாக்கிறேன்&lt;br /&gt;என் செல்வத்தை, என் பெருநிலத்தை&lt;br /&gt;- என் தேன் பானையை-&lt;br /&gt;ஒவ்வொரு நுண் பூச்சிகளிடமிருந்தும்&lt;br /&gt;சகோதரா, பொறு&lt;br /&gt;எப்போது என் பானையில்&lt;br /&gt;தேனை நான் பெறுவேனோ&lt;br /&gt;அப்போது முதல் &lt;br /&gt;தேனிக்கள் வருகின்றன&lt;br /&gt;திம்புக்து நகரிலிருந்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நம்பிக்கைவாத மனிதன்&lt;/strong&gt;&lt;br /&gt;ஒரு குழந்தையாக அவன் ஈக்களின் சிறகுகளை பிய்த்தெரிந்தவன் இல்லை&lt;br /&gt;பூனைகளின் வாலில் டின்களை கட்டிவிட்டதில்லை&lt;br /&gt;அல்லது வண்டுகளை தீப்பெட்டிகளில் அடைத்ததில்லை&lt;br /&gt;அல்லது பூச்சிகளின் மண்புற்றுகளை மிதித்தோடியதில்லை&lt;br /&gt;அவன் வளர்ந்தான்&lt;br /&gt;பிறகு இது அனைத்தும் அவனுக்குச் செய்யப்பட்டது&lt;br /&gt;அவன் இறக்கும் போது நான் அவன் முன் இருந்தேன்&lt;br /&gt;எனக்கொரு கவிதையை வாசி என்றான்&lt;br /&gt;சூரியனைப் பற்றியும் கடலைப் பற்றியும்&lt;br /&gt;அணுசக்தி பற்றியும் செயற்கை கோள்கள் பற்றியும்&lt;br /&gt;மேலும் மானுடத்தின் மகத்துவங்களைப் பற்றியும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உலகின் மிக விநோதமான ஜந்து&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ ஒரு தேளைப் போன்றவன், என் சகோதரனே&lt;br /&gt;ஒரு தேளைப்போல் கோழைத்தனத்தின் &lt;br /&gt;இருளில் வாழ்பவன்&lt;br /&gt;நீ ஒரு குருவியைப் போன்றவன், என் சகோதரனே&lt;br /&gt;எப்போதும் ஒரு குருவியைப் போல் படபடத்து பறந்து விடுபவன்&lt;br /&gt;நீ ஒரு மெளனத்தைப் போன்றவன், என் சகோதரனே&lt;br /&gt;மெளனத்தைப் போல் மூடுண்டவன் உள்ளுரைந்தவன்&lt;br /&gt;நீ நடுங்கிறாய், என் சகோதரனே&lt;br /&gt;விரைந்து உடையும் ஒரு எரிமலையின் வாயைப்போல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றல்ல&lt;br /&gt; ஐந்தல்ல&lt;br /&gt;துரதிர்ஷ்டவசமாக நீ மில்லியன் கணக்கானவனாய் இருக்கிறாய்&lt;br /&gt;நீ ஒரு ஆட்டைப் போன்றவன், என் சகோதரனே&lt;br /&gt;   இடையன் குச்சியை உயர்த்தியதும்&lt;br /&gt;    நீ விரைந்து சென்று மந்தையுடன் இணைகிறாய்&lt;br /&gt;மேலும் ஓடுகிறாய், கிட்டதட்ட பெருமிதமாகவே ஓடுகிறாய், அறுப்பு ஆலைக்கு&lt;br /&gt;நீ இந்த உலகின் மிக விநோதமான ஜந்து&lt;br /&gt;மீனை விடவும் விநோதமான ஜந்து&lt;br /&gt;   நீருக்காக அது கடலைத் தேடுவது இல்லை&lt;br /&gt;இவ்வுலகின் ஒடுக்குமுறைகள் எல்லாம் &lt;br /&gt;   உனக்கு நன்றி அறிவிக்கின்றன&lt;br /&gt;மேலும் நாம் பட்டினி கிடக்கிறோம், சோர்ந்திருக்கிறோம், இரத்தத்தால் &lt;br /&gt;தோய்ந்திருக்கிறோம் எனில்&lt;br /&gt;      அது உன்னுடைய தவறே&lt;br /&gt;நான் இதை சொல்வதற்கு சிரமமாக உள்ளது&lt;br /&gt;ஆனாலும், பெரும்பாலான தவறுகள் என் சகோதரனே, உன்னுடையதே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான் உன்னைக் காதலிக்கிறேன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் உன்னைக் காதலிக்கிறேன்&lt;br /&gt;ரொட்டியை உப்பில் தொட்டு உண்பதைப் போல&lt;br /&gt;நள்ளிரவில், கொதிக்கும் காய்ச்சலில் கண் விழித்தல் போல&lt;br /&gt;குழாயில் வாய் பொருந்த நீர் பருகுதல் போல&lt;br /&gt;அஞ்சல்காரர் தந்த கனமான தபால் ஒன்றை &lt;br /&gt;அது என்னவென தெரியாமல் பிரித்தல் போல&lt;br /&gt;படபடப்புடன், மகிழ்ச்சியுடன், சந்தேகத்துடன்&lt;br /&gt;நான் உன்னைக் காதலிக்கிறேன்&lt;br /&gt;கடல் மேல் முதல் முறை விமானத்தில் பறத்தல் போல&lt;br /&gt;இஸ்தான்புல் மேல் இருள் மெல்லக் கவிகையில்&lt;br /&gt;என்னுள் ஏதோ ஊர்வது போல&lt;br /&gt;நான் உன்னைக் காதலிக்கிறேன்&lt;br /&gt;வாழ்வதன் பொருட்டு கடவுளுக்கு நன்றி சொல்லல் போல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான் உன்நினைவிலேயே இருக்கிறேன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் உன்நினைவிலேயே இருக்கிறேன்&lt;br /&gt;மேலும் என் தாயின் வாசனையை உணர்கிறேன்&lt;br /&gt;என் தாய், எல்லோரை விடவும் மிக அழகிய என் தாய்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னுள் நிகழும் திருவிழாவின் குடைராட்டினத்தில் நீ இருக்கிறாய்&lt;br /&gt;உன் துணிகளை, முடிக்கற்றைகளைச் சுழல விடுகிறாய்&lt;br /&gt;வெகுசில விநாடிகளே உள்ளன உன் முகம் எனக்கு கிடைப்பதற்கும் &lt;br /&gt;இழப்பதற்கும்&lt;br /&gt;&lt;br /&gt;என்ன காரணம், &lt;br /&gt;நான் ஏன் உன்னை நினைவு கொள்கிறேன்,இதயத்தின் ஒரு காயம் என&lt;br /&gt;என்ன காரணம் நீ வெகு தொலைவில் இருக்கும் போதும் உன் குரலைக் &lt;br /&gt;கேட்கிறேன்&lt;br /&gt;மேலும் ஏன் என்னால் உற்சாகமாக இருக்க இயலவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் மண்டியிட்டு உன் கரங்களைப் பார்க்கிறேன்&lt;br /&gt;உன் கரங்களை தொட விரும்புகிறேன்&lt;br /&gt;ஆனால் முடியவில்லை&lt;br /&gt;நீ கண்ணாடிக்கு பின்புறம் இருக்கிறாய்&lt;br /&gt;அன்பே, இந்த நாடகத்தின் மங்கலான வெளிச்சத்தில் &lt;br /&gt;நடித்துக் கொண்டிருக்கும் நான் ஒரு குழம்பிய பார்வையாளன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாழ்வு குறித்து&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வதென்பது நகைப்பிற்குரிய விஷயம் அல்ல:&lt;br /&gt;நீங்கள் மிகவும் தீவிரமாக வாழ வேண்டும்&lt;br /&gt;உதரணமாக ஒரு அணிலைப் போல. &lt;br /&gt;அதாவது, வாழ்வதற்கு மேல், அதைக் கடந்து வேறொன்றையும் தேடாமல்.&lt;br /&gt;அதாவது, வாழ்வது மட்டுமே உங்கள் அனைத்து கடமையாகவும் இருக்க &lt;br /&gt;வேண்டும்.&lt;br /&gt;வாழ்வதென்பது நகைப்பிற்குரிய விஷயம் அல்ல:&lt;br /&gt;நீங்கள் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;மேலும் மேலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தீவிரமாக.&lt;br /&gt;உதரணமாக, உங்கள் கை பின்புறமாக கட்டப்பட்டு,&lt;br /&gt;நீங்கள் சுவற்றில் கட்டப்பட்டிருப்பதைப் போல.&lt;br /&gt;அல்லது ஆய்வுக்கூடத்தில் உங்கள் வெண்ணிற அங்கியுடனும்&lt;br /&gt;பாதுகாப்பு கண்ணாடிகளுடனும் இருப்பதைப் போல.&lt;br /&gt;உங்களால் மக்களுக்காக சாக முடியும்,&lt;br /&gt;நீங்கள் ஒரு போதும் காணதவர்கள் அவர்கள் என்ற போதும்,&lt;br /&gt;உங்களுக்கு தெரியும் வாழ்வது மட்டுமே மிக உண்மையானது, மிக அழகானது &lt;br /&gt;         என்ற போதும்&lt;br /&gt;உங்களால் மக்களுக்காக சாக முடியும் என்பதைப் போல.&lt;br /&gt;அதாவது நீங்கள் வாழ்வதென்பதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள &lt;br /&gt;வேண்டும்&lt;br /&gt;அதாவது உங்கள் எழுபதாவது வயதிலும், உதாரணமாக, நீங்கள் ஒரு ஆலிவ் &lt;br /&gt;மரத்தை நடலாம்&lt;br /&gt;அது உங்கள் குழந்தைகளுக்காக இருந்தாலும் இல்லாவிட்டலும். &lt;br /&gt;ஆனால் நீங்கள் அஞ்சுகிறீர்கள் மரணத்திற்கு, நீங்கள் அதை&lt;br /&gt;நம்பாவிட்டாலும் கூட.&lt;br /&gt;ஏனெனில் வாழ்வதென்பது அதை விடவும் மேலானது எனவே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நீயே என் குடிபோதை&lt;/strong&gt;&lt;br /&gt;நீயே என் குடிபோதை...&lt;br /&gt;நான் குடியை விடப்போவதில்லை, அது என்னால் முடியும் என்றாலும்&lt;br /&gt;எனக்கு வேறு எதுவும் வேண்டாம்&lt;br /&gt;எனக்கு தலைவலிக்கிறது, என் மூட்டுகள் எங்கும் தழும்புகளாக உள்ளன&lt;br /&gt;என்னை சுற்றிலும் சகதியாக உள்ளது&lt;br /&gt;நான் போராடிக்கொண்டிருக்கிறேன் உன் அசிரத்தையான ஒளியை நோக்கி வர&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-2193538119603415957?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/2193538119603415957/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2011/04/blog-post_21.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/2193538119603415957'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/2193538119603415957'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2011/04/blog-post_21.html' title='நசீம் ஹிக்மத் கவிதைகள்'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-5206671615564431294</id><published>2011-04-08T18:13:00.003+05:30</published><updated>2011-04-08T18:27:53.845+05:30</updated><title type='text'>நூல் விமர்சனம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-wjx5blxEk4s/TZ8GJFiqWmI/AAAAAAAAAGA/G_yUJ1Gxtlc/s1600/images.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 314px; height: 160px;" src="http://4.bp.blogspot.com/-wjx5blxEk4s/TZ8GJFiqWmI/AAAAAAAAAGA/G_yUJ1Gxtlc/s320/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593196015393593954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நரனின் மீபொருண்மைவெளி -  உப்பு நீர் முதலையுடன் ஒரு பயணம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாருமற்ற இடத்தில்&lt;br /&gt;என்ன நடக்கிறது&lt;br /&gt;எல்லாம் &lt;br /&gt;&lt;br /&gt;நகுலனின் இந்த நவீன மீபொருண்மை கவிதையோடு இக்கட்டுரை துவங்குவது பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன். மீபொருண்மை என்ற சொல் இந்தக் கட்டுரையில் Metaphysics என்ற சொல்லின் தமிழாக்கமாக பயன்படுத்தப்படுகிறது. கிரேக்கத்தில் மெட்டா எனும் சொல்லிற்கு beyond (கடந்த) என்று பொருள் மெட்டாபிசிக்ஸ் என்பதை பெளதீகம் கடந்தது என்று தோராயமாக மொழிபெயர்க்கலாம்.  வரலாற்றின் துவக்க காலம் முதலே மீபொருண்மையியல் என்ற துறையானது தத்துவத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கிறது. பொருட்கள் அல்லது விஷயங்கள் எனப்படும் மேட்டர்ஸ் என்பதின் இருத்தல் குறித்தும் அதன் காரணங்கள் குறித்தும் அதன் பெளதீக இருப்பைப் கடந்து ஆராயும் ஒரு துறையாக மீபொருண்மையியல் இருந்து வருகிறது. நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் மானுட சேதன அறிவுக்கு அப்பாற்பட்டவகையில் சிக்கலானதாகவும், நுட்பமானதாகவும், ஒன்றோடொன்று தொடர்பற்றும் வேறு ஏதேனும் ஒருவகையில் தொடர்புடையதாகவும் இருப்பதாக மனித மனம் எண்ணிய கணத்தில் மீபொருண்மை பார்வைக்கான தேவை தோன்றியிருக்க கூடும். &lt;br /&gt;&lt;br /&gt;எந்தப் பண்பாடாக இருந்தாலும் மீபொருண்மை கோட்பாட்டுகான தரிசனம் என்பது ஒரு படிமமாகவே தோன்றியிருப்பதற்கான சாத்தியம் அதிகம். அப்படிப் பார்க்கும் போது மீபொருண்மை என்ற கோட்பாட்டு உருவாக்கத்திற்கான கருவியாக கவிதையே எப்போதும் இருந்து வந்திருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;மேலே குறிப்பிட்ட நகுலனின் கவிதையை நவீன மீபொருண்மை கவிதை என்று நாம் சொல்வோமாயின் செவ்வியல் மீபொருண்மை என ஏதாவது உள்ளதா என்கிற கேள்வி இயல்பாக எழுகிறது.  மீபொருண்மை பார்வை என்பது எந்த ஒரு குறிப்பிட்ட பண்பாட்டிற்கு மட்டும் சொந்தமானதல்ல. அது வரலாற்றின் துவக்ககாலம் முதலே எல்லா பண்பாட்டிலும் இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் மனம் முழுதாய் சமைந்த எந்த ஒரு தொல்குடி சமூகத்திலும் மீபொருண்மை பார்வைதான் அதன் அடிப்படையான பண்பாட்டுக் கட்டமைப்புகளையே உருவாக்கியிருக்க கூடும் என்றே நாம் சொல்லிவிட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கில் மிகத்துவக்கத்தில் மீபொருண்மையியல் பேரளவில் தனிமனித ஆன்மீக சாதனைகளோடு தொடர்புடையதாகவே இருந்தது. அதனால் அது தவிர்க்கவியலாமல் மதங்களோடும் கடவுள்சார் கோட்பாடுகளோடும் அடையாளம் காணப்பட்டது. 17ம் நூற்றாண்டில் நவீனத்துவத்தின் வருகையும் தத்துவதளத்தில் தெகார்தேவின் கார்டீசிய ஆய்வுமுறைகளின் ஆதிக்கமும் மீபொருண்மையியலின் மீது கடுமையான தாக்குதலை ஏற்படுத்தின. பொருள் கடந்த உண்மை என்ற கோட்பாட்டை ஏற்க மறுத்த பொருள் முதல்வாதிகளின் நூற்றாண்டாக அது இருந்தது. தொடர்ந்து வந்த 18, 19ம் நூற்றாண்டுகளில் பொருள்முதல்வாதிகளின் ஆதிக்கம் நீடித்த போதும்  மீபொருண்மை சிந்தனைகள் மெல்ல நகர்ந்து புறவயமான அறிவியல் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு தம்மை வளர்த்துக் கொண்டன. ஹெகல், காண்ட், நீட்ஷே போன்ற சிந்தனையாளர்கள் இதைச் செய்தார்கள். இதைத் தொடர்ந்து பிரபஞ்ச மையம் என்ற இடத்தில் கடவுளை நீக்கி விட்டு இயற்கையை முன்வைத்த எமர்சன், தோரோ போன்ற சிந்தனையாளர்கள் வந்தார்கள். இதன் பிறகு உருவாகி வந்த மீபொருண்மை சிந்தனைகளையே நாம் நவீன மீபொருண்மையியல் என்கிறோம். நவீன மீபொருண்மை சிந்தனைக்கு மதத்தோடும் கடவுளோடும் நேரடியான உறவு என எதுவுமில்லை. அது விஞ்ஞான நிருபணவாதத்தை ஒரு எல்லை வரை ஏற்றுக் கொண்டு இறுதி உண்மையை நோக்கி நகர்கிற ஒரு பயணமாக உள்ளது. நவீன மீபொருண்மையியலாளர் என்கிற பதத்திற்கு ஜே.கிருஷ்ணமூர்த்தி எனக்கு உடனடியாக தோன்றுகிற ஒரு சிறந்த உதாரணம். &lt;br /&gt;&lt;br /&gt;ஹெய்டெக்கர் ”மீபொருண்மை ஒரு அறிமுகம்” என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார். அவரும் அவரின் சகாவான சார்த்தரும் இருத்தலியம் பேசியவர்கள் அதாவது இருத்தலின் அபத்தம் பேசியவர்கள் என்ற வகையில் மீபொருண்மை சிந்தனைகளுக்கு எதிரானவர்கள் என்பது போல தோன்றினாலும் ஒருவகையில் அவர்கள் மீபொருண்மையியலை வேறு ஒரு கோணத்தில் அணுகியவர்கள் என்றே கொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;சசூரின் நவீன மொழியியல் கோட்பாடுகள் அமைப்பியலாக வளர்ந்த போது அது மீபொருண்மையியலை கடுமையாக நிராகரித்தது. தொடர்ந்து வந்த பின் நவீனத்துவ சிந்தனைகளும் மீபொருண்மையியலை ஒரு பெருங்கதையாடல் எத்தனம் என நிராகரிக்கிறது. ஆனால் வேறொரு புறம் பகுத்தறிவின் வன்முறையைப் பேசும் அது வேறு பல நுட்பமான மற்றும் சிக்கலான மீபொருண்மை தளங்களை உருவாக்கிய படியே முன்னேறுகிறது என்ற வகையில் நவீன மீபொருண்மையியலின் சமகால சவால்களையும் சாத்தியங்களையும் வாசகர்களின் கணிப்புக்கு விட்டு விட்டு தமிழ் நவீன மீபொருண்மை கவிதைகளைப் பற்றி சுருக்கமாக பார்க்கலாம். அது நவீன கவிதைப் பரப்பில் நரனின் இடம் எது என நாம் கணிக்க உதவக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நவீன கவிதை இயக்கத்தில் மீபொருண்மைக் கூறுகள் கொண்ட கவிதைகள் அதன் துவக்க முதலே எழுதப்பட்டு வருகின்றன. தமிழின் முதல் புதுக்கவிதையாளரான பிச்சமூர்த்தி கவிதைகளிலேயே மீபொருண்மை கூறுகள் நிறைய உண்டு. தமிழில் இவ்வகைக் கவிதை எழுதுபவர்களை புறவயமான ஆன்மீகத் தேட்டம் கொண்ட மீப்பொருண்மையாளர்கள் மற்றும் ஆன்மீக தேட்டம் உள் ஒடுங்கிய நிலையில் எழுதும் மீபொருண்மையாளர்கள் என இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். புறவயமான ஆன்மீகத் தேட்டம் கொண்ட மீபொருண்மையாளர்கள்  என பிச்சமூர்த்தி, பிரமிள், தேவதேவன் போன்றவர்களை கொள்வோம் எனில் உள் ஒடுங்கிய ஆன்மீகத் தேட்டம் கொண்ட மீபொருண்மையாளர்கள்  என சி.மணி, நகுலன், ஆனந்த், தேவதச்சன், எம்.யுவன், குவளைக்கண்ணன் போன்றவர்களைச் சொல்லலாம். இந்தப் பட்டியல்களில் ஒருசில விடுபடல்களும் இருக்கக்கூடும். மேலும் இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கவிஞர்களை மீபொருண்மையியல் என்ற தர்க்க எல்லைக்குள் மட்டுமே அடக்கிவிட முடியாது என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். இவர்கள் அனைவரும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மீபொருண்மையியல் கவிதைகளும் எழுதியிருக்கிறார்கள் என்றே நான் குறிப்பிட விரும்புகிறேன். விமர்சகன் எப்போதும் தன் தர்கத்தின் வழியாக கறாரான சில எல்லைகளை வகுத்துக்கொள்ளவே விரும்புகிறான். கவிஞனோ எந்தக் கறாரான எல்லைகளையும் கடந்து செல்லவே எப்போதும் விரும்புகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நாம் விவாதிக்க வேண்டியது இந்த இரண்டு பிரிவுகளுக்குமான வித்யாசம் என்ன என்பதையே. நான் ஏற்கனவே குறிப்பிட்ட படி நவீன காலத்திற்கு பின் கார்டீசிய ஆய்வின் அடிப்படையிலான அறிவியல் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு மீபொருண்மையியல் செயல்படத் துவங்கிய போது மீபொருண்மையாளர்களிடம் இந்த இரண்டு வகையான போக்கு இயக்கம் பெறத்துவங்கியது. அதாவது இவர்களில் சிலர் மரபான இறையியல் அல்லது மெய்யியல் சிந்தனைகளை கைவிடாமலேயே நவீன அறிவியலின் சிந்தனைப் போக்குகளை உள்வாங்கியபடி அதை வளர்த்தெடுக்கத் தலைபட்டார்கள். பிரமிளின் e=mc2, மற்றும் தெற்கு வாசல் போன்ற கவிதைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். முதல்  கவிதையான e=mc2,  சக்தி என்ற கருத்தாக்கம் தொடர்பான மரபான சிந்தனைப் போக்கும் ஐன்ஸ்டைனின் சக்தி கோட்பாடும் சந்திக்க நேர்ந்த புள்ளியைப் பேசுகிறது எனில் காலம் மற்றும் வெளி குறித்த நவீன அறிவியலின் உரையாடல்களும் காலபைரவன் என்கிற மரபான தொன்மமும் சந்தித்தித்துக் கொள்ளும் புள்ளியில் இரண்டாவது கவிதை நிகழ்கிறது.      &lt;br /&gt;&lt;br /&gt;இதன் மறுபுறம் நவீன அறிவியல் கோட்பாடுகள் கொடுத்த பிரக்ஞை வழியாக நிகழச் சாத்தியமான மீபொருண்மைக் கவிதைகளை மட்டும் எழுதியவர்கள் என இரண்டாம் வகை மீபொருண்மையாளர்களை கொள்ளலாம். இதற்கு உதரணமாக எம்.யுவனின் வேறொரு காலம் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளையும் ஆனந்தின் கவிதைகளையும் சொல்லலாம். காலம் மற்றும் வெளி தொடர்பான மீபொருண்மை உரையாடல்களை ஒரு மழலையின் வியப்புணர்வோடும் புரியாதவனின் திகைப்போடும் பேசுகின்றன இவ்விருவரின் இவ்வகைக் கவிதைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விரு வகை மீபொருண்மையாளர்களில் நரன் எவ்வகையைச் சேர்ந்தவர் என்பதை நாம் பொறுத்திருந்துதான் நோக்க வேண்டும். அவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான இந்நூலில் இவ்விருவகைக்குமே சாத்தியமான கவிதைகள் நிறைந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் வகைக்கு ஒரு கவிதையை நோக்குவோம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பேரமைதி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேரமைதி&lt;br /&gt;நீரினடியில் ஓராயிரம் மீன்கள்&lt;br /&gt;நீந்திக் கொண்டுதானிருக்கின்றன&lt;br /&gt;காலை மாற்றி வைக்கும் கொக்கால்&lt;br /&gt;குளம் முழுக்கச் சலனம்&lt;br /&gt;வட்ட வட்டமாய்&lt;br /&gt;விரிந்து...விரிந்து..&lt;br /&gt;குறுகி...குறுகி..&lt;br /&gt;நீரினடியில் அலகை நுழைத்து&lt;br /&gt;ஓராயிரம் மீனில் ஒரு மீனைக் கவ்விப் பிடிக்கையில்&lt;br /&gt;துள்ளும் மீன்&lt;br /&gt;துள்ளி..துள்ளி&lt;br /&gt;நீரின் மேல் தெரியும் அகன்ற வெளியை&lt;br /&gt;சலனப்படுத்துகிறது&lt;br /&gt;விரிந்த &lt;br /&gt;சலனத்திற்கும்&lt;br /&gt;குறுகி நீண்ட பேரமைதிக்குமிடையே&lt;br /&gt;ஒரு&lt;br /&gt;&lt;br /&gt; தா   ம  ரைத்&lt;br /&gt;  &lt;br /&gt;த&lt;br /&gt;  ண்&lt;br /&gt;  டு&lt;br /&gt;&lt;br /&gt;புத்தனிடமும் ஒரு குளமிருந்தது&lt;br /&gt;அதற்குள் ஓராயிரம் மீன்கள்&lt;br /&gt;  ஓராயிரம் தாமரைகள்&lt;br /&gt;  ஓராயிரம் கொக்குகள்&lt;br /&gt;&lt;br /&gt;நீரற்ற நீரால்&lt;br /&gt;தசையற்ற மீன்களால்&lt;br /&gt;இதழ்களற்ற தாமரைகளால்&lt;br /&gt;பறந்துவிட்ட கொக்குகளால்&lt;br /&gt;நிரம்பியிருக்கிறது அக்குளம்&lt;br /&gt;எப்போதும் வற்றாக் குளமது&lt;br /&gt;அதில் சலனிக்காத நீர்&lt;br /&gt;&lt;br /&gt;அது அவன் பேரமைதியில் மட்டுமே சலனிக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;புத்தனின் முகத்தைப் பார்&lt;br /&gt;எவ்வளவு சலனம்&lt;br /&gt;எவ்வளாவு பேரமைதி&lt;br /&gt;இரண்டும் ஒன்றெனப் போல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நரனின் மிகச் சிறந்த கவிதைகளில் இது ஒன்று. குளம் சலனமற்றதைப் போல் இருக்கிறது. ஆனால் ஆழத்தில் எண்ணற்ற சலனங்களால் ஆனது. மேற்புரம் ஒரு சலனம் நிகழ்கிறது. ஒரு கொக்கு அலகு நுழைத்து ஆழத்து சலனத்திலிருந்து ஒரு மீனைப் பிடித்து வெளியில் தலை உயர்த்தியதும் சலனமற்று இருந்த வெளி சலம்புகிறது. வெளி சலனத்தில் விரிய குளத்தின் மேற்புரம் அமைத்திக்கு குறுகி நீள்கிறது இரண்டிற்குமிடையே ஒரு தாமரைத் தண்டு.  இதுவரை கவித்துமாக இருந்த கவிதை சட்டென சரிந்து தத்துவத்திற்குள் நுழைகிறது. கவிஞனின் தர்க்க மனம் விழித்துக் கொள்கிறது. கவிஞன் கவித்துவ பித்து நிலையிலிருந்து இறங்கி அடைந்த தரிசனத்தின் உணர்வை அறிவாக பேச முனைகிறான். புத்தனிடமும் ஒரு குளமிருந்தது அதற்குள் ஓராயிரம் மீன்கள் என துவங்கி சலனமும் பேரமைதியும் ஒன்றென்று சொல்லி முடிகிறது கவிதை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தெற்கு வாசல் என்ற பிரமிளின் கவிதையோடு இதனை நோக்குவோம். இரண்டுக்கும் கவித்துவ நிலையில் உள்ள ஒற்றுமை என்ன இரண்டுமே தத்துவார்த்த நிலையில் உள்ள கருத்தினை கவித்துவ போதத்தில் சொல்ல முயல்பவை. ஆனால் நரனின் கவிதையில் உள்ளதைப் போல பிரமிளின் கவிதையில் உணர்ச்சி சரிவு நிகழவில்லை. பிரமிளின் கவிதையில் தத்துவார்த்த போதம் கவித்துவ எழுச்சிக்கு ஒரு க்ரியா விசையாக இருந்து மொத்தக் கவிதையையும் உணர்வு பூர்வமாக செய்திருக்கிறது. நரனின் கவிதையில் கவித்துவ எழுச்சி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பின் சட்டென வடிந்து போத மனத்திற்கு வந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி நரனின் இன்னொரு கவிதையைப் பார்ப்போம் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலை&lt;br /&gt;&lt;br /&gt;உப்புநீர் முதலையொன்று துயில்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;தலையை நீருக்குள்ளும்&lt;br /&gt;உடலை வெண்மணலிலும்&lt;br /&gt;கிடத்தியபடி&lt;br /&gt;அப்போது அதனுடல்&lt;br /&gt;கார்காலத்தில் தொடங்கி&lt;br /&gt;கோடைகாலம்வரை நீண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நீரில் பாதியும் மணலில் பாதியுமாய் கிடக்கும் முதலை ஒன்றைக் காட்சிப்படுத்தி வெண்மணலை கோடைகாலமாகவும் நீரைக் கார்காலமாகவும் உருவகித்துக் காட்டும் இக்கவிதை இடப்பொருண்மையை காலப்பொருண்மையாக பேசிக் காட்டுவதன் வழியாக காலவெளித் தொடர்மம் (Time and space Continioum) என்கிற கருத்து நிலையை வியப்புணர்வோடு சுட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;மேற்கூறிய இரண்டு கவிதைகளும் இரண்டு வகையானவை. முதல் கவிதையில் உணர்ச்சி போதத்தில் சற்று சரிவிருந்தாலும் அதில் ஒரு ஆன்மீகத் தேட்டம் உள்ளது. மேலும் நீர் என்பது நினைவிலி மனதின் குறியீடு என நவீன உளவியல் சொல்கிறது என்ற புரிதலோடு வேறொரு வாசிப்பு செய்யும் போது இந்தக் கவிதையின் அர்த்த தளம் இன்னும் விரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது கவிதையில் நவீன இயற்பியலின் எல்லைக்குள் மட்டுமே இயங்கச் சாத்தியமான கவித்துவம் செயல்படுகிறது. இப்படியாக நரன் இருவகை மீபொருண்மைக் கவிதைகளும் எழுதச் சாத்தியமானவராக இருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் நரனும் வெறும் மீபொருண்மைக் கவிதைகள் மட்டுமே எழுதபவர் அல்ல என்பதற்கு இந்தத் தொகுப்பிலேயே நிறைய உதாரணங்கள் உள்ளன. “உங்கள் பெயரென்ன?” , “உலகை அணுகுதல்” போன்ற எளிய மொழி விளையாட்டுகளால் ஆன கவிதைகளையும் எழுதுபவராக நரன் இருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வைஸ்ராய் மார்ஷலின் டைரிக்குறிப்பு என்ற கவிதை இந்தத் தொகுப்பில் உள்ள நல்ல கவிதைகளில் ஒன்று. அவரது மீபொருண்மையியல் கவிதைகளைத் தவிர அவர் இதைப் போன்ற கவிதைகளின் வழியாகத்தான் மிகச்சிறந்த கவிதைகளை நோக்கிச் செல்ல முடியும் என்று தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நரன் கவிதைகளின் மையம் என்ன? அல்லது நரன் என்ன மாதிரியான கவிதைகளை எழுத தொடர்ந்து வசீகரிக்கப்படுகிறார் அல்லது என்ன மாதிரியான விஷயங்கள் நரனுக்கு கவிதை எழுதுவதற்கான மன உந்தத்தை தருகிறது என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;நரன் கவிதைகள் மற்றும் கவிதை எழுதும் முறை போன்றவற்றை தீர்மானிப்பவையாக ஐந்து காரணிகள் அமைந்திருப்பதாக நான் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. காலம் மற்றும் வெளி தொடர்பான சிந்தனைகள் அதாவது காலப் பொருண்மையில் நிகழும் ஒரு விஷயத்தை இடப் பொருண்மையில் சொல்லிப் பார்ப்பது இடப்பொருண்மையில் நிகழும் விஷயத்தைக் காலப்பொருண்மையில் சொல்லிப்பார்ப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;2. நிலக் காட்சிகள், பொருட்கள் மற்றும் அதன் தோற்றம் போன்றவை குறித்து கண நேரம் மனதில் நிகழும் ஒரு குழப்பம், ஒரு தோற்ற மயக்கம் போன்ற உணர்வுகள்&lt;br /&gt;&lt;br /&gt;3. சொற்களைக் கொண்டு நிகழ்த்திக் காட்டச் சாத்தியமான எளிய மொழி விளையாட்டுகள். உதாரணமாக இருள் எனும் கவிதை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. எண்கள்,சொற்கள் போன்ற தர்க்க சாத்தியம் நிறைய உள்ள விஷயங்களை ஒன்றின் தர்க்க சாத்தியத்தை வேறொரு தர்க்க சாத்தியமாக மாற்றி விட்டும் கலைத்துப் போட்டும் நிகழ்த்தும் தர்க்க மாயங்கள் (Logico – Magic)&lt;br /&gt;&lt;br /&gt;5. கவிதைக்கான மையப்படிமம் அல்லது கருத்தை ஒரு கவிதையாக விரித்து எழுதுதல்.&lt;br /&gt;தமிழ் நவீன கவிதை வெளியில் நரனின் சிறப்பு இடம் என்ன என்று  பார்க்கலாம்.  சமகால தமிழ் நவீன கவிதை என்பதன் மையவிசையாக எது உள்ளது அதனோடு நரனுக்கு உள்ள உறவென்ன என்று பார்த்தால் அந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கக்கூடும். சமகால நவீனக் கவிதையின் மைய விசையாக உள்ள எதனோடும் நரனின் கவிதைகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. குறிப்பாக நரனின் கவிதைகளில் அரசியல் நிலைபாடுகள் இல்லை. பெரும்பாலான நவீன கவிஞர்களின் கவிதைகளில் உள்ளதைப் போன்று இருத்தலின் சிக்கல்களால் ஆன அழுமூஞ்சித்தனம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நடன ஒத்திகை என்ற கவிதையும் ஷீ வின் வார்த்தைகளை கா பேசினாள் என்ற கவிதையும் வழக்கமான நரன் பாணியிலான கவிதைகள்தான் என்ற போதும் அந்தக் கவிதைகள் இயங்குகிற வாழ்வியல் வெளி அதை வழக்கமான நரன் கவிதைகள் என்ற தளத்திலிருந்து வேறொரு அனுபவதளத்திற்கு எடுத்துச் செல்கின்றன. நரனின் கவிதைகளில் எங்காவது கொஞ்சம் ஒரு விசும்பல் இருக்குமானால் அது இந்தக் கவிதைகளில் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி நம் சூழலில் உள்ள கொந்தளிப்பான வெக்கைக் கவிதைகளுக்கு நடுவே நரனின் கவிதைகள் மிகுந்த குளிர்ச்சித் தன்மை நிரம்பியவையாக உள்ளன. சுகுமாரன் பின் அட்டையில் சொல்லியிருப்பதைப் போல கபடமற்ற மழலை வியப்பையும் குளிர்ச்சியான புன்னகை ததும்பும் தியான மனநிலையையும் தமிழ் கவிதை வெளியின் மேல் பரப்பியபடி இருக்கின்றன நரனின் கவிதைகள். இதனாலேயே நரனை நான் நம் சமகாலச் சூழலின் புறநடைக் கவிஞன் என்று கூறுவேன். உண்மையில் இதுவே அவரது பலம் மற்றும் பலவீனம் இரண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-5206671615564431294?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/5206671615564431294/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2011/04/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/5206671615564431294'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/5206671615564431294'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2011/04/blog-post.html' title='நூல் விமர்சனம்'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-wjx5blxEk4s/TZ8GJFiqWmI/AAAAAAAAAGA/G_yUJ1Gxtlc/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-99864322079263291</id><published>2010-12-05T12:37:00.002+05:30</published><updated>2010-12-05T12:40:28.376+05:30</updated><title type='text'>நசீம் ஹிக்மத் கவிதைகள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/TPs6zLfWS6I/AAAAAAAAAFw/K7KsJkyIPTE/s1600/nhikmet.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 144px; height: 163px;" src="http://4.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/TPs6zLfWS6I/AAAAAAAAAFw/K7KsJkyIPTE/s320/nhikmet.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5547092016968911778" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வாதாமரம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் தலை ஒரு மென்பஞ்சு மேகம், உள்ளும் புறமும் நான் கடல்&lt;br /&gt;நானொரு வாதாமரம் இஸ்தான்புல்லின் குல்ஹேன் பூங்காவில் உள்ள&lt;br /&gt;ஒரு வயதான,  கிளைமுறிவு-அடையாளங்களும் தளும்புகளுமுள்ள&lt;br /&gt;                                        வாதாமரம்&lt;br /&gt;உங்களுக்கோ காவல்துறைக்கோ இது தெரியாது&lt;br /&gt;&lt;br /&gt;குல்ஹேன் பூங்காவில் உள்ள நானொரு வாதாமரம் &lt;br /&gt;என் இலைகள் மின்னுகின்றன நீரில் மீன் என &lt;br /&gt;என் இலைகள் படபடக்கின்றன பட்டுக் கைக்குட்டையென&lt;br /&gt;அதில் ஒன்றைக் கிள்ளி என் அன்பே உன் கண்ணீரைத் துடைத்துக்கொள்&lt;br /&gt;என் இலைகள் என் கைகள், எனக்கு நூறு ஆயிரம் கைகளுண்டு&lt;br /&gt;இஸ்தான்புல்லே உனை நான் தொடுகிறேன் நூறு ஆயிரம் கைகளால்&lt;br /&gt;என் இலைகள் என் கண்கள் அதில் காண்பவைகளை கண்டு நான் அதிர்கிறேன்&lt;br /&gt;நான் உனைக் காண்கிறேன் இஸ்தான் புல்லே ஒரு நூறு ஆயிரம் கண்களால்&lt;br /&gt;என் இலைகள் துடிக்கின்றன, துடிக்கின்றன நூறு ஆயிரம் இதயங்களோடு&lt;br /&gt;&lt;br /&gt;குல்ஹேன் பூங்காவில் உள்ள நானொரு வாதாமரம்&lt;br /&gt;உங்களுக்கோ காவல்துறைக்கோ இது தெரியாது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;என் கவிதை குறித்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடம் வெள்ளிப் பூணுள்ள குதிரை கிடையாது&lt;br /&gt;மூதாதையர் வழிச் செல்வம் கிடையாது வாழ&lt;br /&gt;பணக்காரனோ நிலச்சுவாந்தாரோ கிடையாது&lt;br /&gt;ஒரு பானைத் தேன் மட்டுமே உண்டு&lt;br /&gt;நெருப்பைப் போல் சிவந்த&lt;br /&gt;ஒரு பானைத் தேன்&lt;br /&gt;&lt;br /&gt;என் தேனே என் எல்லாமும்&lt;br /&gt;நான் பாதுகாக்கிறேன்&lt;br /&gt;என் செல்வத்தை, என் பெருநிலத்தை&lt;br /&gt;-என் தேன் பானையை-&lt;br /&gt;ஒவ்வொரு நுண் பூச்சிகளிடமிருந்தும்&lt;br /&gt;சகோதரா, பொறு&lt;br /&gt;எப்போது என் பானையில்&lt;br /&gt;தேனை நான் பெறுவேனோ&lt;br /&gt;அப்போது முதல் &lt;br /&gt;தேனிக்கள் வருகின்றன&lt;br /&gt;திம்புக்து நகரிலிருந்து&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-99864322079263291?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/99864322079263291/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/12/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/99864322079263291'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/99864322079263291'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/12/blog-post.html' title='நசீம் ஹிக்மத் கவிதைகள்'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/TPs6zLfWS6I/AAAAAAAAAFw/K7KsJkyIPTE/s72-c/nhikmet.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-8276067151493660585</id><published>2010-08-24T12:14:00.002+05:30</published><updated>2010-08-24T12:19:41.300+05:30</updated><title type='text'>ஒரு நுண்கதை - கனவாட்டம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/THNrXonkDrI/AAAAAAAAAFo/BPdiFUkdsDA/s1600/phpThumb_generated_thumbnailjpg.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 131px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/THNrXonkDrI/AAAAAAAAAFo/BPdiFUkdsDA/s320/phpThumb_generated_thumbnailjpg.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5508864822988770994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஃப்யூனஸ் அயர்ஸில் மந்திரவாதி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் மார்டின் சார்க்கோ. ஒருநாள் அவனைக் காண போர்ஹே சென்றிருந்தார். அவன் வீட்டில் தங்கிய போது அன்றிரவு அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில்,  ஒரு வீட்டின் கண்ணாடி சுவற்றின் அருகே அமர்ந்தவாறு புலியைப் பற்றிய கதை ஒன்றை எழுதிக் கொண்டிருந்தார். வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது.  எதேச்சையாய் தெருவைப் பார்த்த போது யாருமற்ற வீதிகளில் புலி ஒன்று தனித்து அலைந்து கொண்டிருந்தது. புலியை தொடர்ந்தவாறு கருப்பு நிற உடையணிந்து அந்த மந்திரவாதி சென்று கொண்டிருந்தான். அவனின் கையில் உள்ள மந்திர கோலின் ஒவ்வொரு சொடுக்குக்கும் புலியின் உடலில் இருந்த ஒவ்வொரு வரியாக மறைந்து கொண்டு வந்தது. புலியின் கடைசி வரியும் மறைந்து அது வெறும் மஞ்சள் நிறத்திற்கு மாறிய போது மழை நின்று வெயில் காய்ந்து கொடிருந்தது. புலி அந்த வெயிலின் மஞ்சளுக்குள் நுழைந்து மறைந்தது. அந்த மந்திரவாதி தன் கருப்பு உடையுடன் இரவை நோக்கி நடக்கத் துவங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஃப்யூனஸ் அயர்ஸில் மந்திரவாதி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் மார்டின் சார்க்கோ. ஒரு நாள் அவனைக் காண போர்ஹே சென்றிருந்தார். அவன் வீட்டில் அவர் தங்கிய போது அன்றிரவு சார்க்கோவுக்கு ஒரு கனவு வந்தது. நகரெங்கும் மழை கொட்டிக் கொண்டிருந்த போது அவனுக்கு வெயில் தேவைப்பட்டது. வெயிலின் மஞ்சளும் சீற்றமும் தீட்சண்யமும் எங்கு கிடைக்கும் என அவன் வீதியெங்கும் அலைந்து கொண்டிருந்த போது ஒரு வீட்டின் கண்ணாடி சுவருக்கு உட்புறம் போர்ஹே அமர்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார். வெயில் அவரின் பேனா நுனியில் அமர்ந்திருப்பதைக் கண்டு அந்தப் புலியை வீதிக்குள் வரவைத்தான். &lt;br /&gt;&lt;br /&gt;ஃப்யூனஸ் அயர்ஸின் கனவில் புலி ஒன்று வாழ்ந்து வந்தது. கனவின் விசித்திர புதிர்பாதைகளுக்குள் அலைந்த கொண்டிருந்த அது. வாழ்விலிருந்து கனவுக்குள் நுழைவதைப் போல். கனவிலிருந்து வாழ்வுக்குள் நுழைவதைப் பற்றி கனவு கண்டு கொண்டிருந்தது. அப்போது போர்ஹே கண்ணாடி சுவருக்குள் அமர்ந்து எதையே எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டது. அவர் ஒரு புலியின் கனவைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தார். அவர் எழுதிய புலியின் கனவில் அது வாழ்விலிருந்து கனவுக்கு வருவதை பற்றி ஏங்கிக் கொண்டிருந்தது. வாழ்விலிருந்து கனவுக்கு வரும் வழியில் போர்ஹே அதை அனுப்பி வைத்தார். அந்த வழியாகவே இந்தப் புலி கனவிலிருந்து வாழ்வுக்கு வந்தது. போர்ஹேவின் பேனா நுனியில் ஒரு வெயிலென ஒளிர்ந்து கொண்டிருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-8276067151493660585?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/8276067151493660585/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/08/blog-post_24.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/8276067151493660585'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/8276067151493660585'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/08/blog-post_24.html' title='ஒரு நுண்கதை - கனவாட்டம்'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/THNrXonkDrI/AAAAAAAAAFo/BPdiFUkdsDA/s72-c/phpThumb_generated_thumbnailjpg.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-512048602733853972</id><published>2010-08-16T11:09:00.000+05:30</published><updated>2010-08-16T11:11:14.737+05:30</updated><title type='text'>என் பழைய கவிதைகள் இரண்டு</title><content type='html'>கடல் விளையாட்டு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெடுநேரம் &lt;br /&gt;கடலில் விளையாடிய சிறுவன் &lt;br /&gt;கடலை வீட்டிற்கு கொண்டு செல்ல விரும்பினான்&lt;br /&gt;பிளாஸ்டிக்காகிதத்தில் &lt;br /&gt;கொஞ்சம் அடைத்துக் கொண்டு போனான்&lt;br /&gt;அலையும் &lt;br /&gt;ஒசையும் &lt;br /&gt;மணலும்&lt;br /&gt;நீலமும் &lt;br /&gt;விகாசிப்புமற்ற &lt;br /&gt;அந்தக்கடலில் &lt;br /&gt;உப்பு மட்டும் &lt;br /&gt;இருந்தது &lt;br /&gt;வெறும் &lt;br /&gt;உப்பு மட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேடன்&lt;br /&gt;&lt;br /&gt;கவை நிறைய அம்பிருந்தும் ஏதொன்றையும் பிரயோகிக்க மனம் கூசும் வேடனொருவன் அம்பினும் கூரிய பசி பாய்ந்து உழன்ற போது செம்பூத்துப் பறவை ஒன்றை பார்த்தான்.பகலெல்லாம் அவன் விரட்டிய போதும் கிளை கிளையாய்த் தாவி மறைந்த அதனை தேடியவாறு காடெங்கும் அலைந்தான். வெறுங்காற்றில் புரண்டு படுக்க சரசரக்கும் சருகுகளுக்கிடையே தாழம்பூ வாசம் மிளிர நெளியும் நச்சரவங்கள் நிறைந்த மூங்கில் காட்டுக்குள் அவன் நுழைந்த போது வானில் முழுநிலவு வந்துவிட்டிருந்தது. அவன் விரட்டிய அப்பறவை நிலவில் அமர்ந்திருக்க கண்டவன் தன் வில்லில் நாணேற்றி ஒரு அம்பை எய்து விட்டு காத்திருக்கத் துவங்கினான். அந்த அம்போ அவனை ஏமாற்றிவிட்டு வெளியின் திக்கற்றத் திக்கில் பறந்து கொண்டிருக்கிறது ஒரு செம்பூத்தே போலும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-512048602733853972?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/512048602733853972/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/512048602733853972'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/512048602733853972'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/08/blog-post.html' title='என் பழைய கவிதைகள் இரண்டு'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-5936982186454798847</id><published>2010-06-26T20:00:00.002+05:30</published><updated>2010-06-26T20:06:14.357+05:30</updated><title type='text'>செம்மொழி மாநாடு எங்கள் மையநோக்குக் கவிதை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/TCYQJaemjRI/AAAAAAAAAFY/M_sRNKPPiYs/s1600/DSC02839.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/TCYQJaemjRI/AAAAAAAAAFY/M_sRNKPPiYs/s320/DSC02839.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5487090949910072594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்தக் கவிதை என் தோழர். ந.முத்து அவர்களால் எழுதப்பட்டது. செம்மொழி மாநாட்டில் கோவை முழுவதும் வலம் வந்த இது எங்களது மைய நோக்குக் கவிதை.  ’இருக்கு’ என்ற தொகுப்பின் மூலம் தமிழகம் முழுவதும் கவனம் பெற்ற ந.முத்துவின் இன்னொருக் கவிதை வெடி இது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அயல்நாட்டு &lt;br /&gt;ஆய்வரங்க அறிஞருக்கும்              &lt;br /&gt;வாழும் வள்ளுவருக்கும் &lt;br /&gt;அவர் தம் வம்சத்தாருக்கும்&lt;br /&gt;ஐந்து நட்சத்திர விடுதி&lt;br /&gt;&lt;br /&gt;நாடாளும் அமைச்சருக்கும்&lt;br /&gt;அவர்தம் அள்ளைகளுக்கும்&lt;br /&gt;நான்கு நட்சத்திர விடுதி&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியப் புள்ளிகளுக்கும்&lt;br /&gt;சிக்கியப் புள்ளிகளுக்கும்&lt;br /&gt;மூன்று நட்சத்திர விடுதி&lt;br /&gt;&lt;br /&gt;இளிக்கும் வாயுடைய&lt;br /&gt;இந் நாட்டு தமிழ் அறிஞருக்கு&lt;br /&gt;இரண்டு நட்சத்திர விடுதி&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சிப்பணி அலுவலர்களுக்கு&lt;br /&gt;அடுத்த நட்சத்திர விடுதி&lt;br /&gt;&lt;br /&gt;காவல் பணியாளர்களுக்கோ&lt;br /&gt;கல்வி நிலையமே விடுதி&lt;br /&gt;&lt;br /&gt;உதட்டிலும் உள்ளத்திலும்&lt;br /&gt;தமிழைத் தவிர வேறு அறியா&lt;br /&gt;உடன் பிறப்புக்கு&lt;br /&gt;ஆயிரம் நட்சத்திரங்கள் பூத்திருக்கும்&lt;br /&gt;வீதியே விடுதி&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்&lt;br /&gt;&lt;br /&gt;                   - ந.முத்து&lt;br /&gt;                   கோவை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-5936982186454798847?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/5936982186454798847/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/06/blog-post_26.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/5936982186454798847'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/5936982186454798847'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/06/blog-post_26.html' title='செம்மொழி மாநாடு எங்கள் மையநோக்குக் கவிதை'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/TCYQJaemjRI/AAAAAAAAAFY/M_sRNKPPiYs/s72-c/DSC02839.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-2751991120895994762</id><published>2010-06-18T21:14:00.002+05:30</published><updated>2010-06-18T21:17:16.496+05:30</updated><title type='text'>மூன்று இந்தியக் கவிதைகள்</title><content type='html'>இந்த மூன்று கவிதைகளும் The Oxford Anthology of Modern Indian Poetry எனும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இந்நூலின் தொகுப்பாசிரியர்கள்: வினய் தார்வட்கெர் மற்றும் ஏ.கே.ராமானுஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அமல்கண்டி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமல்கண்டி என் நண்பன்&lt;br /&gt;பள்ளியில் என்னுடன் படித்தவன்&lt;br /&gt;அடிக்கடி பள்ளிக்குத் தாமதமாகவே வருவான்&lt;br /&gt;பாடங்களைக் கவனிக்க மாட்டான்&lt;br /&gt;வினைச்சொற்களை வேறுபடுத்தச் சொன்ன போது&lt;br /&gt;அவன் ஜன்னலுக்கு வெளியே வெறித்துக்கொண்டிருந்தான்&lt;br /&gt;புதிர்மையோடு&lt;br /&gt;&lt;br /&gt;எங்களில் சிலர் ஆசிரியராக விரும்பினோம்&lt;br /&gt;சிலர் மருத்துவராக, சிலர் வழக்குரைஞராக &lt;br /&gt;அமல்கண்டி இது எதுவாகவும் விரும்பவில்லை&lt;br /&gt;அவன் சூரிய ஒளியாக விரும்பினான்&lt;br /&gt;மழை நின்றதும்  &lt;br /&gt;பின்மதியங்களில்&lt;br /&gt;காகங்களின் அழைப்பு கேட்டு&lt;br /&gt;நாவல்மர இலைகளில் ஒரு புன்னகை போல்&lt;br /&gt;வருகிற சூரிய ஒளியாக&lt;br /&gt;&lt;br /&gt;எங்களில் சிலர் ஆசிரியரானோம்&lt;br /&gt;சிலர் மருத்துவராக, சிலர் வழக்குரைஞராக&lt;br /&gt;அமல்கண்டி சூரிய ஒளியாகவில்லை&lt;br /&gt;மோசமான வெளிச்சமுள்ள அறையில்&lt;br /&gt;ஒரு அச்சுக் கோர்ப்பவனாக ஆனான்&lt;br /&gt;அடிக்கடி என்னைச் சந்திப்பான்&lt;br /&gt;ஒரு தேநீர் முடியும் வரை&lt;br /&gt;அதையும் இதையும் பேசுவான்&lt;br /&gt;பிறகு கிளம்பிச் செல்வான்&lt;br /&gt;நான் கதவருகே நின்று கவனிப்பேன் &lt;br /&gt;அவன் சென்று மறைவதை&lt;br /&gt;&lt;br /&gt;எங்களில் ஆசிரியராக விரும்பிய ஒருவன்&lt;br /&gt;மருத்துவரானான்&lt;br /&gt;மருத்துவராக விரும்பியவன் வழக்குரைஞரானான்&lt;br /&gt;அது ஒன்றும் அவ்வளவு மோசமில்லை&lt;br /&gt;அனைவருமே &lt;br /&gt;ஏறத்தாழ நாங்கள் விரும்பியபடி ஆனோம் &lt;br /&gt;அமல்கண்டியைத் தவிர&lt;br /&gt;அவன் எப்போதும் சூரிய ஒளியையே நினைத்துக்கொண்டிருந்தான்&lt;br /&gt;அவன் சூரிய ஒளியாக விரும்பினான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;- வங்காள மூலம் : நிரேந்திரநாத் சக்ரவர்த்தி&lt;br /&gt;ஆங்கிலத்தில்: சுஜித் முகர்ஜி &amp; மீனாட்சி முகர்ஜி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பரம்பரை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் பாட்டி ஒரு பைத்தியம்&lt;br /&gt;அவளின் உன்மத்தம் மரணத்திற்குக் கனிந்தது&lt;br /&gt;என் மாமா ஒரு கஞ்சன்&lt;br /&gt;அவளை முறியறையில்* அடைத்து&lt;br /&gt;வைக்கோலால் மூடி வைத்தான்&lt;br /&gt;என் பாட்டி உலர்ந்து வெடித்தாள்&lt;br /&gt;அவள் விதைகள் ஜன்னலுக்கு வெளியேத் தெறித்தன&lt;br /&gt;சூரியன் வந்தது, மழையும் வந்தது&lt;br /&gt;ஒரு விதை மரமானது&lt;br /&gt;அதன் காமம் என்னுள் துளைத்தது&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை எழுத உனக்குச் சொல்லித்தரட்டுமா&lt;br /&gt;தங்கப்பற்களுடைய குரங்குகளைப் பற்றி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   &lt;span style="font-weight:bold;"&gt;மலையாள மூலம்: கே.சச்சிதானந்தன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;குறிப்பு: *முறியறை : ஸ்டோர் ரூம், பயனற்ற பொருட்களை வைத்திருக்கும் அறை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அரிப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு முதல் அரிப்பு&lt;br /&gt;வலது முழங்கால் மடிப்பில் வந்தது&lt;br /&gt;கடைசி அரிப்பு&lt;br /&gt;இடது முழங்காலுக்குக் கீழே&lt;br /&gt;நாம் சொறிவோமா மக்களே&lt;br /&gt;நாம் சொறிவோமா&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் சொல்கிறார்கள்&lt;br /&gt;இந்த உலகம் &lt;br /&gt;ஒரு புனித அரிப்பில் வந்ததென&lt;br /&gt;சிலர் சொல்கிறார்கள்&lt;br /&gt;கடவுளே &lt;br /&gt;ஒரு அரிப்பில் பிறந்தவரென&lt;br /&gt;வாதாடிகள்&lt;br /&gt;எனக்கு தெரிந்ததெல்லாம்&lt;br /&gt;அரிப்பை&lt;br /&gt;சொறிதலின் சுகம் மட்டுமே&lt;br /&gt;மற்றதெல்லாம் &lt;br /&gt;வெறும் கற்பனைகளாகவே இருக்கக்கூடும்&lt;br /&gt;இது மட்டுமே நித்யமான உண்மை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;- மலையாள மூலம் – கே.அய்யப்ப பணிக்கர்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-2751991120895994762?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/2751991120895994762/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/06/blog-post_18.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/2751991120895994762'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/2751991120895994762'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/06/blog-post_18.html' title='மூன்று இந்தியக் கவிதைகள்'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-4002021630293372450</id><published>2010-06-14T10:19:00.002+05:30</published><updated>2010-06-14T10:23:19.263+05:30</updated><title type='text'>3 கவிதைகள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/TBW1kvHgyuI/AAAAAAAAAFQ/KrInU8ohoaU/s1600/Image_4_for_Cottesloe_Beach_sculptures_in_Perth_Australia_gallery_33287216.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 207px;" src="http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/TBW1kvHgyuI/AAAAAAAAAFQ/KrInU8ohoaU/s320/Image_4_for_Cottesloe_Beach_sculptures_in_Perth_Australia_gallery_33287216.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5482487764121340642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இன்றை எதிர்கொள்ளல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுகல் ஒன்றை எடுத்து&lt;br /&gt;பூமியை வீசுவது போல் வீசினேன்&lt;br /&gt;இன்றிலிருந்து இன்றின்மைக்கு&lt;br /&gt;அது &lt;br /&gt;இன்றில் விழுந்து&lt;br /&gt;இன்றில் உருண்டு&lt;br /&gt;இன்றில் நின்றது&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு உருண்டும்&lt;br /&gt;ஒரு இலையும் உதிர்ந்திருக்கவில்லை இன்றிலிருந்து&lt;br /&gt;&lt;br /&gt;கோபத்தில் கத்தினேன்&lt;br /&gt;இன்றைவிட்டு வெளியேறுமாறு&lt;br /&gt;ஓங்கிமிதித்தேன்&lt;br /&gt;நெருஞ்சியாய் குத்தியது இன்றின் சூரியன்&lt;br /&gt;விரல் தொட்டு கடலை இழுத்து வந்து&lt;br /&gt;ஊருக்குள் விட்டேன்&lt;br /&gt;வெற்றுப்பள்ளங்களுக்கே பாய்ந்து கொண்டது மீண்டும்&lt;br /&gt;சிறு துளைகளில் ஒளிந்திருக்கும் &lt;br /&gt;இருளை ஊதி ஊதி&lt;br /&gt;இரவை கொண்டு வந்தேன்&lt;br /&gt;நிமிர்வதற்குள் விடிந்து கொண்டது இன்று&lt;br /&gt;&lt;br /&gt;மனம் சோர்ந்து &lt;br /&gt;அதனிடம் மன்றாடத் துவங்கினேன்&lt;br /&gt;கதியற்று&lt;br /&gt;அதன் பெருங்கைகளில் ஒப்புத்தந்தேன் எனை&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் முடிந்தது&lt;br /&gt;என் பிணத்தை பொறுக்கிக் கொண்டேன்&lt;br /&gt;கல்லை தூக்கி எறிந்தேன்&lt;br /&gt;விடுதலை பெற்று எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒரு இரவல் காதல் கதை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வானத்தில் ஒரு நிலவுண்டு&lt;br /&gt;பாதிநாள் வளர்வதும்&lt;br /&gt;பாதிநாள் தேய்வதுமாய்&lt;br /&gt;தன் பைத்தியத்தில்&lt;br /&gt;அலைகளுக்குப் &lt;br /&gt;பேய் பிடிக்கச் செய்யும்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊரில் ஒரு அக்கக்கா குருவியுண்டு&lt;br /&gt;அக்கூ அக்கூ எனக் கதறி&lt;br /&gt;காகத்தையும் உறவு சொல்லி&lt;br /&gt;ஏமாந்து புலம்பும்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலத்தில் ஒரு மரம் உண்டு&lt;br /&gt;கூடடையும் பறவைக்கு&lt;br /&gt;தன் சதை பறித்து கனி திரட்டி&lt;br /&gt;யாருமற்ற நேரத்தில்&lt;br /&gt;பாம்பிற்கு முட்டை தரும்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நெஞ்சில் ஒரு முத்தமுண்டு&lt;br /&gt;நிகழ்ந்த கணத்தின் பரவசத்தில்&lt;br /&gt;மலர்ந்த பூக்களின் நறுமணத்தை&lt;br /&gt;கனவில் எண்ணி&lt;br /&gt;நீருலர்ந்த உதடுகளை வருடிக்கொள்ளும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒரு இரவல் காதல் கதை 2&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்&lt;br /&gt;காப்பிக் செடிகளின் வசந்தங்களை&lt;br /&gt;நீ எடுத்துக் கொள்வாய் எனில்&lt;br /&gt;காதலற்ற வாழ்வில்&lt;br /&gt;கருத்திடுவேன்&lt;br /&gt;உள்நாவில் ஒரு கசப்பென&lt;br /&gt;&lt;br /&gt;என்&lt;br /&gt;பாலைகளின் மழையை&lt;br /&gt;நீ எடுத்துக்கொள்வாய் எனில்&lt;br /&gt;செல்வமற்ற வாழ்வில்&lt;br /&gt;இளைத்திடுவேன்&lt;br /&gt;நிலமெங்கும் நகரும்&lt;br /&gt;உடலற்ற வேனல்குளமென&lt;br /&gt;&lt;br /&gt;என்&lt;br /&gt;காளான்களின் வெயிலை &lt;br /&gt;நீ எடுத்துக்கொள்வாய் எனில்&lt;br /&gt;சுகமற்ற வாழ்வில்&lt;br /&gt;வெளுத்திருப்பேன்&lt;br /&gt;அற்ப காலத்தில் வெளியேறுபவன் என&lt;br /&gt;&lt;br /&gt;என்&lt;br /&gt;ஊமத்தைகளின் பனியை &lt;br /&gt;நீ எடுத்துக்கொள்வாய் எனில்&lt;br /&gt;அறிவற்ற வாழ்வில்&lt;br /&gt;நஞ்சியிருப்பேன்&lt;br /&gt;மலங்காடுகளில் தன்னந்தனியனென&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-4002021630293372450?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/4002021630293372450/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/06/3.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/4002021630293372450'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/4002021630293372450'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/06/3.html' title='3 கவிதைகள்'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/TBW1kvHgyuI/AAAAAAAAAFQ/KrInU8ohoaU/s72-c/Image_4_for_Cottesloe_Beach_sculptures_in_Perth_Australia_gallery_33287216.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-1513737700165937372</id><published>2010-06-06T08:59:00.002+05:30</published><updated>2010-06-06T09:04:28.771+05:30</updated><title type='text'>’துருக்கி தொப்பி’ நாவல் விமர்சனம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/TAsXBq_o7PI/AAAAAAAAAFI/PdxNnrQf9F0/s1600/knitted-turkey-baby-hat.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/TAsXBq_o7PI/AAAAAAAAAFI/PdxNnrQf9F0/s320/knitted-turkey-baby-hat.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479498689114860786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தேய்பிறை இரவுகளின் கதை  – கீரனூர் ஜாகிர் ராஜாவின் ’துருக்கி தொப்பி’ நாவல் விமர்சனம்&lt;br /&gt;&lt;br /&gt;எதார்த்தவாத நாவல்கள் ஒரு பார்வை&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தமிழில் நாவல் என்ற கலைவடிவம் தோன்றி ஒன்றேகால் நூற்றாண்டுகள் கடந்து விட்டதாக நாம் பேசிக் கொண்டாலும் நாவல் என்பது குறித்து பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட வரையறைகளின் படி பார்க்கும் போது க.நா.சுவினுடைய “பொய்த்தேவு” நாவலையே நாம் தமிழின் முதல் செவ்வியல் நாவல் எனக் கொள்ளமுடியும். இது நடந்தது 1940களுக்குப்பிறகு இந்த காலகட்டமானது மேற்கில் நவீன நாவல்களின் காலமாக மாறத்துவங்கியிருந்த காலம் ஆகும். சுமார் 200 ஆண்டுகாலம் நாவல் வடிவத்தில் இயங்கி தன்னியல்பாக நவீன நாவல்களுக்குள் மேற்குலகம் சென்றிருந்த சூழலில்தான் நம்முடைய முதல் செவ்வியல் நாவல் எழுதப்பட்டது. உண்மையில் அதுவும் கூட ஒருவகை எதார்த்தவாத நாவல் என்றே கொள்ளமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;செவ்வியல் நாவல் என்பதும் எதார்த்தவாத நாவல் என்பதும் வேறு வேறு அல்ல என்பதைப்போன்ற கருத்தியல் ஒன்று தமிழ்ச்சூழலில் உண்டு.  ஒரு மேலோட்டமான பார்வைக்கு அப்படித் தோன்றினாலும் இரண்டும் வேறு வேறே. எவ்வாறு நவீன நாவல் என்பது செவ்வியல் நாவலில் இருந்து பிரிந்து போன கலைவடிவமோ. அப்படியே எதார்த்தவாத நாவல் என்பதும் செவ்வியல் நாவலில் இருந்து மலர்ந்த ஒரு வடிவமே. வடிவமைப்பிலும் மொழிதலிலும் எதார்த்தவாத நாவல்களுக்கும் செவ்வியல் நாவல்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. ஆனால் ஆன்மாவில் இரண்டும் வேறு பட்டன. ஒரு செவ்வியல் நாவல் என்பதன் இயங்குதளமானது ஒப்பீட்டளவில் எதார்த்தவாத நாவலை விடவும் விரிந்தது. உலக அளவில் மிக பரந்தபட்ட செவ்வியல் நாவல் வடிவங்களை உருவாகியதில் ரஷ்ய இலக்கியக்கங்களுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. டால்ஸ்டாய், தாஸ்தாயெவ்ஸ்கி, தாமஸ் மன், விக்டர் ஹீயூகோ போன்ற பெயர்களை நாம் இன்றளவும் பேசக்காரணம் அவர்கள் படைப்புகளில் இயங்கும் செவ்வியல்வாத பண்பே. அவர்கள் நாவல் என்பதை ஒட்டுமொத்த வாழ்வினுடைய சாரம் என்பதாக பார்த்தார்கள். தங்கள் படைப்புகளின் வழியாக வாழ்வை மொத்தமாக அள்ள முயன்றவர்கள் செவ்வியல் நாவல்காரகள் எனலாம். &lt;br /&gt;&lt;br /&gt;மாறாக எதார்த்தவாத நாவல்களோ அந்த எல்லையிலிருந்த சற்று குறுகியதாகவே இருந்தது. குறிப்பாக ரஷ்ய எதார்த்தவாத நாவல்கள். மார்க்சிய அழகியல் என்ற கோட்பாடு பின் நாட்களில் எதார்த்தவாத நாவல்களின் எல்லையை மேலும் சுருக்கி நாவல் என்பது மார்க்சிய கோட்பாடுகளை கதைகளனில் நிறுத்தி நிகழும் எல்லா விஷயங்களுக்கும் வார்க்க சாயல் பூச முயன்றது. இந்த வகை நாவல்களானது செவ்வியல் நாவல்களிலிருந்து மேலும் சுருங்கிய எல்லைகளை கொண்டதாகவே இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நாவல் வரலாறு என்பது மொழிக்கு மொழி வேறானதே என்பதை சொல்லத்தேவை இல்லை. ஆனால் பொதுவாக இந்திய மொழிகளின் துவக்கால  நாவல்களுக்கு ரஷ்ய நாவல்கள் பெரும் ஆதர்சமாக இருந்தது. க.நா.சு வைத் தவிற துவக்ககால தமிழ் நாவலாசிரியர்கள் ரஷ்ய நாவல்களின் தாக்கம் கொண்டவர்களே. குறிப்பாக ஜெயகாந்தன், சுந்தரராமசாமி போன்றவர்களைச் சொல்லலாம். இந்த போக்கானது தமிழில் நாவல் என்ற வடிவத்தை எதார்த்தவாத நாவல் என்ற வடிவமாக ஊன்றச் செய்தது. இவ்வாறாக செவ்வியல் நாவல் என்ற வடிவத்தில் போதிய பரிச்சயம் நிகழாமலேயே நாம் எதார்த்தவாத நாவல்களை எழுதத் துவங்கினோம். அதுவும் குறிப்பாக ரஷ்ய வகை எதார்த்தவாத நாவல்களை எழுதத்துங்கினோம். &lt;br /&gt;&lt;br /&gt;எதார்த்தவாத நாவல்கள் ஒரு மொழியில் தொடர்ந்து வினையாற்றும் போது ஏற்படுகிற முக்கியமான விளைவுகளில் ஒன்று. அவைகள் அம்மொழியின் நாட்டார் கலை வடிவங்களில் இருந்து தனக்கான சாரத்தை எடுத்து கொள்கிற முறைமை ஆகும்.  தமிழில் அது கதை சொல்லி மரபை கிரகித்துக் கொண்டது முக்கியமான அம்சம் எனலாம். கி.ராஜநாரயணன், சண்முக சுந்தரம், பூமணி, நாஞ்சில் நாடன்  முதல் இமையம், அ.முத்துலிங்கம், மேலாண்மை பொன்னுச்சாமி, ஜாகிர்ராஜா வரை எண்ணற்ற உதாரணங்கள் இதற்கு உண்டு. மேற்குறிப்பிட்ட பட்டியல் முழுமையானது அல்ல என்பதைச் சொல்லத் தேவையில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;முன்னர் சொன்னது போல் செவ்வியல் நாவல் மரபு ஆழமாக ஊன்றாமல் எதார்த்தவாத நாவல்களுக்குள் நாம் ஈடுபட்டதென்பது சில சிக்கல்களை ஏற்படுத்தியது. தொடர்ந்து எதார்த்தவாத நாவல்களிலிருந்து நவீன நாவல்களை நாம் உருவாக்க முற்பட்டது சூழலை மேலும் சிக்கலாக்கியது. அவற்றில் பிரதானமானது என்னவெனில் எதார்த்தவாத நாவல்காரகள் எளிய கதை சொல்லிகளாக குறுகிக் கொண்டதுதான். இந்த நூலின் முன்னுரையில் எதார்த்தவாத நாவல்கள் என்றாலே நவீன நாவல்காரகளுக்கு இளக்காரம்தான் என்பதை போன்ற சொற்களை நாஞ்சில் நாடன் எழுதுவதற்கு இதுவே காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;நவீன நாவல்காரன் நாட்டார் மரபோடோ, எதார்த்தவாத மரபோடோ எந்த தொடர்பும் அற்றவன். அவன் செவ்வியல் நாவல்களின் வடிவப்போதமை மற்றும் கருத்தியல் போதமைகளின் வழி தனக்கான அழகியலை உருவாக்கிக் கொண்டவன் என்பதை போன்ற சூழல் ஒன்று நிகழ்ந்ததுவே இப்படி ஒரு உரையாடலுக்கான காரணம் என நாம் அவதானிக்கலாம். மேலும் கதைசொல்லி என்பவன் எழுத்தாளனை விடவும் உயர்ந்தவன் அல்ல என்பதை போன்ற கருத்தியல் ஒன்றும் நமது சூழலில் நிலவுகிறது. இதற்கும் இந்த அடிப்படை கோளாறே காரணம் என நாம் கருத வேண்டியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நவீன நாவலின் பிதாமகன்கள் எனக் கருதப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ், மிலரோட் பாவிச், ஓரான் பாமுக் போன்றவர்கள் தங்களை ஒரு கதை சொல்லி எனக் கூறிக் கொள்வதை நாம் இங்கு நினைவு கூர வேண்டும். &lt;br /&gt;பின் நவீன காலத்தின் செல்வாக்கு மிக்க கருத்தியல்களில் ஒன்று வேர்களை தேடிப்போதல் என்பதாகும். மேலும் நவீன கால கருத்தியல்களை மறுப்பது என்பதும் அதன் பண்புகளில் ஒன்று. அந்த வகையில் நம் சமகாலத்திய நாவலாசிரியன் ஒருவன் தன்னை கதைசொல்லி எனக் கூறிக்கொள்வதில் எந்த ஆச்சர்யமும் கிடையாதுதான். ஆனால் எழுத்தாளனையும் கதைசொல்லியையும் சமமாக பாவிக்கும் பண்பு ஒன்று மேற்கூறியவர்களிடம் காணப்படுவதையும் நாம் கவனிக்கவேண்டும். இந்த எழுத்தாளன் என்பவன் செவ்வியல் நாவலாசிரியனின் தொகுத்துக்கூறும் பண்பை பெற்றிருப்பவன். ஆனால் எதையும் நிறுவி விட முயலாத பின் நவீன மனம் உடையவன். நம்முடைய சமகால எழுத்தாளர்களிடம் அரிதாக காணப்படும் இந்த பண்பே இந்த பரஸ்பர பிளவுக்கு காரணமாக இருக்க கூடும்.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;துருக்கித் தொப்பி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விமர்சகனின் வேலை நாவலின் கதைச்சுருக்கத்தை சொல்வதல்ல உண்மையில் நாவல் என்பதும் வெறும் கதை மட்டுமல்ல. துருக்கித் தொப்பி எல்லா அசாதாரண நாவல்களையும் போலவே சீரழிவைப் பேசும் நாவல். வாழ்ந்து கெட்ட குடும்பம் ஒன்றின் துயரமான கதை. கே.பி.ஷே என்ற துருக்கித் தொப்பிக்காரர் குடும்பம் ஒன்று எப்படி வாழ்க்கையின் கோரப்பிடியில் சிக்கி வக்கற்று போனது என்பதைப் பேசும் கதை. கே.பி.ஷே குடும்பம் என்கிற ஒரு குறியீட்டின் வழியாக எண்ணற்ற நவீன இஸ்லாமிய குடும்ப வாழ்வை, இன்னும் சொல்லப்போனால் தமிழ் வாழ்வை அவர்களின் உணர்வுகளை பேசும் நாவல். மிகவும் கட்டுக்கோப்போடும் ரசனையோடும் வலியோடும் எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல். இறுதியில் நிறமிழந்து போன துருக்கித் தொப்பி ஒன்று வேம்பின் கிளைகளில் ஆடும் சித்திரத்தை நாவலாசிரியர் நம் கண்முன் விரித்துக் காட்டும் போது நாம்  மனம் பொங்கி போகிறோம். கனத்த மனதுடன் நாம் நன்றாக வாழ்ந்த காலத்தின் நாஸ்டால்ஜியாவுக்குள் மூழ்குகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;கே.பி.ஷேவின் மனைவியான பட்டாமாளுக்கு தான் எட்டுக்கல் பதிச்ச வீட்டுக்காரி என்பதிலும் ஆட்டுகரி சாப்பிடும் மேலான இனம் என்பதிலும் பெருமை அதிகம். தன் மருமகள் மேற்கு தெருவை சார்ந்தவளென்றும் அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் என்றும் இளக்காரம் பேசுகிறாள். நாவல் முழுவதும் வேறு வேறு சந்தர்பங்களில் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் மிக நுட்பமாக பதிவு செய்யப்படுகிறது. தன் மருமகள் அயலான் ஒருவனோடு தன் வீட்டிற்குள் பேசிக்கொண்டிருப்பதைக் கூட அனர்த்தமாகவே பார்க்கிறாள் பட்டம்மாள். உண்மையில் பட்டாமாள் இந்த சமூகத்தின் சராசரி மனிதர்களில் ஒருத்தி என்று பார்க்கும் போது இச்சமூகம் பெண் உடல் மீதான கண்காணிப்புக்கு எவ்வளவு முக்கியதுவம் தருகிறது என்பதை நாம் உணர்கிறோம். நம்முடைய பண்பாடு கலாச்சாரம் என்பதெல்லாம் பெண் உடலை மையமாக வைத்தள்ளவா வரையறுக்கப்பட்டிருக்கிறது. மருமகள் பேரனுக்கு பால் கொடுப்பதை மறைந்து நின்று பார்க்கும் கே.பி.ஷே, தன்னை விட இளைய ரகமத்துல்லாவை யாருமற்ற போது முத்தமிடும் மல்லிகா, குளிக்கும், உடைமாற்றும் தாயை ரசிக்கும் ரகமத்துல்லா, கணவன் ஊரில் இல்லை எனத் தெரிந்து கொண்டு நூர்ஜகானிடம் பேச்சு வளர்க்கும் ரூபன், அதை அனுமதிக்கும் நூர்ஜகான். என காமம் பற்றிய  நுட்பமான காட்சிப்படுத்தல்கள் நாவல் முழுதும் உள்ளது. இது குறித்து இன்னும் கூட விரிவாக ஜாகிர் எழுதியிருக்கலாம் என்று படுகிறது. ரகமத்துல்லாவின் வழியாக குழந்தைகளின் உளவியல் அழகாக பதிவாகிறது. தன் தாய் தன் மீது அன்பு செலுத்தாமல் போனதற்கு தன் தம்பீதான் காரணம் என நினைத்து ஒரு செங்கல்லை தம்பியென பாவித்து வன்மம் வளர்ப்பது. அந்த தம்பி காணமல் போய்விட்ட போது தன் மீது சந்தேகப்படும் அம்மாவை நினைத்து மனம் வெம்புவது என ரகமதுல்லாவின் உணர்வுகள் அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், குடும்ப வன்முறை, பாலியல் சிக்கல்கள், குழந்தைகளின் உளவியல், உறவுச் சிக்கல்கள் போன்றவற்றை நுட்பமான மானுட உணர்வுகளின் வழியாக மிகுந்த வலியோடு பேசுகிறார் ஜாகிர் ராஜா.  இந்த நாவலில் பயன்படுத்த பட்டிருக்கும் வட்டார மொழி இந்நாவலின் ஆகப்பெரிய பலம் எனலாம். நாவலோடு சேர்ந்து தமிழகத்தின் அரசியல் வரலாறு பேசப்படுகிறது. சுதந்திர காலம் துவங்கி தி.மு.க அதிகாரத்தை கைப்பற்றுவது வரையான அக்கட்சியின் வளர்ச்சி முகமும் தீவிர தி.மு.க காரனான அத்தாவுல்லா குடும்பம் நன்றாக வாழ்வதில் துவங்கி  பிழைப்பு தேடி அவன் எங்கோ போவது வரை அவன் குடும்பத்தின் இறங்கு முகமும். எதிர் முரண்களாக கட்டமைந்து எதையோ உணர்த்த முயல்கின்றன.     &lt;br /&gt;&lt;br /&gt;இதில் காட்டப்படும் உலகம் தமிழ்ச் சூழலுக்கு மிகவும் புதிது. இதில் சொல்லப்படும் தகவல்கள் வெகுமக்கள் நம்பிக்கைகள், பழமொழிகள், சொலவடைகள் போன்றவைகள் தமிழ் இலக்கியம் உலகம் இது வரை அறியாதது. அன்னமுகம்மதுவ பழிக்காதடா எனச் சொல்வது, பிறைபார்த்ததும் மனதுக்கு பிடித்தமானவரை பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கை மாட்டுக்கறியை பெரியாட்டுக் கறி என்பது போன்றவற்றை உதரணமாக சொல்லலாம். ‘Novel is an art of data’  என மார்க்வெஸ் சொல்வதை இங்கு நான் நினைத்துக் கொள்கிறேன். அப்படிப் பார்க்கும் போது எண்ணற்ற நுட்பமான தகவல்களோடு எழுதப்பட்டிருக்கும் ஒரு சமூக ஆவணம் என நாம் இந்த நாவலை தாரளமாக சொல்ல முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;துருக்கித் தொப்பி எனும் நாவல் ஓர் உரையாடல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாவல் மூன்று விதங்களில் எழுதப்பட்டிருக்கிறது. கதைசொல்லி கதையை சொல்வது போலவும் எழுத்தாளன் விவரிப்பது போலவும் கதாபாத்திரங்கள் தங்கள் மன உணர்வுகளை பேசுவது போலவுமாக மூன்று முனைகளில் இக்கதைகளின் சம்பவங்கள் மாறி மாறி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டமைப்பு நாவலுக்கு ஒரு சரளத்தன்மையை வழங்கியிருக்கிறது. எந்த ஒரு முறை வாசிப்பில் தொய்வு ஏற்படுத்த துவங்குகிறதோ அந்த முறை கைவிடப்பட்டு வேறொரு முறை கையாளப்படுவதன் மூலம் நாவல் தன்னை வேகமாக முன்னகர்த்திக் கொண்டே போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தன் முன்னுரையில் நாஞ்சில் நாடன் ஜாகிர் ஏன் இவ்வளவு சுருக்கமாக எழுதுகிறார் என ஆதங்கப்பட்டிருப்பதோடு எனக்கும் உடன்பாடு உண்டு. என்னுடைய இரண்டாம் வாசிப்பில் மிக விரிவாக எழுத வேண்டிய இடங்களை கூட சுருக்கமாக எழுதுகிறாரே என ஆதங்கத்தோடேயே வாசித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கலைவடிவத்திலும் உள்ள அடிப்படையான சிக்கல் என்பது அதில் மெளனத்தை எங்கு ஒளித்து வைப்பது என்பதுதான். இசையில் ஒவ்வொரு துடிப்புக்கும் அதாவது ஒவ்வொரு பல்ஸ்கும் இடையில் அதன் மெளனம் உள்ளது. கவிதையில் மெளனம் என்பது சொற்களின் இடையில் உள்ளது. சிறுகதையில் கதை முடிந்ததும் உள்ளது உண்மையில் நவீன சிறுகதைகளில் மெளனம் சொற்களின் இடையேயும் உள்ளது. அப்படிப்பார்க்கும் போது நாவல்களில் மெளனம் இரண்டு அத்தியாங்களுக்கான இடைவெளியில் அல்லது இரண்டு சம்பவத்துணுக்குகளுக்கான இடைவெளியில் உள்ளது எனலாம். மெளனத்தை கட்டமைப்பதிலும் காலத்தை தரிசனப்படுத்துவதிலும் வெற்றியடைந்த நாவல்களே மிகச்சிற்ந்த நாவல்களாக உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;துருக்கித் தொப்பி நாவலின் பலவீனமான பகுதி ஏதாவது இருக்குமானால் அது மெளனத்தை கட்டமைப்பதில் ஏற்பட்டிருக்கும் சிறு சரிவே ஆகும். ஏற்கனவே சொல்லி விட்டதை மீண்டும் சொல்வதை போன்ற நினைவுதரும் சொற்றொடர்கள். போதிய இடைவெளியின்றியும், அளவுக்கதிகமான இடைவெளிகளோடும் கோர்க்கப்பட்டிருக்கும் சம்பவக் கோர்வைகள் போன்றவை ஒரு தேர்ந்த வாசகனுக்கு சலிப்பு தருபவை. ஆனால் கதையை சில இடங்களில் முன்னுக்கு பின்னாக மாற்றி மாற்றி சொல்வதன் மூலம் தான் சொல்லவந்த காலத்தை மிகச் சரியாக தரிசனப்படுத்தி நாவலின் மையமான உணர்ச்சியை வாசக மனதில் அழுத்தமாக பதிய வைத்ததன் மூலம் நாவல் வெறும் சம்பவக் கோர்வையாக மாறிப்போகிற ஒரு பெரும் விபத்திலிருந்து தப்பியிருக்கிறது எனலாம்.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஜாகிர்ராஜா எனும் கதைசொல்லி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கி.ராஜநாரயனனை ஒரு கதைசொல்லி எனச் சொல்ல நமக்கு எந்த தயக்கமும் கிடையாது. அதுபோலவே சுந்தரராமசாமியை ஒரு எழுத்தாளர் என்று நாம் துணிந்து கூறலாம். ஆனால் ஜாகிர்ராஜாவை கதைசொல்லி என்றோ எழுத்தாளர் என்றோ எளிய சட்டகங்களுக்குள் அடக்கி விட முடியாது. இது அவரின் மிக முக்கியமான பலம் மற்றும் பலவீனம் எனலாம். உண்மையில் ஜாகிருக்கும் முந்தைய தலைமுறையை சேர்ந்த எதார்த்தவாத நாவலாசிரியர்கள் பலருக்கும் இந்த எடுகோள் பொருந்தும். ஆனால் எந்த ஒரு நாவலாசிரியனுக்குள்ளும் கதைசொல்லி, எழுத்தாளன் என்கிற இரண்டு ஆளுமைகளில் யாரேனும் ஒருவரே அழுத்தம் பெற்று இருக்க முடியும். அப்படிப் பார்க்கும் போது ஜாகிரை நாம் கதைசொல்லி என்றே கொள்ளமுடியும். துருக்கி தொப்பி நாவலை விடவும் முதலிரண்டு நாவல்களை பார்த்தால் இது உண்மை எனப்புரியும். ஆனால் அப்படியான எளிய தர்க்கப்படுத்தல்களுக்கெல்லாம் அடங்காத வீச்சு அவரின் எழுத்துகளுக்கு உண்டு என்பதற்கு துருக்கி தொப்பி நாவலே சாட்சி. இந்த நாவலில் எழுத்தாளனும் கதைசொல்லியும் நுட்பமாக இணைந்தும் முரண்பட்டும் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டும் ஒரு அழகான நாவலை உருவாக்கிகாட்டியிருக்கிறார்கள். இந்த நாவலின் முன்னுரையில் இந்த நாவல் என்னுடைய முதல் இரண்டு நாவல்களில் இருந்து வேறுபட்டது என அவர் கூறுவதற்கு வடிவமைப்பில்  செய்திருக்கும் இந்த மாற்றமே காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;ஜாகிர் ராஜா கதை சொல்லும் போது நாம் அந்த சொல்லலின் அழகில் மயங்கி அதை பின் தொடர்கிறோம். ஒரு கதை சொல்லிக்கு சொல்லப்படுவதின் முக்கியத்தை போலவே சொல்லும் முறையும் முக்கியமானது அல்லவா. எட்டுகல் பதிச்ச வீட்டின் அத்தாவுல்லா நூர்ஜஹான் திருமணம் பற்றி சொல்லும் விதமே மிக சிறந்த உதாரணம். அவ்வளவு ரசித்து ஒரு கதையை சொல்லிச்செல்ல சொல்லின் ருசியறிந்த ஒரு மனதாலேயே முடியும். ஆனால் அவரின் முதலிரண்டு நாவல்களோடு ஒப்பிடும் போது இதில் ஜாகிர் என்கிற கதை சொல்லியை அல்லது அவரது ஆளுமையை சற்று குறைவாகவே காண நேர்கிறது. உண்மையில் இதை நான் ஒரு சரிவாக பார்க்கவில்லை மாறாக மிக சரியான ஒரு ஆரோக்கியமான பயணமாகவே பார்க்கிறேன். ஒரு கதை சொல்லியாக இருந்து கொண்டு ஜாகிர்ராஜாவின் அளவிற்கு எழுத்தாள ஆளுமையை வளர்த்துக் கொண்டவர்கள் நாஞ்சில் நாடன், இமையம் போன்ற ஒரு சிலரே. ஜாகிர் அதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஜாகிர்ராஜா எனும் ஓர் எழுத்தாளன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கின் நாவல் ரசனை மரபில் ஒரு நாவல் எப்படி துவங்கப்படுகிறது அல்லது எப்படி முடிகிறது என்பதை சிலாகித்து பேசும் வழக்கம் உண்டு. மகிழ்ச்சியான குடும்பங்களின் கதை ஒன்று போலவே இருக்கும். ஆனால் மகிழ்ச்சியற்ற குடும்பங்களின் கதை ஒவ்வொன்றும் வேறு வேறு எனத் துவங்கும் அன்னாகரினீனாவின் துவக்கமும், நாளை மற்றுமொரு நாளே என முடியும் கான் வித் தி விண்ட் நாவலின் முடிவும். காலங்களில் அதுவே மிகச்சிறந்ததாக இருந்தது, காலங்களில் அதுவே மோசமாக இருந்தது என துவங்கும் டேல் ஆப் டூ சிட்டிஸ் நாவலின் துவக்கமும் ரசனை மரபை சேர்ந்த விமர்சகர்களால் இன்றும் கொண்டாடப்படுவது. &lt;br /&gt;&lt;br /&gt;நல்ல முறையில் துவங்கப்பட்ட ஒரு நாவலானது வாசகனை காந்தம் போல் உள் இழுக்கும் தன்மை கொண்டது. நல்ல முறையில் ஒரு நாவலை துவங்குவதற்கு ஒரு நாவலாசிரியன் வெறும் கதை சொல்லியாய் இருந்தால் போதாது அவன் ஒரு நல்ல எழுத்தாளனாக இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;‘எட்டுகல் பதிச்ச வீட்டுக்கு குட்டி லெவை மகள் நூர்ஜஹான் பேகம் வாக்கப்பட்டு வந்த நாளில் தலைவாசலில் நின்றிருந்த வேம்புகள் இரண்டும் பூப்பூக்கத் துவங்கியிருந்தன’ என கச்சிதமாக, அழகாக துவங்குகிறது இந்நாவல். முதல் அத்தியாயத்தின் முதல் வரியில் பூப்பூக்க துவங்கிய அந்த வேப்பமரத்தில் ஒன்று இறுதி அத்தியாயத்தில் உதிரும் இலை கூட்டிப்பெருக்க மாட்டாமல் வெட்டி எறியப்படுகிறது. இந்த இரண்டு காட்சிகளும் நாவலின் மையத்திற்கு அழகான குறியீடாக மாறுகின்றன. அது போலவே நாவலின் துவக்கபகுதியில் கம்பீரமாக தொப்பி மாட்டியில் காட்டப்படும் துருக்கித்தொப்பி இறுதி பகுதியில் நிறம் வெளுத்து நைந்து இளைய வேம்பின் கிளைகளில் ஆடிக்கொண்டிருப்பதாக காட்டப்படுகிறது. இது போன்ற அம்சங்களே ஜாகிரை ஒரு தேர்ந்த எழுத்தாளராக மாற்றுகிறது. தான் உணர்ந்த சமூகம் சார்ந்த சிக்கல்களை, உறவுச்சிக்கல்களை வலிந்து திணிப்பதாக தெரியாமல் கதையின் போக்கில் நிகழ்வுகளின் போக்கில் வாசகனாக வந்தடையும் படி செய்திருப்பது இன்னொரு உதாரணம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஜாகிர்ராஜா எனும் ஆளுமை&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;எழுத்தின் எந்த வடிவத்தை சேர்ந்த கலைஞனாக இருந்தாலும் ஒரு ஆளுமையாக அவன் மலர வேண்டும். ஆளுமையாக மலர்தல் என்பது இலக்கிய பொது புத்தியால் அங்கீகரிக்கப்பட்ட படைப்புகளை தொடர்ந்து வழங்குதல் அல்ல. அது, ஒரு கலைஞன் தனது தொடர்ந்த தேடல்கள் வழியாக வாழ்வு பற்றிய தனது அவதானங்கள் தரிசனங்கள் தர்க்கங்கள் ஆகியவற்றை தன் மொழிக்குள் கொண்டுவருவதன் மூலம் அம் மொழியின் ஒட்டு மொத்த மானுட அறிவை மேம்படுத்துவது அல்லது விரிவுபடுத்துவது ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாகிர்ராஜாவிடம் ஒரு ஆளுமைக்கான எல்லா பண்புகளும் உண்டு. இப்படிச் சொல்வதால் அவர் அனைத்தையும் சாதித்துவிட்டார் என்பதாக நாம் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. நாம் முன்பே சொன்னது போல எழுத்தாளனையும் கதை சொல்லியையும் சரியான விகிதத்தில் இணைக்கிற ஆளுமைத்திறன் அவரிடம் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;தொப்பம்பட்டி புளியம்பட்டித் தங்கமணலில் முளைத்த வேகவைத்த சுவைமிக்க பிஞ்சுக் கத்திரிக்காயும் நீலகிரிப் பனியில் தோண்டியெடுத்த உருளைக்கிழங்கும் சண்முக நதித்தீரத்தில் சொந்த தோப்பில் பறித்த நாட்டு மாங்காயும் மனுஷாளின் உயரத்துக்கு போட்டியாக வளர்ந்த சதைப்பற்றுள்ள முருங்கைகளுடன் குறும்பாட்டுக் கறியும் மசாலாக் குழுமமும் இணைத்துச் செய்கிற ஊர்குழம்பென்றால் அத்தனை இஷ்டம் பட்டமாளுக்கு என்ற வரிகளில் மேற்சொன்ன அந்த சரியான சேர்மானத்தை நாம் பார்க்கலாம். இந்த அசாதாரண சேர்மானமே மார்க்வெஸ் எனும் கலைஞனைத் தந்தது. பாமுக் எனும் ரஸவாதியை தந்தது. உலகின் மிகச்சிறந்த கதைசொல்லி என பாவிச்சை பெருமையடையச் செய்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக சொல்வதெனின், சில போதமைகள் இருந்தாலும் துருக்கித் தொப்பி ஒரு நல்ல நாவல். அதை விட முக்கியமான விஷயம் ஜாகிர்ராஜா துருக்கி தொப்பியை விட மிகச்சிறந்த நாவல்களை எல்லாம் எழுதும் அளவுக்கு ஆளுமை நிறைந்தவர். இதற்கு இவரது முதலிரண்டு நாவல்களுக்கும் இந்த நாவலுக்கு உள்ள வித்யாசமே சாட்சி. முன்னுரைத்த நாஞ்சில் நாடனை போலவே நாமும் இவரிடம் இருந்து நிறைய எதிர்ப்பார்ப்போம். நாம் குறித்து கொண்டுள்ளதை விட அதிகமாகவே ஜாகிர் செய்வார் என நான் உறுதியாக நம்புகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: லும்பினி.இன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-1513737700165937372?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/1513737700165937372/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/06/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/1513737700165937372'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/1513737700165937372'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/06/blog-post.html' title='’துருக்கி தொப்பி’ நாவல் விமர்சனம்'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/TAsXBq_o7PI/AAAAAAAAAFI/PdxNnrQf9F0/s72-c/knitted-turkey-baby-hat.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-1383560734102718687</id><published>2010-05-25T18:55:00.001+05:30</published><updated>2010-05-25T18:59:49.426+05:30</updated><title type='text'>மதமும் விஞ்ஞானமும் - ஐன்ஸ்டின்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/S_vPx8QzcSI/AAAAAAAAAFA/_v5NqmjJIyU/s1600/la_verite_vous_rendra_libre.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 245px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/S_vPx8QzcSI/AAAAAAAAAFA/_v5NqmjJIyU/s320/la_verite_vous_rendra_libre.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475198228896117026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(இந்தக் கட்டுரை ஐன்ஸ்டினால் 1930ல் எழுதப்பட்டு நியூயார்க் டைம்ஸ் வார இதழில் வெளிவந்தது. 1954 ல் ஐண்டினின் கருத்துக்கள் என்ற நூலில் மீண்டும் வெளியிடப்பட்டது. 2008ல் சிறந்த விஞ்ஞானிகள் சிறந்த எழுத்துக்கள் என்று ரிச்சர்டு ட்வாக்கின்ஸ் என்ற உயிரியல் விஞ்ஞானி தொகுத்த நூலில் இடம் பெற்றுள்ளது)&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மீக இயக்கத்தையும் அதன் வளர்ச்சியையும் ஒருவர் புரிந்து கொள்ள விரும்பினால் மனித குலம் எதனைச் செய்தாலும் எதனைச் சிந்தித்தாலும் அவைகள் அனைத்தும் ஆழமாக உணர்கிற தேவைகளை நிறைவேற்றி திருப்தி பெறவும், வலியைப் போக்கி சுகத்தைப் பெறவும்தான் என்பதனை நிரந்தரமாக மனதில் இருத்திக் கொள்ளவேண்டும். மானுட படைப்புகளும் முயற்சிகளும் மனதைக் கிளர்ச்சியுறச் செய்தாலும் உணர்வுகள், ஆதங்கங்கள் ( Feeling and Longing) என்ற இரண்டுமே அந்த மானுட முயற்சிகளையும் படைப்புகளையும் உருவாக்குகிற உந்து சக்தியாகும். இப்போது கேள்வி என்னவெனில் மதச்சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் அதனுடைய பரந்த பொருளில் எந்த உணர்வினால் அல்லது தேவையினால் மானுடம் கண்டது? சற்று யோசித்தாலே மதச்சிந்தனைகளும் அனுபவங்களும் பிறக்க பலவிதமான மன உணர்வுகளே காரணம் என்பது தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிகால மனிதனிடம் எல்லாவற்றிற்கும் மேலாக பயமே மத உணர்வுகளைத் தூண்டியது. பசி, காட்டுமிருகங்கள், நோய், மரணம் இவைகளினால் ஏற்படும் பயம் ஆதிகால மத உணர்வுகளுக்கு பிராதான காரணம். இந்த பயம் ஏனெனில் அன்றைய காலக்கட்டத்தில் மானுட சமூகத்திற்கு காரண காரியங்கள் பற்றிய ஞானம் சரிவர வளராமையே ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிகால மானுடன் துவக்கத்தில் உயிருடன் இருப்பதற்கான காரணத் தொடர்புகளை புரிகிற அளவிற்கு மன வளர்ச்சி பெறாத நிலையில் பசி, பயங்கர மிருகங்கள், மரணம் இவைகள் பற்றிய பயமே எல்லாவற்றிற்கும் மேலாக மத எண்ணங்களை தூண்டியிருக்கிறது. அந்தக் கட்டத்தில் மானுட மனம் சற்றேறக்குறைய தன்னை போன்ற ஒன்றை கற்பிதம் செய்திருக்கிறது. அதனுடைய விருப்பத்தினாலும், ஆற்றாலலும் இந்த பயங்கர நிகழ்வுகள் நடப்பதாக கருதியிருக்கிறது. சடங்குகள், பலிகள் இவைகளைச் செய்து அவைகளிடமிருந்து சலுகைகள் பெற முயற்சித்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அழிவுறாத அந்த சக்தியை திருப்திபடுத்தவும் சலுகைகள் பெறவும் எடுக்கும் இம் முயற்சிகள் பாரம்பரிய பழக்க வழக்கத்திற்கேற்ப பண்பாடுகள் தோறும் இருந்திருக்கிறது. இங்கே நான் குறிப்பிடுவது பயத்தினால் உருவாகும் மதத்தைப் பற்றியே.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு மதம் என்ற ஒன்று உருவாகவில்லை என்றாலும் பூசாரி சாதி உருவாகி நிலைக்க இது முதல் படியாக இருந்திருக்கிறது. எதைக் கண்டு பயந்தனரோ அதற்கும் இவர்களுக்குமிடையே சமரசம் செய்பவர்களாகி வழி நடத்தும் நிலையை அந்த பூசாரி சாதி உருவாக்கிக் கொண்டது. பல சமூகங்களில் வேறு காரணிகளால் தலைவராகவோ ஆளுபவராகவோ அல்லது சலுகைகளை அனுபவிக்கும் ஆளும் வர்கமாக ஆனவர்கள் இகலோக நடவடிக்கைகளோடு இந்த பூசாரிக் கடமையையும் இணைத்து தங்களது பதவியை உறுதிப்படுத்தி வைத்திருபதைக் காணமுடியும். அந்த வகையில் ஆட்சியாளர்களும் பூசாரிசாதியும் தங்கள் நலன்களை காக்க இணைந்திருப்பதைக் காண முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மதம் திரள இன்னொரு முகாந்திரமும் சமூக நிர்பந்தமாகும். தாய், தந்தை, பெரிய சமுகத்தலைவர்கல் எல்லோருமே தடுமாறுபவர்கள், மரணம் அடைபவர்களே. வழிகாட்டவும் அன்பு செலுத்தவும் ஆதரவு நல்கவும் ஒருவர் தேவை என்ற ஆதங்கம் அல்லது தார்மீக அடிப்படை கடவுள் பற்றிய கருத்துருவத்திற்கு மற்றொரு காரணியாகிறது. இந்தக் கடவுள் பரிவுகாட்டுபவர் தகுதிக்கேற்ப தண்டிக்கவும் பரிசு வழங்கவும் செய்பவர். நம்புகிறவர்களின் கண்ணோட்டத்திற்கேற்ப ஆற்றலுள்ள இந்தக் கடவுள் அவர்கள் குலத்தை அல்லது மனித ராசியை நேசிப்பவராகவும், பாதுகாப்பவராகவும் இருக்கிறார். உயிரையும் காப்பவராக, ஆறுதல் கூறுபவராக, நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றுபவராக, இறந்தவர்களின் ஆன்மாவை போஷிப்பவராக இருக்கிறார். இது சமூக அல்லது தார்மீக அடிப்படையில் கடவுள் பற்றி உருவாகும் கருத்தாகும்.  மனித குலம் கடவுள் பற்றிய கோட்பாட்டிற்கு பய அடிப்படையிலிருந்து தார்மீக அடிப்படைக்கு வளர்ந்ததை வியக்கதக்க வகையில் விளக்குதாக இருக்கிறது யூத வேதம் உள்ளது. இந்த மாற்றம் புதிய ஏற்பாடு எனும் வேதத்திலும் தொடர்வதைக் காணமுடிகிறது. நாகரீகமடைந்த எல்லா மக்களின் குறிப்பாக கீழ் திசை மதங்கள் தார்மீக அடிப்படைகளை கொண்டவைகளே. மதங்கள் பய அடிப்படையிலிருந்து தார்மீக அடிப்படைக்கு வந்தது என்பது மக்களின் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றமாகும். இருந்தாலும் ஆதிகால மதங்கள் முழுவதும் பய அடிப்படையிலும் நாகரிகமடைந்த மதங்கள் சுத்தமான தார்மீக அடிப்படையிலும் இருப்பதாக ஒருதலைப்பட்சமான முடிவிற்கு வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் எல்லா மதங்களும் இவ்விரண்டின் கலவையாக இருக்கின்றன. இந்த வேறுபாட்டுடன் சமூக வாழ்வின் உயர் மட்டங்களில் தார்மீக அடிப்படையிலான மதமே மேலாதிக்கத்தில் உள்ளது. எல்லா வகையான மதங்களிலும் கடவுளின் அம்சங்கள் மானுட சாயலுடன் இருப்பது என்பது பொது அம்சமாகும். பொதுவாக சிறப்பாக உயர்ந்த மனப்பக்குவம் கொண்ட சமுகப்பிரிவில் உள்ள தனி நபர்களே இந்த உணர்வை தாண்டி உயர முடியும். ஆனால் மத உணர்வில் மூன்றாம் கட்டமாக ஒன்றை நான் கருதுவது உண்டு அது அபூர்வமாக சுத்தமான வடிவில் சிலரிடம் இருக்கும், அதனை நான் காஸ்மிக் ஆன்மீக உணர்வு (Cosmic Religious Feeling) என்று அழைக்கிறேன். இது கடவுள் பற்றிய மானுட சாயல் இல்லாத உணர்வாக இருப்பதால் முழுமையாக இந்த உணர்வு இல்லாதவர்களிடம் இதைப்பற்றி விளக்குவது கடினம். சிந்தனை உலகிலும் இயற்கையிலும் வெளிப்படுகிற விந்தைகளை உணர ஒருவனால் இயலாது போவதை அவன் உணர்கிறான். தனது வாழ்வு சிறைபடுத்தப்பட்டிருப்பதாக கருதுகிறான். அண்ட சராசரங்கள் அனைத்தையும் முழுமையாக கண்டு அனுபவிக்க விரும்புகிறான். இந்த காஸ்மிக் ஆன்மீக உணர்வானது மதங்கள் தோன்றியபோதே தோன்றிவிட்டது. இதற்கு டேவிடின் கூற்றுகள் இன்னும் சில ஞானிகளின் கருத்துக்கள் போன்றவற்றை உதாரணமாக கூறலாம். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாக் காலக்கட்டத்திலும் மதத்தின் தன்மைகளில் இந்த வகையான சமய உணர்வுகள் தெளிவாக இருந்திருக்கிறது. இந்த உணர்வுகள் மானுடத் தோற்றத்தில் கடவுள் என்றோ வேதங்கள் என்றோ அறியவில்லை. அதனால் தேவாலயங்கள் அமைத்து அதன் மூலம் மையப்படுத்தப்பட்ட போதனைகள் என்று எதுவும் இருக்கவில்லை. எனவே ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மத எதிர்ப்பாளர்களே இத்தகைய மேன்மையான சமய உணர்வுடன் இருந்தனர். அவர்கள் காலத்தில் அவர்கள் நாத்திகர்கள் என்றே கருதப்பட்டனர். சில சமயங்களில் ஞானிகளாகவும் கருதப்பட்டனர். இந்த வெளிச்சத்தில் டெமாகிரிட்டஸ், அசிசியின் பிரான்சிஸ், ஸ்பினோசா ஆகியோரைப் ஒன்று போலவே உணர்ந்தவர்கள் எனலாம். கடவுளைப்பற்றிய கருத்தும் இல்லாத வேதங்களும் இல்லாத காஸ்மிக் ஆன்மீக உணர்வை  எப்படி பிறரோடு பகிர முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;எனது கருத்து என்னவெனில் கலை, விஞ்ஞானம் ஆகிய இரண்டும் மக்களிடம் இந்த உணர்வை எழுப்புவதையும் உயிரோட்டமாக வைப்பதையும் முக்கிய கடமையாக கொள்ள வேண்டும். இந்த வகையில் மதத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் வழக்கத்திற்கு மாறான ஒரு உறவைப்பற்றிய கோட்பாட்டிற்கு வருகிறோம். வரலாற்று ரீதியாக பார்க்கும் போது விஞ்ஞானமும் மதமும் தீர்க்க முடியாத பகைமை முரண்பாட்டில் இருப்பதை ஒருவர் காண்பர். காரணகாரிய நியதிகளை சந்தேகத்திற்கிடமில்லாமல் ஏற்கும் ஒருவர் யாரோ தலையிட்டுதான் இது நடக்கிறது என்ற கருத்தை ஒரு நிமிடம் கூட ஏற்கமாட்டார். அவருக்கு பய அடிப்படையிலான மதமோ தார்மீக அடிப்படையிலான மதமோ இரண்டுமே தேவையில்லை. நல்லதுக்கு வரமும் கெட்டதுக்கு தண்டனையும் தரும் ஒரு கடவுளை அவர்களால் நினைத்துக் கூட பார்க்க இயலாது. ஏனெனில் ஒரு மனிதனின் செயலைத் தீர்மானிப்பது உள்ளார்ந்தோ அல்லது புறக்காரணிகளாலோ ஏற்படும் கட்டாயத் தேவைகளே. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகையினால் விஞ்ஞானம் மத உணர்வை மழுங்கடிக்கிறது என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு அநீதியானது ஆகும். ஒரு மனிதனது அற நடவடிக்கைள் பரிவு, கல்வி, சமூக பந்தம் ஆகியவைகளை அடிப்படையாக கொண்டிருக்கிறது மத அடிப்படை இதற்கு தேவையில்லை. செத்த பிறகு கிடைக்கும் தண்டனை அல்லது பரிசு என்ற நம்பிக்கை ஒருவனை நெறிபடுத்தவேண்டும் என்பது உண்மையில் மானுடத்தை கேவலப்படுத்துவதாகும்.  எனவே ஏன் மடாலயங்கள் விஞ்ஞானத்தை எதிர்த்து சண்டையிட்டன விஞ்ஞானிகளை வேட்டையாடின என்பதைக் காண முடிகிறது. மறுபக்கம் காஸ்மிக் ஆன்மீக உணர்வே விஞ்ஞானத் தேடலுக்கு உன்னதமானதும் வலுவானதுமான உந்து சக்தியாக இருக்கிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். மிகுந்த முயற்சியும் ஈடுபாடுமில்லாமல் துவக்ககால விஞ்ஞானத்தை அடைந்திருக்க முடியாது எனப்தை யார் உணர்கிறார்களோ அவர்கள் மட்டுமே உடனடி லெளகீக வாழ்க்கைக்கு அப்பால் இருக்கும் இயற்கையின் பிரமாண்ட எதார்தத்தைக் காணும் ஆதங்கத்தின் வலுவைப் புரிய முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;வானத்தில் உலாவும் ஜடப்பொருட்களின் இயக்க இயல் நியதிகளை விண்டுரைக்க நியூட்டனும் கெப்லரும் தனிமையில் உழைப்பை வருடகணக்கில் செலவழித்திருக்க வேண்டும் என்பதை யோசித்துப்பார்த்தால் இது புரியும். நடைமுறையில் பெறும் முடிவுகளை வைத்து விஞ்ஞான ஆராய்சி செய்பவர்கள் எளிதில் தவறான கருத்துகளுக்கு ஆட்படும் நிலை உள்ளது. அதிலும் அவர்களைச் சுற்றி விஞ்ஞானத்தின் மீது நம்பிக்கையற்ற உலகமிருக்கிறது. அதிலும் இந்த நம்பிக்கை கொண்டோர்களே உலகெங்கும் நூற்றாண்டுகளாக இருந்து வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணற்ற தோல்விகளைச் சந்தித்த பிறகும் விஞ்ஞானிகள் உறுதியுடனும் தனது நோக்கங்களில் விசுவாசத்தோடும்  இருப்பதற்கு காரணம் எது என உணர முடியும். அந்த காஸ்மிக் ஆன்மீக உணர்வே ஒருவனுக்கு இந்த பலத்தை தருகிறது. இன்றைய பொருள்முதவாத காலத்தில் ஒரு விஞ்ஞான ஆய்வாளனே உண்மையான முழுமையான ஆன்மீகவாதியாக இருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:  ’ மார்க்சிஸ்ட் ’  மாத இதழ் – ஏப்ரல் 2010 &lt;br /&gt;மொழிபெயர்ப்பு: வே.மீனாட்சி சுந்தரம் (சில சொற்றொடர்கள் என் புரிதலுகேற்ப மாற்றப்பட்டுள்ளன)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-1383560734102718687?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/1383560734102718687/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/05/1930.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/1383560734102718687'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/1383560734102718687'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/05/1930.html' title='மதமும் விஞ்ஞானமும் - ஐன்ஸ்டின்'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/S_vPx8QzcSI/AAAAAAAAAFA/_v5NqmjJIyU/s72-c/la_verite_vous_rendra_libre.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-8252870228711201576</id><published>2010-05-14T17:26:00.003+05:30</published><updated>2010-05-14T17:34:12.967+05:30</updated><title type='text'>நீலப்பூ - சிறுகதை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/S-08Hk5TUVI/AAAAAAAAAEw/1To6zclS8AY/s1600/calla-lillies-royal-angelina-vick.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 222px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/S-08Hk5TUVI/AAAAAAAAAEw/1To6zclS8AY/s320/calla-lillies-royal-angelina-vick.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5471095223185789266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அவன் மனம் குறுகுறுக்கத்துவங்கி விட்டது. இனி ஒரு வரியில் கூட மனம் செலுத்த முடியாதென உணர்ந்தான். சலிப்பாய் புத்தகத்தை மூடிவிட்டு அந்த நீல விளக்கையே வெறித்தான். அது நீல முட்டை போல் இருந்தது. எழுந்து போய் குழல் விளக்கை அணைத்து விட்டு அதன் ஸ்விட்சை தட்டினான். அறை நீலத்தில் ததும்பியது. மனம் சற்று பரபரப்படைந்தது. கட்டிலில் அமர்ந்து தலையணையை விலக்கிப் பார்த்தான். கட்டில் கம்பியில் மலர்ந்திருந்தது அது. அந்த நீல இருளில் தனியொரு நீலமாய் பளீரென ஒளிர்ந்தது. கொசுவலைக் கம்பிகள் சொருகும் இரும்பு குழலுக்குள் இருந்து நீண்டிருந்தது.  கட்டிலின் அடர் பச்சை வண்ணத்தில் இரும்பு கம்பிபோல குளிர்ச்சியாய் இருந்தது அதன் காம்பு. மெல்ல அந்தப் பூவை வருடினான். டேபிள் ரோஸ் போல, நீல வண்ணத்தில் ஒளிர்ந்தது. அதன் வாசனையை முகர்ந்தான். சோர்வாய் படுக்கையில் சரிந்தான். இப்போது அறையெங்கும் தாழையின் வாசமும் உடலின் வாசமும் கலந்த அந்தப் பூவின் மணம் பரவியிருப்பதாய் உண்ர்ந்தான். அது வெறும் பிரம்மையோ என்று மனம் ஒரு கணம் குழம்பியது. ஆனால் அந்த வாசம் அவன் நெஞ்சில் நிறைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அது நீண்டு தோள்பட்டை கழுத்தின் வழியே நெஞ்சில் படரத் துவங்கியது. “என்னை விடவே மாட்டியா”? என பலகீனமாய் முனகினான். அது கேட்டுவிட்டது போல் நிமிர்ந்து அவனைப் பார்த்து நின்றது. அவன் திகைத்தான். அதை மீண்டும் நெஞ்சோடு படுக்க வைக்க முயன்றான். முடியவில்லை. பிறகு அதுவாகவேப் படுத்து அவன் முகம் நோக்கிப் படர்ந்து வந்தது. மெல்ல அந்தப் பூவைத் தொட்டான், இப்போது அதில் உடலுக்கே உண்டான துடிப்பு ஒன்றிருந்தது. விரல்களால் அதை அளைந்தான். அதன் மைய இதழ்களைப் பிரித்துப் பார்த்தான். கடுகளவு சிறு கண் ஒன்று. கண்ணா? விதையா? கண்தான். கண்களுக்கே உண்டான நீர்மை நிறைந்திருந்தது அதில். அந்தக் கண் அவனையேப் பார்ப்பது போல் இருந்தது.  ஏனோ அவன் மனம் நெகிழ்ந்தது  ”என்னடா இப்படி பார்க்கிறே”? என்றான். அது அவன் கழுத்தை சுற்றிக் கொண்டு கட்டிலின் கீழே இறங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவன் கண்களை மூடிக்கொண்டான். மனம் பர பரவென முகங்களை தேடியது. காட்சிகளை தேடியது. அனைத்தும் மிக வறட்சியாய் செயற்கையாய் இருப்பதாய் பட்டது. அது கட்டிலின் எதிர்புறத்திலிருந்து மேலேறி உடலில் படரத் துவங்கியது. உடை நெகிழ அவன் வெறி கொண்டு அதைக் களிக்கத் துவங்கினான். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பேரலையால் இழுத்துச் செல்லப்படுவது போல் வசமிழந்தான். மனம் ஒடுங்கியது, சிதறியது, ஓர் அலை அவனை வானத்தில் தூக்கி எறிந்தது. அவன் வயிற்றில் படீரென வலி துடித்தது. உடல் வில்லாய் வளைந்து வானத்தில் பறந்தான். மிக உயரே போய் சரிந்து வேகமாய் கடலுக்குள் விழுந்தான். தண்ணீர் உடலில் ஊசியாய் அறைந்தது. சட்டென குளிர்ச்சி உடலில் பரவ அமிழ்ந்து கொண்டேயிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ்கடலின் நிச்சலனத்தில் சிறு துடிப்பாய் கிடந்தான். வெம்மையான கையொன்று அவன் உடலெங்கும் வருடிக் கொண்டிருந்தது. கண்களைப் பிரிக்கலாமா வேண்டாமா எனக் குழம்பி கனவில் கண்களைப் பிரித்தான். மீனின் உதடுகளை போன்ற உதடொன்று அவனை முகந்து கொண்டிருந்தது. நீலமும் பச்சையும் கலந்த விசித்திரமான நிறத்தில் ஒளிரும் கண்கள், பரபரத்து கண் விழித்தான், நீரில் கூந்தல் அளைய பின்பாதி மீனாய் சென்று கொண்டிருந்தது ஒரு உடல். கடல் கொடிகள் அவன் உடலை முறுக்கின. அதன் நீலம் விசிதிரமாயிருந்தது. அக்வாமறைன்...அக்வாமறைன் என முனகினான்..&lt;br /&gt;&lt;br /&gt;அவன் போதம் விழித்தது. அவனுடலில் எதுவோ நெளிந்து கொண்டிருந்தது. உடல் கசகசத்தது, அவன் தன்னை அருவருப்பாய் உணர்ந்தான். ஈரமும் வெப்பமுமாய் தன்னை கவ்வும் மர்ம நாவுகளை உதறிட முயன்றான். சட்டென அந்த உடலை தூக்கி எறிந்தான். மெல்ல சுணங்கி அது மீண்டும் படரத் துவங்கியது. அவனுக்கு எரிச்சலாயிருந்தது. “என்னை கொல்லாம விட மாட்டியா”? என்றான். அது மெதுவாக ஆனால் மூர்கமாக அவனைச் சுற்றிப் படரத்துவங்கியது. “உனக்கு என்ன வேண்டும் ஏன் என்னை வதைக்கிறாய்” என்றான் கோபமாக. அந்த அறை விசித்திரமான வாசத்தில் ததும்பியது. திராவகத்தின் வீச்சமும் பூவின் வாசமும் மூச்சிறுக்க அவன் சுவாசம் திருகினான். திடீரென அதை கரப்பான் பூச்சியென உணர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கால்துவள ஒடுபவனை துரத்திக் கொண்டே வருகிறது ஒரு இராட்சச கரப்பான் பூச்சி. தடுக்கி கீழே விழுகிறான். உடலெங்கும் ரணமாய் எழுந்த போது எங்கும் நீலம் நிறம்பிக் கிடக்கிறது. நீல வண்ண தார்சாலையின் இருபுறமும் நீல வண்ண மரங்கள் நீல வன்ண வானத்தில் நீல வண்ண சூரியன், வெளியெங்கும் நீல வண்ண ஒளி அவனின் மிக பக்கத்தில் ஒரு மரமென, நிலத்தில் புதைந்து நின்று கொண்டிருக்கிறது ஐந்து தலை பாம்பொன்று. நீல நாக்கை நீட்டி காற்றை உண்டபடி, வன்மமும் குரோதமும் மிளிர புஸ்...புஸ் என சப்தித்து அவனையே பார்த்தது. சட்டென நெஞ்சில் கொட்ட சதை பிய்ந்து தொங்குகிறது நீல வண்ண சர்பம் போல. பீதியாய் ஓடுபவனுக்கு இரு புறமும் நின்று கொண்டிருக்கின்றன ஐந்து தலை சர்ப மரங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முடிவற்ற பாதைகளில் ஓடிக் கொண்டேயிருக்கிறான். ஒரு குளம் வருகிறது. இறங்கி ஓடுகிறான், நீரில் மூழ்குகிறான். அவனுக்கு மூச்சு திணறுகிறது. உடல் குளிர்கிறது, கண் விழித்து பார்த்தான். போர்வை முகத்தை மட்டும் மூடியிக்க வெற்று உடல் மின் விசிறிக் காற்றில் நடுங்கிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தன் மீது கொடி போல் படர்ந்து கிடக்கும் அதனை பீதியுடன் பார்த்தான். இது பூவே அல்ல. இது நீலம், விஷம், விஷம் வயிற்றில் இறங்கி என்னை கொல்லாமலும், வாயில் வெளியேறி பிழைக்கவிடாமலும், தொண்டையில் நின்று வதைக்கும் ஆலகாலம். என் ஆக்ஞையை நசுக்கிக் கொண்டு தண்டுவடத்தில் பூத்திருக்கும் ஹைபோதாலமஸே உன்னை நான் நேசிப்பது போலவே வெறுக்கிறேன். ஒரு காப்பியின் சுவை போல நீ கசத்தினிக்கிறாய். காப்பி நதியின் கரையில் வளரும் இலைகளற்ற நீலப் பூவே உன் இராட்சச வேர்கள் என் நெருப்பை வற்றப் பருகாதிருக்கட்டும். அவன் உன்மத்தம் கொண்டவனாய் உளறிக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உறக்கமற்ற விழிகள் நெறுப்பென எரிந்தன. அவன் உதடை கவ்வியதொரு உதடு சிறுக அந்நெருப்பு உடலெங்கும் பரவியது. அவன் உடல் தகதகவென எரியத் துவங்கியது. நெருப்பின் ஆழத்திலும், நுனியிலும் எண்ணற்ற நீலப்பூக்கள் பூத்து உதிர்ந்து கொண்டிருந்தன. விர்ரென வான் நோக்கி பாயும் அதன் காம்பை பற்றினான் அது ஒரு சிறகுள்ள குதிரையாகி வானில் பறந்தது. தாவி அதில் ஏறினான். அவன் நீலமற்ற &lt;br /&gt;-4-&lt;br /&gt;நீலத்துக்குள் கரைந்தான். திடீரென அறையின் நீல வெளிச்சத்தில் மலர்ந்திருக்கும் நீலப் பூவை நினைத்தான். நீலத்தில் பூத்திருக்கும் தனியொரு நீலப் பூவாய் தனை உணர்ந்தான். மனம் லேசாகியது, கண்ணீர் பெருகியது. உடல் கனத்து விழுந்தான். விழுந்த இடம் நிலவு. தனியனாய் தனை உணர்ந்தான். தலைக்கு மேலே அவன் பூமி ஒரு நீலப் பூவென மிதக்கக் கண்டான். இலையும் காம்புகளுமற்ற நீலப்பூ. எதையோ புரிந்து கொண்டதைப் போல சிரித்தான். அவன் குதிரை சற்று தள்ளி நின்று கொண்டிருந்தது. அதன் பின்புறம் இவனை இம்சித்தது. வெறி கொண்டவனாய் தாவி அதன் மேல் அமர்ந்தான். வெளியெங்கும் நீல மீனகள் நிசப்தமாய் நீந்திக் கொண்டிருந்தன. நீலப்பூக்கள் மிதந்து போவது போல, மெல்ல கரம் வலுவிழந்தது. தோள்பட்டையின் பின்புறம் வலி எடுக்க துவண்டு விலகினான்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் முகத்தை எதுவோ வெப்பமும் ஈரமுமாய் முகர்ந்து கொண்டிருப்பது போல் உணர்ந்தான். கண் விழித்துப் பார்தான். சட்டென அந்தப் பூ எதையோ உள்ளிழுத்துக் கொண்டது. அவன் உடலெங்கும் கம்பளி பூச்சிகள் ஊர்வதாய் உணர்ந்தான். அறையின் வீச்சம் அவன் குடலை குமட்டியது. அவனால் எழ முடியவில்லை. “என்னை விடு, நான் பலவீனமானவன்” அதனிடம் கெஞ்சினான். அது மேலும் இறுகியது. அந்த பூவை பிய்த்தெறிந்து விட வேண்டும் என் எண்ணினான். ஆனால் அதைத் தொட இப்போது பயமாகவுமிருந்தது. “நான் என்ன பண்ணுவேன்” என  அரற்றினான். அவனுக்கே அவன் மேல் கழிவிரக்கம் வந்தது. கண்கல் கசிய தொண்டை அடைத்தது. சில கணங்கள் அப்படியே படுத்திருந்தான். அவன் அகங்காரம் விழித்தது. தன்னை சுற்றியுள்ள கொடியை பிய்ததெறிய பற்றி இழுத்தான். அது மேலும் மேலும் இறுகிக் கொண்டிருந்தது. “உன்னை கொல்லுவேன்” “உன்னை கொல்லுவேன்” என வெறி பிடித்தவனாய் பற்களை இறுக்கி அதைப் பிடித்து இழுத்தான். மீண்டும் உடைந்து அழுதான். அது அவன் உடலெங்கும் படர்ந்து கொண்டேயிருந்தது. இப்போது அவனை இறுக்கிய கொடிகளில் எண்ணற்ற நீலப் பூக்கள் மலர்ந்திருந்தன. அவ்வறையே நீல வெள்ளத்தில் ததும்பிக் கொண்டிருந்தது. மெல்ல அவன் நினைவிழந்தான். கண் விழித்த போது சுதந்திரமாய் தனை உணர்ந்தான். நன்கு விடிந்திருந்தது. அவசரமாய் தலையணையை விலக்கி கட்டில் கம்பியை பார்த்தான் அது வெறுமையாயிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : லும்பினி.இன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-8252870228711201576?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/8252870228711201576/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/05/blog-post_14.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/8252870228711201576'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/8252870228711201576'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/05/blog-post_14.html' title='நீலப்பூ - சிறுகதை'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/S-08Hk5TUVI/AAAAAAAAAEw/1To6zclS8AY/s72-c/calla-lillies-royal-angelina-vick.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-133981610235979282</id><published>2010-05-11T18:47:00.002+05:30</published><updated>2010-05-12T20:07:00.065+05:30</updated><title type='text'>லும்பினி.இன்</title><content type='html'>இன்று முதல் லும்பினி.இன் என்றொரு இணைய இதழ் துவங்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;பழைய ‘நிறப்பிரிகை’ இதழ்களை இந்த தளத்தில் படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;www.lumpini.in என்ற முகவரியில் இதை வாசிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இதழ் கொண்டுவந்ததன் நோக்கங்களாக சொல்லப்பட்டுள்ளதாவது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரம் எப்போதும் வரலாற்றில் எதிரிகளே இல்லாமல் இருந்ததில்லை. பென்னம்பெரிய சக்தியாய் அதிகாரங்கள் தங்களை நிலைநிறுத்தி நிறுவிக்கொண்டபோதிலும் அதற்கு எதிரான மறுப்புகளும் கலகக்குரல்கள், சின்னஞ்சிறு விசும்பல்கள், முனகல்கள் என பல்வேறு வடிவங்களிலாவது வரலாற்றின் இடுக்குகளிலிருந்து கசிந்து கொண்டு தானிருந்திருக்கின்றன. அத்தகைய எதிர்ப்புமரபைச் சேர்ந்தவர்கள் நாங்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதமும் நிம்மதியும் அடைகிறோம். குறிப்பாகத் தமிழ் பேசும் அடையாளம் கொண்ட மக்கட்பிரிவைச் சேர்ந்த நாங்கள் எமக்கான முன்னோடிகளாக புத்தர், மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் போன்ற சமூகப்போராளிகளைத் தேர்ந்துகொள்வதிலும் மார்க்சியம், பெண்ணியம், பின்நவீனம், தலித்தியம், பவுத்தம், பெரியாரியம் போன்ற கோட்பாட்டு வெளிச்சங்களில் அதிகாரங்களை விசாரணை செய்வதிலும் அதீத ஆர்வமும் வேட்கையும் கொண்டவர்களாயுள்ளோம்.&lt;br /&gt;அதிகாரங்கள் காலந்தோறும் புதிய புதிய பரிமாணங்களில் மாறிக்கொண்டிருக்கின்றன. மனிதர்களுக்கான சிக்கல்களும் வெவ்வேறு வடிவமெடுத்துக்கொண்டிருக்கின்றன. மாற்று அரசியல், மாற்று சிந்தனை, மாற்று எழுத்துகளை முன்வைப்பவர்களுக்கான பணிகளும் கடப்பாடுச் சுமைகளும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. இந்தியாவிலும் ஈழத்திலும், ஏன் புகலிடத்திலும் கூட சாதிய ஆதிக்கம், ஒடுக்குமுறை, வன்முறை என்பவை வெவ்வேறு முகங்களோடும் வெவ்வேறு தத்துவங்களோடும் தொழிற்படாமல் இல்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் நீளும் சாதியத்தின் கரங்கள் வளர்ந்துகொண்டுதானிருக்கின்றன. அவற்றிற்கு எதிரான எமது போராட்டங்களின் அவசியங்களும் ஓயப்போவதில்லை. மற்றொருபுறம் பெண்களுக்கான வெளிகளைச் சுருக்குவதிலும் கற்பு, கலாச்சாரம் மாதிரியான கட்டுத்தளைகளால் பெண்ணுடல் மற்றும் மனங்களை ஒடுக்கும் கருத்தியல்களுக்கு எதிரான போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.&lt;br /&gt;இந்தியச் சாதியமும் கொடிய இந்துமதமும் நம்மைப் பாரமாய் அழுத்தும் வேளையிலேயே உலகமயமாக்கல் என்னும் மாயப்பிசாசும் நம்மேல் வந்து அழுந்துகிறது. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மக்கள் கூட்டத்தை உற்பத்தி செய்வதிலும் பழங்குடிகள் உள்ளிட்ட விளிம்புநிலையினரின் வளங்களைச் சுரண்டி வாழ்வாதாரத்தை மறுப்பதிலும் உலகமயமாக்கலின் பங்கு பிரதானமானது. வெறுமனே பொருளாதார மேலாண்மை நிறுவுவது என்பதைத் தாண்டி அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டல், உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பவற்றின் பேரால் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகளாய்க் கட்டமைப்பதிலும் தனிமைப்படுத்தி ஒடுக்குவதிலும் இந்தியாவில் மாவோயிஸ்ட்கள், பழங்குடிப் போராட்ட இயங்கள் தொடங்கி உலகமெங்கும் எழும் எதிர்ப்புச் சக்திகளை இல்லாதொழிப்பதிலும் உலகமயச் சக்திகளுடன் உள்ளூர் அதிகாரபீடங்களும் கைகோர்த்துக்கொள்கின்றன. இத்தகைய இரட்டைச் சுமைகளை உணர்ந்தவர்களாய் இலக்கியம் பேசுவோரும் எழுதுவோரும் மாற்று அரசியலை முன்வைப்பதாய் நம்பும் சின்னஞ்சிறுக்குழுக்களும் இல்லை என்பது ஒரு வரலாற்றுச்சோகம்தான்.&lt;br /&gt;பார்ப்பனர்களாலும் வெள்ளாளர் போன்ற ஆதிக்கச்சாதிகளாலும் கைக்கொள்ளப்பட்ட இலக்கியத்தை, அதன் அரசியலைக் கட்டவிழ்த்து ஒடுக்கப்பட்டோருக்கான இலக்கிய வடிவங்களான தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம், விளிம்புநிலை ஆய்வுகள் குறித்த அறிமுகம் மற்றும் உரையாடலைத் தொடங்கிவைத்தல் ஆகியவற்றில் நிறப்பிரிகைக்கு ஒரு பிரதான பங்கு உண்டு. தொண்ணூறுகளில் வீச்சுடன் தொழிற்பட்ட நிறப்பிரிகையின் வீச்சு அமைப்பாகாத இயக்கமாகவே இருந்தது எனலாம். ஆனால் இடையில் ஏற்பட்ட பல்வேறு தளர்வுகளாலும் தொய்வுகளாலும் கோட்பாட்டு உரையாடல்களும் அரசியல் செயற்பாடுகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டு சிறுபத்திரிகைத் தளம் என்பதும் இலக்கியம் என்பதும் மீண்டும் ஒடுக்கப்பட்டோர் குறித்த கள்ள மவுனத்தைக் கடைப்பிடிக்கும் ரகசியத்தளமாகவும் அதிகாரத்திற்குத் தேவையான பணியாட்களை உற்பத்தி செய்யும் ஏஜென்சிகளாகவும் மாறிவிட்டதை அவதானிக்கிறோம். இப்போது பெரும்பாலும் இலக்கியம் என்பது நிறுவன உரிமையாளர்களால் ஒழுங்கு செய்யப்படுகிற கார்ப்பரேட் கம்பெனி நடைமுறைகளாக மாறிவிட்டன என்பதையும் உணர்ந்திருக்கிறோம்.&lt;br /&gt;உலகமயச்சூழல் ஆதாயத்தையும் ‘வளர்ச்சி’யையும் மட்டுமே பிரதானமாகக் கொண்ட, அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒரு தலைமுறையை உருவாக்கியதில் வெற்றிகண்டதைப் போலவே சிறுபத்திரிகை இலக்கியச்சூழலும் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட, அதிகாரங்களோடு உறவு கொண்ட ஒரு கூட்டத்தை உருவாக்கியுள்ளது. மற்றொருபுறம் இத்தகையச் சூழல் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தும் மக்களுக்கான போராட்டங்களைத் தொடர்ச்சியாகக் கட்டமைத்துப் போராடி அரசின் வன்முறையைச் சந்தித்து வரும் மார்க்சிய மற்றும் பெரியாரிய இயக்கங்களின் மீது எங்களுக்கு அளப்பரிய மரியாதை இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இவையும் கூட பெரும்பாலும் பன்மைத்துவ அடையாளங்களை மறுப்பதாய் தாங்கள் கட்டமைத்த ஒற்றை அடையாளச் செருப்பிற்காக கால்களை வெட்ட அலையும் ‘கொலைவெறி’யையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. பெண்ணெழுத்து, உடல் அரசியல், பன்மைத்துவ அரசியல் ஆகியவற்றை மறுப்பவையாகவும் எல்லாவற்றின் பின்னாலும் ‘ஏகாதிபத்தியச் சதியை’க் கண்டுபிடித்து விடக்கூடிய ஆண்களால் ஆண்களுக்காக நடத்தப்படுகிற புரட்சிகரக்கட்சிகளோடும் முரண்பட வேண்டியிருக்கிறது. மற்றொருபுறம் தேசிய மறுப்பாளனாகிய பெரியாரைப் புரிந்துகொள்ளாமல் தமிழ்த்தேசியத்தை முன்வைக்கும் இயக்கங்களாக பெரியாரிய அமைப்புகள் மாறிப்போனதும் சூழல் அவலம்தான்.&lt;br /&gt;இந்திய அரசு, அதன் அதிகாரம், ராணுவம் என்னும் வன்முறை எந்திரம், மக்கள் இயக்கங்களின் மீது பாயும் அதன் ஒடுக்குமுறை என எவற்றினோடும் எங்களுக்குச் சிறுமணலளவும் ஒப்புதல் கிடையாது. ஆனால் அதற்கு மாற்றாய்க் கட்டமைக்கப்படும் தமிழ்த்தேசிய இயக்கங்கள், தான் எதிர்ப்பதாய்ச் சொல்லும் அதே இந்திய அரசின் அதிகாரங்களை தமக்குள் ஏற்றுக்கொண்ட நுண்களங்களாக விளங்குகின்றன. இந்திய தேசியத்தின் கருத்தியல் இந்துத்துவமாக இருக்கிறதென்றால் தமிழ்த்தேசியத்தின் கருத்தியல் தமிழ்க்கலாச்சாரம் என்ற பெயரில் தமிழ்ப்பாசிசமாக இருக்கிறது. முஸ்லீம்கள், பழங்குடிகள் போன்ற வித்தியாசங்களை முன்வைக்கும் மக்கள்குழுவினரை ஒதுக்கித் தனிமைப்படுத்துவதில் இவ்விரு பிரிவினருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உலகமயமாக்கலின் ஆணைகளைக் கேள்விமுறையின்றி அமல்படுத்துவதில் இந்திய அரசுக்கு விருப்பம் அதிகம் எனில் தமிழ்த்தேசிய சக்திகளுக்கோ அதுகுறித்த எந்த மறுப்புமில்லை.&lt;br /&gt;‘’எங்களோடு இல்லையென்றால் நீங்கள் பயங்கரவாதிகளோடு இருக்கிறீர்கள்" என்றார் அங்கிள் புஷ். ‘’எங்களோடு இல்லையென்றால் நீங்கள் நக்சலைட்களோடு இருக்கிறீர்கள்" என்றார் மன்மோகன். ‘’எங்களோடு இல்லையென்றால் நீங்கள் ராஜபக்சேவோடு இருக்கிறீர்கள்" என்கிறார்கள் தமிழினவாதிகள். ஆக மொத்தம் இத்தகைய குரல்களின் எதிரொலியைக் கேட்டுக்கேட்டு கிறுக்குப்பிடித்து நிற்கிறோம். அடிப்படைவாதமும் பழமைவாதமும் உருவாக்கியுள்ள தடைகள் ஒருபுறம், நவீனம் என்ற பெயரில் நிகழும் மானுட அழிவுகள் மறுபுறமும் என ஒரு சிக்கலான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதில் எந்த சிக்கலுமில்லை.&lt;br /&gt;மாற்று அரசியலையும் எழுத்தையும் முன்வைப்பதற்கும் மறுக்கப்பட்டோரின் குரல்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் வெறுமனே காகிதங்கள் மட்டுமே போதுமானவையாக இல்லை என்பது நிதர்சனமாயுள்ளது. இணையம் என்பது இன்று உலகமெங்கிலும் தவிர்க்கமுடியாத இயங்குதளமாக மாறியுள்ளது. முற்போக்கு, பிற்போக்கு, வலதுசாரி, இடதுசாரி, ஒடுக்குபவர், ஒடுக்கப்படுபவர் என எல்லா அரசியல் சக்திகளும் இணையதளத்தில் இயங்குகின்றனர், தமக்கான கட்டமைப்புகளை உருவாக்குகின்றனர், தமக்கு உடன்பாடில்லாதவைகளோடு மல்லுக்கட்டுகின்றனர்.&lt;br /&gt;தமிழ் இலக்கிய மற்றும் அரசியல் வெளிகளில் சிறிதளவேனும் அதிர்வுகளையும் தாக்கங்களையும் உண்டுபண்ணியவர்கள், உரையாடல்களைத் தொடங்கி வைத்தவர்கள் என்கிற நம்பிக்கையோடு இணையதளத்திலும் அத்தகைய தொடர்ச்சியைப் பேணும் முயற்சியே ‘லும்பனி’. நாங்கள் என்ன பேசுவோம், எழுதுவோம் என்பது யாருமறியா ரகசியங்கள் அல்ல. தலித்தியம், பார்ப்பன, பார்ப்பனிய, இந்துத்துவ எதிர்ப்பு, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு தளங்களிலும் நிபந்தனையற்ற விடுதலையைக் கோரும் பெண்ணியம், பழங்குடிகள், திருநங்கைகள் உள்ளிட்ட விளிம்புநிலையினரின் அரசியல், உலகமயத்தின் பொருளாதார, அரசியல் பின்னணிகளை அம்பலப்படுத்துவதும் அதற்கு எதிரான கிளர்ச்சிகளும், தேசியத்தின் மொத்தத்துவ வன்முறையைக் கேள்விகேட்டல், நிறுவப்பட்ட எல்லா பெருங்கதையாடல்களுக்கும் எதிரான உடைப்புகள் ஆகியவையே எமது பணி. கருத்து விலகல்களையும் வேறுபாடுகளையும் அங்கீகரிப்பையும் கறார்த்தன்மையில்லாத அரசியல் புள்ளிகள் ஒன்றிணைவையும் முன்வைக்கிறோம். இந்த புள்ளியிலிருந்து நம் உரையாடலைத் தொடங்குவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-133981610235979282?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/133981610235979282/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/05/blog-post_11.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/133981610235979282'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/133981610235979282'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/05/blog-post_11.html' title='லும்பினி.இன்'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-5960030380192535487</id><published>2010-05-02T16:16:00.003+05:30</published><updated>2010-05-02T16:20:27.237+05:30</updated><title type='text'>சாம்பல் சுவர் - சிறுகதை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/S91Y2SyJ8mI/AAAAAAAAAEo/bYnd_oKlKkw/s1600/Chevening.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 295px;" src="http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/S91Y2SyJ8mI/AAAAAAAAAEo/bYnd_oKlKkw/s320/Chevening.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5466623212476035682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நான் இந்த சந்திற்குள் எப்படி வந்து சிக்கிக் கொண்டேன் எனத் தெரியவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் முன்னும் பின்னும் நீண்டு கொண்டே செல்லும் ஒரே சீரான சந்து. உண்மையில் இது சந்துதானா என்றும் தெரியவில்லை. ஐந்தடி இடைவெளியில் ஒரே நேர்கோடாக நீண்டு செல்லும் சுவர்கள், இரண்டும் எவ்வளவு உயரம் என்றும் தெரியவில்லை. அண்ணாந்து பார்த்தால் வானத்தின் விளிம்பு வரை வளர்ந்திருக்கிறது இருபுறமும். வானம் நீலத் துண்டாக தெரிகிறது. சில சமயம் மேகங்கள் ஊர்ந்து செல்வதையும் எப்போதாவது பறவைகள் போவதையும் பார்க்கிறேன். நேரே நீண்டு கொண்டே செல்லும் சந்தின் இடப்பக்கமோ வலப்பக்கமோ வேறொரு பாதை கிளை பிரிகிறது. அந்த சந்தும் நீண்டு சென்று கொண்டே இருக்கிறது. முன்னும் பின்னும் எல்லா சந்துகளும் ஒன்று போலவே உள்ளன. சாம்பல் வண்ண சுவர்கள். எப்படி இங்கு வந்தேன்? என் சக மனிதர்கள் என்ன ஆனார்கள்? பூமியில் இது எங்குள்ளது? இறுதியாக நான் என்ன செய்துகொண்டிருந்தேன். எவ்வளவு யோசித்தும் பலனில்லை தலையில் நரம்பொன்று அறுந்து விழுவது போல் விண்ணென்று வலித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;‘உதவி, உதவி....’ எனக் கத்துகிறேன் சற்று தொலைவில் எதிர்க்குரல் வருகிறது ‘உதவி, உதவி...’ சத்தம் வந்த திசை நோக்கி வெறி கொண்டவாறு ஓடுகிறேன். உடல் தளர ஓடி நின்று பார்க்கிறேன் யாரையும் காணவில்லை. ஒருவேளை அது எதிரொலியாய் இருக்குமோ? எனக்கு சோர்வாய் இருக்கிறது. ஓடி வந்ததில் உடல் வியர்த்துக் கொட்ட மூச்சிறைக்க மண்டியிட்டு அமர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் கத்துகிறேன். &lt;br /&gt;“உதவி, உதவி...”&lt;br /&gt;“உதவி, உதவி...” எதிர்குரல் வந்த திசை நோக்கி ஓடுகிறேன். மூச்சு வாங்க நிற்கிறேன். ஒருவேளை இடது பக்கமோ வலது பக்கமோ கிளை பிரியும் சந்துகளில் செல்ல வேண்டுமோ? எத்தனை கிளைச் சந்துகளை கடந்து வந்தேன் நினைவில்லையே. ஐயோ என்ன இழவு இது சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன். சத்தம் வரும் திக்கை சரியாக குறித்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;“உதவி, உதவி...” கத்துகிறேன்&lt;br /&gt;உதவி, உதவி...” சரியாக இடது மேல் புறம் ஓடு.... ஓடு... கால் பின்ன நேரே ஓடி முதல் இடது சந்தில் நுழைந்து நேரே ஓடுகிறேன். இப்போது இடதா? நேரா? மீண்டும் இடதில் திரும்பி நேரே ஓடிக் கொண்டேயிருக்கிறேன். கால் துவள கீழே விழுகிறேன். கண்கள் இருள்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தேன் தெரியவில்லை. குதிகாலும், தொடையும் அசைக்கமுடியாதபடி வலிக்கின்றன. கடவுளே என்ன இது? இது ஒரு கனவாய் இருக்க கூடாதா? வெறுப்பாய் எழுந்து அமர்கிறேன். கால் மூட்டில் எரிகிறது. கால்சராய் கிழிந்து சாறுகாயத்தில் இரத்தம் துளிர்த்திருக்கிறது. தாகமாய் உள்ளது. உதடுகளை நாவால் ஈரமாக்கிக் கொள்கிறேன். ஒரு மோசமான புதிரில் வந்து மாட்டிக் கொண்டேன் என மனம் திகிலில் உறைகிறது. மீண்டும் மீண்டும் மனம் யோசித்து யோசித்து சோர்ந்தது எப்படி இங்கு வந்தேன். எப்படிச் செல்லப் போகிறேன். பின்னந்தலையில் இருந்து வலி கழுத்துப்பட்டைக்கு பரவ சுவரில் சாய்ந்து அமர்கிறேன். இப்போது மணி என்ன? இன்னும் இரவு வர எவ்வளவு நேரம் உள்ளது. அதற்குள்ளாக இதிலிருந்து வெளியேற வேண்டும். ச்சீ! எவ்வளவு பைத்தியகாரத்தனமாய் எதிரொலியை எதிர்க் குரல் என நம்பி ஏமாந்தேன். ஆனால் அது எதிரொலி போல ஒலிக்கவில்லையே. எவ்வளவு துல்லியமாய் ஒரு மானுடக் குரல் போலவேயிருந்தது. மீண்டும் கத்தலாமா? வேண்டாம் சோர்வாயிருக்கிறது. முட்டாளே கத்தித்தான் பாரேன். சும்மாயிருபதிலும் ஏதாகிலும் செய். இந்த நரகத்திலிருந்து வெளியேறியேயாகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;“உதவி, உதவி...” &lt;br /&gt;“உதவி, உதவி...” இம்முறை வலது பக்கத்தில் சரி ஓடு... ம்... இன்னும் வேகம்....வேகம்....வேகம்...திரும்பு.....ஓடு...ஓடு...ஓடு...&lt;br /&gt;&lt;br /&gt;மூச்சிறைக்கிறது. அது எதிரொலிதான். இனி துணைக்கு ஆள் தேடி பலனில்லை. நாமாக போய்ச் சேர வேண்டியது தான் ஆனால் எந்த வழி? நேரே கொஞ்ச தூரம் போய் கொண்டேயிருக்கிறேன். மனம் சிந்திக்கும் திறனை இழந்து கொண்டிருக்கிறது. எண்ணங்கள் தாறுமாறாய் ஓடுகின்றன. என்ன இது... என்ன இது.... என அரற்றிக் கொண்டேயிருக்கிறேன். அது எதிரொலி என்றால் ஒரு முறை வலது பக்கமும் மற்றொரு முறை இடது பக்கமும் ஒலிப்பது எப்படி? மனம் தடுமாறுகிறது. மீண்டும் கத்து. கத்தினேன். இம்முறை பின் பக்கம் ஒலித்தது உன்மத்தம் பிடித்தவன் போல் நேரே ஓடிக் கொண்டேயிருந்தேன். எவ்வளவு தூரம் வந்து விட்டோம் போதும் நில். அது எதிரொலிதான். நீ எங்கிருந்து கத்தினாலும் ஒரே திசையிலிர்ந்துதான்  எதிரொலி வருமாறு கட்டப்பட்டிருக்கிறது இந்த புதிர்ப்பாதை புரிந்ததா?. பைத்தியம் போல் இனி ஓடிப் பயனில்லை.  முதலில் இந்தப் புதிரின் ஜியோமிந்திரியை புரிந்து கொள்ள முயற்சி செய். மொத்தம் எத்தனை சந்துகள் இருக்கக் கூடும்? ஒரு ஐந்து அல்லது ஆறு சந்துகளுக்குள்தா நான் திரும்ப திரும்ப அலைந்து கொண்டிருக்கிறேனா? இந்த சுவர் பாதை நீண்டு செல்லும் தூரம் பார்த்தால் அப்படி தோன்றவில்லை. சில நூற்றுக் கணக்கான சந்துகளாவது இருக்க வேண்டும். இதன் வடிவம் என்னவாக இருக்ககூடும்? நிச்சயம் சதுரம் அல்லது செவ்வகம்தான். வட்டம் என்றால் நேர்கோடுகள் வளைந்தாக வேண்டுமே? ஆனால் புதிர்பாதையின் இறுதி சந்து மட்டும் வளைவது போல் அமைக்கப்பட்டு உட்புறம் சதுரமாகவோ செவ்வகமாகவோ இருக்குமோ? எதுவானாலும் நாம் இறுதி சந்திற்குள் இருந்தால்தான் சொல்ல முடியும். மேலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீளும் ஒரு சந்து வளைவதை கண்டுபிடிப்பது சிரமம் ஆயிறே. &lt;br /&gt;&lt;br /&gt;முட்டாளே போதும் நிறுத்து உன் ஜியோமிந்திரி ஆராய்சியை. பிதாகோரஸ் என்று நினைப்பா? எழுந்து ஓடு. ஓட்டம் ஒன்றே விடுதலையை தரும். உன் ஆன்ம சக்தியை ஓட்டத்திலன்றி வேறெதிலும் செலவிடாதே. எப்படி ஓட இது ஒரு நேர்கோடடென்றால் எவ்வளவு செளகர்யம். ஓடிக் கொண்டேயிருக்கலாம். நிச்சயம் ஏதாவது ஓர் புள்ளியில் வெளியே சென்று விடலாம். கத்தலாமா? தொண்டை வலிக்கிறது. நாக்கு உலர்ந்து விட்டது. தண்ணீருக்காக மனம் ஏங்கியது. நாவால் உதடுகளை ஈரமாக்கிக் கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;”உதவி, உதவி...” இம்முறை நேர் எதிர்திசையில் குரல் வருகிறது. உடல் துவள ஓடினேன். மூச்சிறைக்க சோர்ந்து மண்டியிட்டு நின்றேன். அது எதிரொலிதான் சந்தேகமே இல்லை. ஆனால் அதை நம்புவதைத் தவிற எனக்கு வேறு வழி தெரியவில்லை. பாம்போ பழுதோ கிடைப்பதை பிடித்து மேல் ஏறிச் செல்வதுதான் புத்திசாலித்தனம். ஒருவேளை அதுவும் ஒரு மனிதனாகயிருந்தால் எவ்வளவு பிரயோஜனப்படும். என்ன பிரயோஜனம்? இந்த நரகத்தில் ஒரு சகமனிதன் என்ன செய்து விட முடியும்? மேலும் அவனும் என்னைப் போலவே இதில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவிப்பவன். ஆனால் அப்படிச் சொல்லவிட முடியாது. அவன் நமக்கு முன்பிருந்தே இங்கே இருப்பவனாய் இருக்கக் கூடும். &lt;br /&gt;இந்த புதிர்ப்பாதையை பற்றி நமக்கு தெரியாத ஏதாவது ஒரு செய்தியை அவன் வைத்திருக்க கூடும். என்ன உளறுகிறாய்? இந்த இழவிலிருந்து வெளியேற பயன்படும் செய்தி அவனிடம் இருந்தால், அவன் வெளியேறியிருக்கமாட்டானா? இங்கு கிடந்து ஏன் லோல்படுகிறான். அப்படியும் சொல்லிவிடமுடியுமா? அந்த செய்தி முக்கியமற்றது என அவன் நினைத்திருக்கலாம் அல்லவா? சீசி! என்ன பித்துக்குளி எண்ணம் இன்னும் ஒருவனையும் பார்கவில்லை. யாரேனும் இருக்கிறார்களா இல்லையா தெரியவில்லை. இது என்ன வீண் நினைப்பு. அது எதிரொலிதான் சந்தேகமே இல்லை. சரி இறுதியாக ஒரு முறை கத்து. யாராவது தென்பட்டால் உன் அதிர்ஷ்டம். இல்லை எனில் இப்படி கிறுக்கனைப் போல் கத்துவதை நிறுத்தி விட்டு வேறு வழிமுறைகளைப் பார்.&lt;br /&gt;&lt;br /&gt;“உதவி, உதவி...”&lt;br /&gt;“உதவி, உதவி...”&lt;br /&gt;&lt;br /&gt;சத்தம் வந்த திக்கை குறித்துக் கொண்டு வெறிகொண்டு ஓடினேன். மூச்சிறைக்கிறது. உடல் வேர்க்கிறது. கால்கள் பின்னுகின்றன. மனம் தளராதே ஓடு...நேராக ஓடிக்கொண்டேயிரு....நெஞ்சு வலிக்கிறது. மெல்ல ஓட்டத்தை தளர்த்தி நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்கிறேன். துயரம் தொண்டையை கவ்வுகிறது. அண்ணாந்து பார்க்கிறேன். மேகங்களின் கீழே சட்டென பறந்து கடந்தது ஒரு கறுநிறப் பறவை. இனி சாகும் வரை இப்படித் தானோ. இங்கேயே குடிக்க நீரின்றி உணவின்றி செத்து சுண்ணாம்பாக போகிறேனா? என்னவர்கள் எல்லோரும் எங்கிருக்கிறார்கள்? என்ன ஆனார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;சற்று தொலைவில் ஏதோ சிரிப்புச் சத்தம் கேட்டது. அதிர்ந்து போய் அந்த திடை நோக்கி ஓடினேன். அங்கொரு சாம்பல் வண்ண சன்னல் இருந்தது. சாத்தப்பட்ட அதனுள்லிருந்து ஒரு ஆணும் பெண்ணும் பேசி சிரித்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. அவளின் சிரிபொலிதான் அப்போது நான் கேட்டது. இதென்ன வீடா? விடுதியா? சன்னல் இருக்கிறதே...கதவு எங்கே இருக்கும். பலம் கொண்டு சன்னலை தட்டுகிறேன். &lt;br /&gt;உதவி..உதவி...யாரது அம்மா நானிங்கு மாட்டிக் கொண்டேன் காப்பாற்றுங்கள். இது எந்த இடம்? நீங்கள் யார்? உதவி...உதவி... எவ்வளவு நேரம் சன்னலை தட்டுவதும் கேட்பதுமாய் இருக்கிறேன். என் மன்றாடலோ, கேவலோ அவர்களின் செவியில் விழுந்ததாகவே தெரியவில்லை. அவர்கள் பேசிக்கொண்டேயிருந்தார்கள். அவள் கல கலவென சிரித்தாள். நான் கோபத்தில் கத்தினேன். வேசை மகளே கதவை திறடி. ஒருவேளை தொலைக்காட்சியாய் இருக்குமோ? அப்படியிருந்தாலும் பார்துக் கொண்டிருப்பவர்கள் இருப்பார்களே. இதற்கு கதவு ஒன்று இருக்குமே பார்த்து விடலாம். அந்த சன்னலிலிருந்து சுமார் கால் மணிநேரம் நடந்த பின் இடது புறம் ஒரு சந்து திரும்புகிறது. அதில் நுழைந்தேன். மீண்டும் ஒரு அரைமணி நேரமாவது நடந்திருப்பேன். அதுவும் இடது பக்கம் திரும்பியது. என்ன இது இவ்வளவு பெரிய கட்டிடமா? மீண்டும் கால் மணிநேரம் நடந்து இடது புறம் திரும்பி அரைமணி நேரம் நடந்தேன். மீண்டும் அந்த சன்னல் இருந்த இடத்திற்கே வந்து விட்டேன். என்ன இது கதவே இல்லையா? உள்ளே மனித சத்தம் கேட்கிறதே. அந்தப் பெண் சிரித்துக்கொண்டேயிருப்பதைக் கேட்டேன். தாயே கதவை திற கத்தினேன். பலம் கொண்ட மட்டும் சன்னலை தட்டினேன். ம்ஹிம். பிசாசுகள் என்ன சிரிப்போ? என்ன சரசமோ? யேய் கதவை திறடா நாயே. சோர்ந்து தரையில் அமர்ந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;உடலில் உள்ள சக்தி முழுதும் திரட்டி கத்தினேன். உதவி...உதவி...&lt;br /&gt;நேர் இடது புறம் எதிரொலித்தது. வறட்சியாய் புன்னகைத்தேன். முட்டள் எதிரொலியே வாயை மூடு பைத்தியமே. மீண்டும் கத்தினேன். தொடர்ந்து கத்திக் கொண்டேயிருந்தேன். அட இதென்ன இம்முறை எதிரொலி வரவில்லை. அப்படியானால் அது எதிரொலி இல்லையா? பரபரபாய் கத்தினேன். நிசப்தம். மீண்டும் கத்தினேன் நிசப்தம். முட்டாளே இது வரை கேட்டுக் கொண்டிருந்தது எதிரொலி இல்லை. யாரோ இருக்கிறார்கள். ஆனால் அவன் ஏன் நான் கத்தும் போது மட்டும் பதில் குரல் கொடுக்கிறான். அவனாக கத்தினால் என்ன? மீண்டும் கத்தினேன். நிசப்தம். சில இடங்களில் எதிரொலி வருவது போன்றும் சில இடங்களில் எதிரொலி வராதது போன்றும் கட்டப்பட்டுள்ளதோ இது. சரி பார்கலாம் மறுமுறை எதிரொலி வரும் போது வேறு ஏதாவது சொற்களை கொண்டு கத்தலாம். ஒருவேளை எல்லாமே அமானுஷ்யமோ? சன்னல் பின்புறம் கேட்ட குரல், எதிரொலி எல்லாம் தன்னை குழப்புவதற்காக திட்டமிட்டு மாற்றி மாற்றி செய்யப்படுகிறதா? கதவற்ற சன்னல், பதிலற்ற பேச்சுக் குரல்கள் ஒருமுறை ஒலித்தும் மறுமுறை ஒலிக்காத எதிரொலி என்ன பயங்கரம் இது? பீதியில் உடல் வியர்க்கத்துவங்கியது. உடலும் மனமும் சோர்ந்திருக்கின்றன. இந்த பாதை இன்னும் எவ்வளவு தூரம் நீளும். படைப்பின் எந்த தர்க்கத்தில் இது இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த சூட்சமத்தை நான் அறிவதெப்படி? அதை அறியாமல் நான் இதிலிருந்து விடுபடுவது எப்படி? அடிமனம் நம்பிக் கொண்டிருகிறது எல்லாம் சரியாகி விடுமென. ஆனால் எப்படி? என்னை கொஞ்சம் கொஞ்சமாக சிதறடித்துக் கொல்லத்தான் எனக்கு நம்பிக்கை ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது.  உண்மையில் நம்பிக்கையையும் பிரயாசையையும் போல நம்மை காக்க வைத்து சிதறடிக்கிற பிசாசுகள் வேறு எதுவுமே இல்லை. நம்பாதே என் மனமே. ஆனால் இந் நரகத்தில் இருந்து என்னை ஆற்றுப்படுத்துகிற ஒரே விடயம் நம்பிக்கை மட்டும் தானே? ஆசுவாசமும் நிம்மதியும் கூடிய இடத்திற்கு எனை காவிச் செல்லும் சிறகுகளை அவைகள் மட்டுமே கொண்டிருக்கின்றன. அதையும் கைவிடுகிற கணம் நான் மரித்துதான் போயிருப்பேன். ஏன் மரித்தால்தான் என்ன? விடுதலையின் உண்மையான பொருள் மரணம் அல்லவா? நீ சொல்கிற ஆசுவாசமும் நிம்மதியும் கூடிய இடம் என்பதின் பொருள் மரணம் அல்லவா? ச்சீ! என்ன இது மரணத்தை பற்றி நான் ஏன் யோசிக்க வேண்டும். இது எந்த இடமோ?  என்ன ஏற்பாடோ? என் பிரக்ஞையின் அனுமதியோடா நானிங்கு வந்தேன். அது போலவே என்னையுமறியாமல் இங்கிருந்து சென்றிடுவேன். இதை ஒரு விளையாட்டு என நினைத்துக் கொள். நீ உன் குழந்தைகளிடம் விளையாடுவாயே அதைப் போல. அனைத்தும் சரியாகி விடும். என் மனதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. மணி என்ன இன்னுமா மாலை வரவில்லை?  நானிங்கு வந்து பல மணி நேரம் ஆயிற்றே? மீண்டும் சிரிப்புச் சத்தம் கேட்டது எழுந்து தள்ளாடியபடியே நடந்தேன். சோர்வாக சன்னலை தட்டினேன் ஐயா... மீண்டும் ஒரு முறை தட்டினேன்.  அடப் போங்கடா.&lt;br /&gt;&lt;br /&gt;சோர்ந்து போய் நடக்கத்துவங்கினேன். கால்கள் அமரச் சொல்லி கெஞ்சின. மனதில் இனம் புரியாத வன்மம் பொங்கியது. நட அமராதே. அமராதே நடந்து கொண்டேயிருந்தேன். கால் குதிரை சதையில் நரம்பு வலித்தது. ம்ஹீம் அமரக் கூடாது நான் அமர மாட்டேன். நட..நட...நடக்காதே ஓடு...ஓடு... கால்கள் கதறின. முடியவில்லை வேண்டாம். நான் ஓடிக் கொண்டேயிருந்தேன். எவ்வளவு நேரம் எவ்வளவு தூரம் இரண்டு பக்கமும் சாம்பல் சுவர் நழுவிக் கொண்டே செல்கின்றன. நான் போதமிழந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்விழித்த போது கீழே விழுந்து கிடந்தேன். எப்போது மயக்கமானேன். இன்னும் சாகவில்லையா? சிறிது நேரம் அப்படியே அரைமயக்கமாய் கிடந்தேன். மனதில் எனென்னவோ தோன்றி மறைந்தன. மனைவியின் பேச்சுக் குரல் கேட்கிறது. அவள் யோனியின் அலர்வாடை நினைவுக்கு வருகிறது. ஏதோ சினிமா பாடல் மனதி ஓடுகிறது. இவ்வளவு பிரச்சனையிலும் ஒரு சினிமா பாட்டை மனம் ரசிக்கிறதா என்ன? எழுந்து உட்கார். வேண்டாம் இப்படியே கிட. எழுந்திரு போக வேண்டும் மனம் நச்சரித்துக் கொண்டேயிருக்கிறது. பரவாயில்லை கிட என்று ஒரு நினைவு. சிறிது நேரம் கழித்து எழுந்து நடந்தேன் எந்த புறம் போவது. எங்கு போனால் என்ன? மனம் போன போக்கில் போ. ஆனால் இது தவறு. இது நிச்சயம் ஏதாவது ஒரு முறைமையில்தான் அமைக்கப்பட்டிருக்கும். முறையாக பயணம் செய். மீண்டும் கத்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உதவி...உதவி..&lt;br /&gt;.......  ........ பதில் குரலில்லை. உதவி...உதவி.. கத்திக்கொண்டே ஓடினேன். ஓடிக் கொண்டே கத்தினேன். போதும் நில். கண்களில் நீர் திரள சாம்பல் சுவரையே பார்த்தேன். மனதில் வெறி பொங்க சுவரை ஓங்கி குத்தினேன். எட்டி உதைத்தேன். மறந்து தொலை...மறந்து தொலை சைத்தானே. அதன் மேலேயே சாய்ந்து அழுதபடி அமர்ந்தேன். சட்டென மனதை உதறிக் கொண்டேன். ச்சீ. எவ்வளவு நாடகத்தன்மையோடு நடந்து கொள்கிறோம். மீண்டும் எழுந்து நடந்தேன். எட்டி உதைத்ததில் கால் விரல்களில் நல்ல அடி வலி பிடுங்கியது. நடந்து கொண்டேயிருந்தேன். ஏதோ பேச்சு சப்தம் கேட்டது. நேரே சிறிது தூரம் நடந்து போனேன். இடது பக்க சந்தில் எட்டிப்பார்த்தேன். யாருமில்லை. சில அடி நடந்ததும் இரண்டு சன்னல்கள் எதிர் எதிர் சுவரில் இருந்தன. இரண்டு பெண் குரல்கள் இரண்டிலிமிருந்து மாறி மாறி கேட்டன. ஆனால் அது என்ன மொழி புரியவில்லை. இரண்டு சன்னலின் பின்புறம் இருந்தும் ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டிருந்தார்கள். யாரது? என்றேன். பேச்சு சத்தம் சிறிது நின்றது. அம்மா... உதவி செய்யுங்கள் நானிங்கு மாட்டிக்கொண்டேன். ஒரு பெண் ஏதோ பேசினாள். புரியவில்லை. என்ன சொன்னீர்கள். மீண்டும் அவள் ஏதோ சொன்னாள். அம்மா புரியவில்லை...புரியவில்லை என்று கத்தினேன். அவளும் வேகமாக ஏதோ கத்தினாள். எதிர் ஜன்னலில் இருந்து ஒரு சிரிப்பொலி கேட்டது. நான் கோபமாய் அதைப் பார்த்தேன். சிரித்தவள் ஏதோ சொன்னாள். பதிலுக்கு அவளும் சொன்னாள் அவர்கள் உரையாடிக் கொண்டேயிருந்தார்கள். நான் கத்திச் சோர்ந்தேன். அடச்சீ! இந்த வீடுகளுக்காவது கதவு இருக்குமா? எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் அதைச் செயவதைத் தவிற எனக்கு வேறு வழி தெரியவில்லை. நெடுநேரம் சுற்றிய பின் முதல் வீட்டின் ஜன்னலுக்கே வந்து சேர்ந்தேன். சரி எதிர்புற சுவரைப் பார்க்கலாம். இது சற்று விரைவாகவே முடிந்து விட்டது. ஆனால் என்ன அதுவும் ஜன்னலுக்கே வந்து சேர்ந்தது. இரண்டாவது வீட்டை சுற்றி வந்த போது வேறொரு சுவரில் ஒரு ஜன்னலைப் பார்த்தேன். அங்கே போகலாமா? மீண்டும் அங்கே போய்க் கத்தினேன். நிசப்தமாய் இருந்தது இனி ஜன்னலை நம்பிப் பயனில்லை. நேரே ஓடிக் கொண்டேயிருக்கலாமா? எப்படியும் இறுதி வந்துதானேயாக வேண்டும். புத்திசாலித்தனம் என்ற நினைப்பில் நமக்கு தெரிந்ததை நாம் செய்துகொண்டிருக்கிறோம் அவ்வளவுதான் உண்மை எங்கோ உள்ளது. சிறிது தூரம் நடந்தேன் சிறிது தூரம் ஓடினேன். மீண்டும் ஒரு ஜன்னல் வந்தது. தட்டினேன். எதிர்புறம் இருந்து ஒரு சிறுமி பேசினாள். &lt;br /&gt;‘மகளே! எனைக் காப்பாற்று’&lt;br /&gt;அவள் என்னவோ பதிலிருத்தாள் ஆனால் என்ன மொழி இவள் என்னுடந்தான் பேசுகிறாளா? குழப்பமாய் எதிர்திசை பார்த்தேன். ஜன்னல் இல்லை. மீண்டும் கதவைத் தட்டினேன். அச்சிறுமி ஏதோ பேசினாள். எனக்குப் புரியவே இல்லை. நான் ஏதேதோ சொல்லிப் புரிய வைக்கப்பார்த்தேன். அவள் ஏதோ ஒரு சொல்லை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள். என்ன வார்த்தையது புரியவில்லை என தன் மொழியில் சொல்கிறாளா? ஒருவேளை இங்கிருந்து தப்பிப்பதற்கான மந்திர சொல்லா? ச்சீ மந்திரமாவது தந்திரமாவது. அது ஏன் ஒரு மந்திரச் சொல்லாய் இருக்கக் கூடாது. &lt;br /&gt;நான் மீண்டும் மகளே! மகளே என்றேன் அந்தக் குழந்தை அந்த சொல்லையே திரும்ப திரும்ப சொன்னது. நானும் அந்த குழந்தை சொன்னதையே சொல்லிக் காட்டினேன் பதிலுக்கு அது வேறு என்னவோ சொன்னது. இது என்ன மந்திரத்தின் அடுத்த வரியா? ச்சீ குழந்தைக்கு என்ன மந்திரம் தெரியும் உளராதே. ஒரு வேளை மந்திரச் சொல்லாக இருந்தால் கூட அதைச் சொன்னால் என்னவாகும் என்று உறுதியாக தெரியுமா? இந்த புதிரிலிருந்து தப்பிப்போமா? சிக்கல் அதிகமாகுமா? என யாருக்குத் தெரியும். அமைதியாய் இரு. இந்த வீட்டிற்காவது கதவு இருக்குமா? குழந்தை பதில் பேசுகிறதே இருந்தாலும் இருக்கக் கூடும். சொற்ப நிமிடங்களிலேயே அந்த சதுரத்தை சுற்றி முடித்துவிட்டேன். ஆனால் என்ன இது அந்த ஜன்னலை காணவில்லையே! மறைந்து விட்டதா என்ன?  இந்த சுவரில் தானேயிருந்தது. சுவரை நன்கு உற்றுப் பார்த்தேன். ஜன்னல் இருந்த இடமே தெரியவில்லை. பயத்தில் கை, கால் நடுங்கத் துவங்கியது. ஐயோ! எனக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருக்கிறது. பீதியில் உடல் குலுங்க ஓடினேன். கொஞ்சம் தொலைவில் நிலத்தில் ஏதோ கிடப்பது போல் தெரிந்தது. பக்கம் போய் பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்தேன். அது ஒரு எலும்புக் கூடு. ஒரு மனிதனின் முழு எலும்புக் கூடு. நான் ஓவென கத்திக் கொண்டே பதறி ஓடுகிறேன். பயத்திலும் களைப்பிலும் வேர்த்துக் கொட்டுகிறது. யார் எலும்புக் கூடு அது. என்னைப் போலவே இங்கு வந்து மாட்டிக் கொண்டவன் எலும்புக் கூடா அது? கடவுளே நான் என்ன செய்ய? இந்த பேய் சுழலின் ஏதாவது ஒரு மூலையில் நானும் இப்படித்தான் எலும்புக் கூடாய் கிடப்பேனா? &lt;br /&gt;&lt;br /&gt;அதை மீண்டும் போய் பார்க்கலாமா? வேண்டாம் அந்த கோரத்தை பார்ப்பது கடினம். அட இதென்ன சற்று தள்ளி சுவரில் ஏதோ எழுதியிருக்கிறதே. என்ன அது பக்கம் சென்று பார்த்தேன். தமிழ்தான்&lt;br /&gt;&lt;br /&gt;கல்லில் மறைந்தது மாமதயானை&lt;br /&gt;கல்லை மறைத்தது மாமதயானை&lt;br /&gt;&lt;br /&gt;இது திருமூலர் சூத்திரமல்லவா? இதை யார் இங்கு எழுதி வைத்திருபார்கள். இது ஏன் இங்கு எழுதப்பட்டிருக்கிறது? இதை எழுதியவன்/எழுதியவள் இருக்கிறார்களா? அல்லது அங்கு பார்த்த எலும்புக் கூட்டுக்குச் சொந்தக்காரன் எழுதினானா? தலைபாராமாய் இருந்தது. சோர்வில் தூக்கம் பீடித்தது. தூங்கு தூங்கு. தூக்கம் மட்டும்தான் இந்த நரகத்தை ஒத்திப்போடுவதற்கான ஒரே சாதனம். &lt;br /&gt;&lt;br /&gt;கண்விழித்தேன். வானம் இருட்டவேயில்லை. ஒருவேளை விடிய விடிய தூங்கி விட்டேனோ. அப்படியிருக்கமுடியாது. மேலே அண்ணாந்து பார்த்தேன். வானத்துண்டு தெரிந்தது வெளிச்சம் அப்படியேயிருந்தது. ஒருவேளை மேலே தெரிவது வானம் இல்லையோ? இந்த புதிர்பாதையின் கூரைதான் வானத்தைப் போல் தத்ரூபமாய் அமைக்கப்பட்டிருக்கிறதா? பறவைகள் பறக்கின்றனவே? கதவற்ற வீட்டில் மனிதர்கள் வாழும் போது வானமற்ற கூரையில் பறவைகள் பறக்காதா என்ன? சாம்பல் வண்ண சுவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். பழங்கால கருங்கல் கட்டிடங்களைப் போல் பெரிய கற்களால் கட்டப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதென்ன? ஒவ்வொரு கல்லிலும் ஓவியாமா? கிறுக்கலா? வரிசையாக எல்லா கற்களிலிலும் இருக்கிறதே. நன்கு உற்றுப் பார்த்தேன் கோட்டோவியம்தான். வரிசையாக ஒரு கதைபோல் நீண்டு செல்லும் கோட்டோவியங்கள். மனம் பரபரத்தது என்ன கதை இது? எங்கிருந்து துவங்குகிறது? எங்கு முடிகிறது? இந்த வரிசை சுவர்களில் மட்டும்தான் இருக்கிறதா? அங்கெல்லாம் பார்த்தது போல் நினைவில்லையே. குழப்பமாக இருந்தது. ஒருவேளை இந்த ஓவியங்களை கவனித்தால் இங்கிருந்து தப்பிப்பதைப் பற்றிய சமிக்ஞை கிடைக்கக்கூடுமோ? எதற்கும் கொஞ்ச தூரம் சென்று பார்க்கலாம். கோட்டோவியங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. ஒன்றும் புரியவில்லை. இடமிருந்து வலமாக செல்கிறதா? அல்லது வலமிருந்து இடமா? சரி இந்தக் கதையின் துவக்கத்தை கண்டுபிடிப்பதும் சுவரின் துவக்கத்தை கண்டு பிடிப்பதும் வேறு வேறு அல்ல. பாதியிலிருந்தே துவங்குவோம் ஏதாவது புரிகிறதா பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;கதைதான். ஒரு மனிதனின் கதை, ஒரு சமூகத்தின் கதைகயாகவும் பல சமூகங்களின் கதைகளாகவும் ஒரே மனிதனின் பல கதைகளாகவும் ஒரே சமூகத்தின் பல கதைகளாகவும். காலத்தின் கதையாகவும், காலத்தின் கதைகளாகவும் விரிந்து கொண்டே போகும் கதையை தன்னிலை மறந்து வாசித்துக் கொண்டிருந்தேன். காலம், வெளி, இருப்பு எல்லாம் மறந்து கதையின் சுழலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;முடிவு..முடிவு..முடிவு.. எனக் கெஞ்சக் கெஞ்ச கதை நீண்டு கொண்டேயிருக்கிறது. திடிரென ஒரு கல் மட்டும் பெயர்ந்து எனை துரத்துகிறது. நான் கதையை படிக்க வேண்டும் நான் கதையை படிக்க வேண்டும் எனை விட்டு விடு எனக் கதறிக் கொண்டே ஓடிப்போய் ஒரு சந்தில் திரும்புகிறேன். நான் கடந்து வந்த சுவர் மறைகிறது. நான் ஓட ஓட ஒவ்வொரு சுவராய் மறைந்து கொண்டேயிருக்கிறது. சுவர்களே மறையாதீர்கள் மறையாதீர்கள் எனக் கதறிக் கொண்டே ஓடுகிறேன். ஏதோ தடுக்கி விட பாய்ந்து விழுகிறேன். மீண்டும் கண்விழித்த போது பெரிய வெளி சூன்யமாய் வியாபித்திருக்கிறது எனைச் சுற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: உயிர் எழுத்து&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-5960030380192535487?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/5960030380192535487/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/05/blog-post.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/5960030380192535487'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/5960030380192535487'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/05/blog-post.html' title='சாம்பல் சுவர் - சிறுகதை'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/S91Y2SyJ8mI/AAAAAAAAAEo/bYnd_oKlKkw/s72-c/Chevening.gif' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-1864653733922883469</id><published>2010-03-21T11:40:00.001+05:30</published><updated>2010-03-21T11:42:35.673+05:30</updated><title type='text'>சுழியத்தின் நகரம் - நாவல்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பீடிகை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;தனது&lt;/span&gt; &lt;span&gt;செய்கைகளில்&lt;/span&gt; &lt;span&gt;விநேதத்தைக்&lt;/span&gt; &lt;span&gt;கொண்டிருக்கும்&lt;/span&gt; &lt;span&gt;சித்திரக்குள்ளன்&lt;/span&gt; &lt;span&gt;ஒருவன்&lt;/span&gt; &lt;span&gt;எங்கள்&lt;/span&gt; &lt;span&gt;நகரத்தில்&lt;/span&gt; &lt;span&gt;வாழ்ந்தான்&lt;/span&gt;. &lt;span&gt;எவரும்&lt;/span&gt; &lt;span&gt;நுழையத்துணியாத&lt;/span&gt; &lt;span&gt;தனது&lt;/span&gt; &lt;span&gt;அறையில்&lt;/span&gt; &lt;span&gt;அந்தரத்தில்&lt;/span&gt; &lt;span&gt;அமர்ந்தபடி&lt;/span&gt; &lt;span&gt;காற்றி&lt;/span&gt;&lt;span style="display: block;" id="formatbar_Buttons"&gt;&lt;span class="" style="display: block;" id="formatbar_JustifyFull" title="Justify Full" onmouseover="ButtonHoverOn(this);" onmouseout="ButtonHoverOff(this);" onmouseup="" onmousedown="CheckFormatting(event);FormatbarButton('richeditorframe', this, 13);ButtonMouseDown(this);"&gt;&lt;img src="img/blank.gif" alt="Justify Full" class="gl_align_full" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;ல்&lt;/span&gt; &lt;span&gt;எதையோ&lt;/span&gt; &lt;span&gt;கிறுக்கிக்&lt;/span&gt; &lt;span&gt;கொண்டிருக்கும்&lt;/span&gt; &lt;span&gt;அவன்&lt;/span&gt; &lt;span&gt;ஜாலங்கள்&lt;/span&gt; &lt;span&gt;நகரெங்கும்&lt;/span&gt; &lt;span&gt;பிரசித்தம்&lt;/span&gt;. &lt;span&gt;இரவுகளில்&lt;/span&gt; &lt;span&gt;ஊரே&lt;/span&gt; &lt;span&gt;திரண்டிருக்க&lt;/span&gt; &lt;span&gt;அவன்&lt;/span&gt; &lt;span&gt;சொல்லும்&lt;/span&gt; &lt;span&gt;கதைகள்&lt;/span&gt; &lt;span&gt;அவனிலும்&lt;/span&gt; &lt;span&gt;விநோதமானவை&lt;/span&gt;. &lt;span&gt;அவனின்&lt;/span&gt; &lt;span&gt;ஒவ்வொரு&lt;/span&gt; &lt;span&gt;சொல்லும்&lt;/span&gt; &lt;span&gt;கேட்கும்&lt;/span&gt; &lt;span&gt;ஒவ்வொருவருக்கும்&lt;/span&gt; &lt;span&gt;வேறு&lt;/span&gt; &lt;span&gt;வேறாய்&lt;/span&gt; &lt;span&gt;ஒலிக்கும்&lt;/span&gt;. &lt;span&gt;அதனால்&lt;/span&gt; &lt;span&gt;ஒவ்வொருவரும்&lt;/span&gt; &lt;span&gt;ஆளுக்கொரு&lt;/span&gt; &lt;span&gt;கதையைக்&lt;/span&gt; &lt;span&gt;கேட்டுப்&lt;/span&gt; &lt;span&gt;புத்தி&lt;/span&gt; &lt;span&gt;சொக்கிக்கிடப்பார்கள்&lt;/span&gt;. &lt;span&gt;விடுமுறைக்கு&lt;/span&gt; &lt;span&gt;முந்தைய&lt;/span&gt; &lt;span&gt;தினங்களில்&lt;/span&gt; &lt;span&gt;அக்கதைகள்&lt;/span&gt; &lt;span&gt;விடியும்&lt;/span&gt; &lt;span&gt;வரை&lt;/span&gt; &lt;span&gt;நீளும்&lt;/span&gt;. &lt;span&gt;இரவு&lt;/span&gt; &lt;span&gt;முழுதும்&lt;/span&gt; &lt;span&gt;கதை&lt;/span&gt; &lt;span&gt;கேட்டு&lt;/span&gt; &lt;span&gt;திரும்பும்&lt;/span&gt; &lt;span&gt;போது&lt;/span&gt; &lt;span&gt;தாங்கள்&lt;/span&gt; &lt;span&gt;கேட்ட&lt;/span&gt; &lt;span&gt;கதைகளை&lt;/span&gt; &lt;span&gt;பகிர்ந்து&lt;/span&gt; &lt;span&gt;கொண்டு&lt;/span&gt; &lt;span&gt;அதன்&lt;/span&gt; &lt;span&gt;விசித்திரத்தை&lt;/span&gt; &lt;span&gt;எண்ணி&lt;/span&gt; &lt;span&gt;வியந்து&lt;/span&gt; &lt;span&gt;கொள்வோம்&lt;/span&gt;. &lt;span&gt;இவ்வாறு&lt;/span&gt; &lt;span&gt;ஒரே&lt;/span&gt; &lt;span&gt;நேரத்தில்&lt;/span&gt; &lt;span&gt;பல்லாயிரம்&lt;/span&gt; &lt;span&gt;கதைகளை&lt;/span&gt; &lt;span&gt;கூறும்&lt;/span&gt; &lt;span&gt;அவன்&lt;/span&gt; &lt;span&gt;பல&lt;/span&gt; &lt;span&gt;ஆண்டுகள்&lt;/span&gt; &lt;span&gt;கழித்து&lt;/span&gt; &lt;span&gt;தனது&lt;/span&gt; &lt;span&gt;வசிப்பிடத்திற்கு&lt;/span&gt; &lt;span&gt;திரும்பிய&lt;/span&gt; &lt;span&gt;காலரூபனுக்கு&lt;/span&gt; &lt;span&gt;சொன்னதாக&lt;/span&gt; &lt;span&gt;நம்பப்படும்&lt;/span&gt; &lt;span&gt;இக்கதையை&lt;/span&gt; &lt;span&gt;கேட்போரும்&lt;/span&gt; &lt;span&gt;வாசிப்போரும்&lt;/span&gt; &lt;span&gt;இது&lt;/span&gt; &lt;span&gt;தனது&lt;/span&gt; &lt;span&gt;நகரத்தின்&lt;/span&gt; &lt;span&gt;கதை&lt;/span&gt; &lt;span&gt;எனக்&lt;/span&gt; &lt;span&gt;கருதுவார்கள்&lt;/span&gt;. &lt;span&gt;உண்மையில்&lt;/span&gt; &lt;span&gt;இவைகள்&lt;/span&gt; &lt;span&gt;சுழியத்தின்&lt;/span&gt; &lt;span&gt;கதையே&lt;/span&gt; &lt;span&gt;என்றும்&lt;/span&gt; &lt;span&gt;சில&lt;/span&gt; &lt;span&gt;பெளராணிகர்கள்&lt;/span&gt; &lt;span&gt;கூறுவார்கள்&lt;/span&gt;. &lt;span&gt;சுழியம்&lt;/span&gt; &lt;span&gt;என்பது&lt;/span&gt; &lt;span&gt;எண்களின்&lt;/span&gt; &lt;span&gt;ஆதியில்&lt;/span&gt; &lt;span&gt;பிறந்து&lt;/span&gt; &lt;span&gt;இறுதி&lt;/span&gt; &lt;span&gt;எண்ணுக்கு&lt;/span&gt; &lt;span&gt;பிறகு&lt;/span&gt; &lt;span&gt;மீண்டும்&lt;/span&gt; &lt;span&gt;வருவது&lt;/span&gt; &lt;span&gt;என&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;கணிதவியலாளன்&lt;/span&gt; &lt;span&gt;கூறினான்&lt;/span&gt;. &lt;span&gt;சுழியம்&lt;/span&gt; &lt;span&gt;என்பது&lt;/span&gt; &lt;span&gt;சூன்யம்&lt;/span&gt; &lt;span&gt;அது&lt;/span&gt; &lt;span&gt;கணிதத்திலும்&lt;/span&gt; &lt;span&gt;தர்கத்திலும்&lt;/span&gt; &lt;span&gt;அன்றி&lt;/span&gt; &lt;span&gt;வேறு&lt;/span&gt; &lt;span&gt;எங்கும்&lt;/span&gt; &lt;span&gt;எப்போதும்&lt;/span&gt; &lt;span&gt;இருந்ததில்லை&lt;/span&gt; &lt;span&gt;என்பதைப்&lt;/span&gt; &lt;span&gt;போலவே&lt;/span&gt; &lt;span&gt;இந்நகரம்&lt;/span&gt; &lt;span&gt;தாரணையிலும்&lt;/span&gt; &lt;span&gt;கனவிலும்&lt;/span&gt; &lt;span&gt;அன்றி&lt;/span&gt; &lt;span&gt;வேறெப்போதும்&lt;/span&gt; &lt;span&gt;இருந்ததில்லை&lt;/span&gt; &lt;span&gt;என்பது&lt;/span&gt; &lt;span&gt;அவர்கள்&lt;/span&gt; &lt;span&gt;வாதம்&lt;/span&gt;. &lt;span&gt;அதனால்&lt;/span&gt; &lt;span&gt;இது&lt;/span&gt; &lt;span&gt;சுழியத்தின்&lt;/span&gt; &lt;span&gt;கதை&lt;/span&gt; &lt;span&gt;என்றும்&lt;/span&gt; &lt;span&gt;இக்கதையில்&lt;/span&gt; &lt;span&gt;வரும்&lt;/span&gt; &lt;span&gt;நகரம்&lt;/span&gt; &lt;span&gt;சுழியத்தின்&lt;/span&gt; &lt;span&gt;நகரம்&lt;/span&gt; &lt;span&gt;என்றும்&lt;/span&gt; &lt;span&gt;கூறுவார்கள்&lt;/span&gt;. &lt;span&gt;இந்தக்&lt;/span&gt; &lt;span&gt;கதை&lt;/span&gt; &lt;span&gt;கி&lt;/span&gt;.&lt;span&gt;பி&lt;/span&gt;.21&lt;span&gt;ம்&lt;/span&gt; &lt;span&gt;நூற்றாண்டை&lt;/span&gt; &lt;span&gt;சேர்ததென்றும்&lt;/span&gt; &lt;span&gt;இளங்கோ&lt;/span&gt; &lt;span&gt;கிருஷ்ணன்&lt;/span&gt; &lt;span&gt;தனது&lt;/span&gt; 30&lt;span&gt;ம்&lt;/span&gt; &lt;span&gt;வயதில்&lt;/span&gt; &lt;span&gt;எழுதியதென்றும்&lt;/span&gt; &lt;span&gt;இந்தக்&lt;/span&gt; &lt;span&gt;கதை&lt;/span&gt; &lt;span&gt;வழியாக&lt;/span&gt; &lt;span&gt;விரியும்&lt;/span&gt; &lt;span&gt;நகரம்&lt;/span&gt; &lt;span&gt;அவர்&lt;/span&gt; &lt;span&gt;வாழ்ந்த&lt;/span&gt; &lt;span&gt;கோவை&lt;/span&gt; &lt;span&gt;நகரமே&lt;/span&gt; &lt;span&gt;என்றும்&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;உரையாடல்&lt;/span&gt; &lt;span&gt;உண்டு&lt;/span&gt;. &lt;span&gt;இப்படியாக&lt;/span&gt; &lt;span&gt;எண்ணற்ற&lt;/span&gt; &lt;span&gt;மயக்கங்களும்&lt;/span&gt;, &lt;span&gt;குழப்பங்களும்&lt;/span&gt;, &lt;span&gt;முரண்களும்&lt;/span&gt; &lt;span&gt;நிறைந்த&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;விநோதத்திற்கு&lt;/span&gt; &lt;span&gt;நீங்கள்&lt;/span&gt; &lt;span&gt;உங்களை&lt;/span&gt; &lt;span&gt;ஒப்புக்&lt;/span&gt; &lt;span&gt;கொடுத்திருக்கிறீர்கள்&lt;/span&gt; &lt;span&gt;என&lt;/span&gt; &lt;span&gt;உங்களுக்குச்&lt;/span&gt; &lt;span&gt;சொல்லப்படுகிறது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பீடிகை&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; 2 &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;காலரூபனே&lt;/span&gt;, &lt;span&gt;நகரம்&lt;/span&gt; &lt;span&gt;என்பதென்ன&lt;/span&gt;? &lt;span&gt;நகரங்களுக்கு&lt;/span&gt; &lt;span&gt;மனிதர்களைப்&lt;/span&gt; &lt;span&gt;போலவே&lt;/span&gt; &lt;span&gt;ஆன்மா&lt;/span&gt; &lt;span&gt;உண்டா&lt;/span&gt;? &lt;span&gt;எனில்&lt;/span&gt; &lt;span&gt;ஒவ்வொரு&lt;/span&gt; &lt;span&gt;நகரத்திற்கும்&lt;/span&gt; &lt;span&gt;மரணம்&lt;/span&gt; &lt;span&gt;நேர்வதேன்&lt;/span&gt;? &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;நகரம்&lt;/span&gt; &lt;span&gt;எப்போது&lt;/span&gt; &lt;span&gt;பிறக்கிறது&lt;/span&gt;? &lt;span&gt;எப்போது&lt;/span&gt; &lt;span&gt;அழிகிறது&lt;/span&gt;. &lt;span&gt;அதன்&lt;/span&gt; &lt;span&gt;குடிகள்&lt;/span&gt; &lt;span&gt;எப்படி&lt;/span&gt; &lt;span&gt;அங்கு&lt;/span&gt; &lt;span&gt;வந்து&lt;/span&gt; &lt;span&gt;சேர்கிறார்கள்&lt;/span&gt;? &lt;span&gt;அவர்களுக்கும்&lt;/span&gt; &lt;span&gt;அதற்குமான&lt;/span&gt; &lt;span&gt;தொடர்பு&lt;/span&gt; &lt;span&gt;என்பதென்ன&lt;/span&gt;? &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;நகரத்தில்&lt;/span&gt; &lt;span&gt;என்ன&lt;/span&gt; &lt;span&gt;வகை&lt;/span&gt; &lt;span&gt;தாவரங்கள்&lt;/span&gt; &lt;span&gt;ஜீவிக்கின்றன&lt;/span&gt;? &lt;span&gt;என்ன&lt;/span&gt; &lt;span&gt;வகை&lt;/span&gt; &lt;span&gt;மிருகங்கள்&lt;/span&gt; &lt;span&gt;வாழ்கின்றன&lt;/span&gt;? &lt;span&gt;உன்னுடைய&lt;/span&gt; &lt;span&gt;நகரம்&lt;/span&gt; &lt;span&gt;நூலைத்&lt;/span&gt; &lt;span&gt;தன்&lt;/span&gt; &lt;span&gt;ஆன்மாவாக&lt;/span&gt; &lt;span&gt;எப்படிக்&lt;/span&gt; &lt;span&gt;கொண்டது&lt;/span&gt;? &lt;span&gt;பஞ்சுக்கும்&lt;/span&gt; &lt;span&gt;உன்&lt;/span&gt; &lt;span&gt;நகரத்திற்கும்&lt;/span&gt; &lt;span&gt;உள்ள&lt;/span&gt; &lt;span&gt;உறவென்ன&lt;/span&gt;? &lt;span&gt;நூல்&lt;/span&gt; &lt;span&gt;காற்றில்&lt;/span&gt; &lt;span&gt;துடிப்பது&lt;/span&gt; &lt;span&gt;போல்&lt;/span&gt; &lt;span&gt;உன்&lt;/span&gt; &lt;span&gt;நகரம்&lt;/span&gt; &lt;span&gt;காலத்தில்&lt;/span&gt; &lt;span&gt;நெளிவதைப்&lt;/span&gt; &lt;span&gt;பார்த்தேன்&lt;/span&gt;. &lt;span&gt;ஏன்&lt;/span&gt; &lt;span&gt;உன்&lt;/span&gt; &lt;span&gt;நகரின்&lt;/span&gt; &lt;span&gt;ஆன்மா&lt;/span&gt; &lt;span&gt;நூலைப்&lt;/span&gt; &lt;span&gt;போல்&lt;/span&gt; &lt;span&gt;இருக்கிறது&lt;/span&gt;? &lt;span&gt;தறி&lt;/span&gt; &lt;span&gt;ஓடுவது&lt;/span&gt; &lt;span&gt;போல்&lt;/span&gt; &lt;span&gt;உன்&lt;/span&gt; &lt;span&gt;மக்களின்&lt;/span&gt; &lt;span&gt;பேச்சில்&lt;/span&gt; &lt;span&gt;ஓர்&lt;/span&gt; &lt;span&gt;சீரான&lt;/span&gt; &lt;span&gt;இசைக்குறிப்பைக்&lt;/span&gt; &lt;span&gt;கவனித்தாயா&lt;/span&gt;? &lt;span&gt;ஏன்&lt;/span&gt; &lt;span&gt;உன்&lt;/span&gt; &lt;span&gt;மக்களின்&lt;/span&gt; &lt;span&gt;ஆன்மா&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;நூலாக&lt;/span&gt; &lt;span&gt;இருக்கிறது&lt;/span&gt;. &lt;span&gt;நகரங்கள்&lt;/span&gt; &lt;span&gt;தங்கள்&lt;/span&gt; &lt;span&gt;மக்களை&lt;/span&gt; &lt;span&gt;தாங்களே&lt;/span&gt; &lt;span&gt;தெரிவு&lt;/span&gt; &lt;span&gt;செய்து&lt;/span&gt; &lt;span&gt;கொள்கின்றனவா&lt;/span&gt;? &lt;span&gt;எல்லா&lt;/span&gt; &lt;span&gt;நகரங்களுக்கும்&lt;/span&gt; &lt;span&gt;இப்படியான&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;தனி&lt;/span&gt; &lt;span&gt;இயல்பு&lt;/span&gt; &lt;span&gt;உண்டா&lt;/span&gt;? &lt;span&gt;ஏன்&lt;/span&gt; &lt;span&gt;நகரங்கள்&lt;/span&gt; &lt;span&gt;எரிந்து&lt;/span&gt; &lt;span&gt;கொண்டேயிருக்கின்றன&lt;/span&gt;? &lt;span&gt;எத்தனை&lt;/span&gt; &lt;span&gt;முறை&lt;/span&gt; &lt;span&gt;எரிந்தாலும்&lt;/span&gt; &lt;span&gt;அது&lt;/span&gt; &lt;span&gt;மீண்டும்&lt;/span&gt; &lt;span&gt;மீண்டும்&lt;/span&gt; &lt;span&gt;வேறு&lt;/span&gt; &lt;span&gt;வேறாக&lt;/span&gt; &lt;span&gt;பிறந்து&lt;/span&gt; &lt;span&gt;கொண்டேயிருக்கின்றன&lt;/span&gt;? &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;நகரத்தின்&lt;/span&gt; &lt;span&gt;கதை&lt;/span&gt; &lt;span&gt;என்பது&lt;/span&gt; &lt;span&gt;அந்நகரத்தின்&lt;/span&gt; &lt;span&gt;கதை&lt;/span&gt; &lt;span&gt;மட்டுமா&lt;/span&gt;? &lt;span&gt;எண்ணற்ற&lt;/span&gt; &lt;span&gt;காலத்தைச்&lt;/span&gt; &lt;span&gt;சேர்ந்த&lt;/span&gt; &lt;span&gt;எண்ணற்ற&lt;/span&gt; &lt;span&gt;நகரங்களின்&lt;/span&gt; &lt;span&gt;கதை&lt;/span&gt; &lt;span&gt;ஒன்று&lt;/span&gt; &lt;span&gt;போலவே&lt;/span&gt; &lt;span&gt;தோன்றுவதை&lt;/span&gt; &lt;span&gt;நீ&lt;/span&gt; &lt;span&gt;கவனித்தாயா&lt;/span&gt;? &lt;span&gt;எல்லா&lt;/span&gt; &lt;span&gt;நகரங்களும்&lt;/span&gt; &lt;span&gt;எப்போதும்&lt;/span&gt; &lt;span&gt;எவ்வளவோ&lt;/span&gt; &lt;span&gt;கதைகளை&lt;/span&gt; &lt;span&gt;சொல்லிக்&lt;/span&gt; &lt;span&gt;கொண்டேயிருக்கின்றன&lt;/span&gt;. &lt;span&gt;அவைகளில்&lt;/span&gt; &lt;span&gt;அந்த&lt;/span&gt; &lt;span&gt;பழமையின்&lt;/span&gt; &lt;span&gt;புளித்த&lt;/span&gt; &lt;span&gt;வாடையை&lt;/span&gt; &lt;span&gt;கவனித்தாயா&lt;/span&gt;? &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;கதையே&lt;/span&gt; &lt;span&gt;திரும்ப&lt;/span&gt; &lt;span&gt;திரும்ப&lt;/span&gt; &lt;span&gt;சொல்லப்படுகிறது&lt;/span&gt;. &lt;span&gt;ஆனால்&lt;/span&gt; &lt;span&gt;ஒவ்வொரு&lt;/span&gt; &lt;span&gt;முறையும்&lt;/span&gt; &lt;span&gt;புதிதாக&lt;/span&gt; &lt;span&gt;சொல்லப்படுகிறது&lt;/span&gt;. &lt;span&gt;நகரங்களின்&lt;/span&gt; &lt;span&gt;கதைகளைப்&lt;/span&gt; &lt;span&gt;பேசும்&lt;/span&gt; &lt;span&gt;போது&lt;/span&gt; &lt;span&gt;ஏன்&lt;/span&gt; &lt;span&gt;கதைகளின்&lt;/span&gt; &lt;span&gt;கதைகளைப்&lt;/span&gt; &lt;span&gt;பேசுகிறோம்&lt;/span&gt;. &lt;span&gt;கதைகளின்&lt;/span&gt; &lt;span&gt;தூல&lt;/span&gt; &lt;span&gt;வடிவங்களாக&lt;/span&gt; &lt;span&gt;நகரங்கள்&lt;/span&gt; &lt;span&gt;இருக்கின்றனவா&lt;/span&gt;? &lt;span&gt;அல்லது&lt;/span&gt; &lt;span&gt;நகரங்களின்&lt;/span&gt; &lt;span&gt;உள்ளுயிராக&lt;/span&gt; &lt;span&gt;கதைகள்&lt;/span&gt; &lt;span&gt;இருக்கின்றனவா&lt;/span&gt;? &lt;span&gt;கதைகள்&lt;/span&gt; &lt;span&gt;மீண்டும்&lt;/span&gt; &lt;span&gt;மீண்டும்&lt;/span&gt; &lt;span&gt;சொல்லப்படுகின்றன&lt;/span&gt; &lt;span&gt;அதன்&lt;/span&gt; &lt;span&gt;வேறு&lt;/span&gt; &lt;span&gt;வேறு&lt;/span&gt; &lt;span&gt;வடிவங்கள்&lt;/span&gt; &lt;span&gt;மீண்டும்&lt;/span&gt; &lt;span&gt;மீண்டும்&lt;/span&gt; &lt;span&gt;கண்டடையப்படுகின்றன&lt;/span&gt;. &lt;span&gt;நகரங்களும்&lt;/span&gt; &lt;span&gt;கூட&lt;/span&gt; &lt;span&gt;மீண்டும்&lt;/span&gt; &lt;span&gt;மீண்டும்&lt;/span&gt; &lt;span&gt;பிறந்தும்&lt;/span&gt; &lt;span&gt;மீண்டும்&lt;/span&gt; &lt;span&gt;மீண்டும்&lt;/span&gt; &lt;span&gt;மரித்துக்&lt;/span&gt; &lt;span&gt;கொண்டுமேயிருக்கின்றன&lt;/span&gt;. &lt;span&gt;பிறந்து&lt;/span&gt;, &lt;span&gt;வளர்ந்து&lt;/span&gt;, &lt;span&gt;தேய்கிற&lt;/span&gt; &lt;span&gt;எதுவும்&lt;/span&gt; &lt;span&gt;சுழியத்தின்&lt;/span&gt; &lt;span&gt;இயல்பாய்&lt;/span&gt; &lt;span&gt;இருக்கிறது&lt;/span&gt;. &lt;span&gt;இந்த&lt;/span&gt; &lt;span&gt;சுழியத்தின்&lt;/span&gt; &lt;span&gt;இயல்பே&lt;/span&gt; &lt;span&gt;நகரங்களின்&lt;/span&gt; &lt;span&gt;இயல்பாகவும்&lt;/span&gt; &lt;span&gt;அதன்&lt;/span&gt; &lt;span&gt;கதைகளின்&lt;/span&gt; &lt;span&gt;இயல்பாகவும்&lt;/span&gt; &lt;span&gt;இருக்கிறது&lt;/span&gt;. &lt;span&gt;இங்கு&lt;/span&gt; &lt;span&gt;சுழியத்தின்&lt;/span&gt; &lt;span&gt;இயல்புள்ள&lt;/span&gt; &lt;span&gt;கதைகள்&lt;/span&gt; &lt;span&gt;எதுவும்&lt;/span&gt; &lt;span&gt;சுழியத்தின்&lt;/span&gt; &lt;span&gt;கதைகளே&lt;/span&gt;. &lt;span&gt;அக்கதைகள்&lt;/span&gt; &lt;span&gt;கொண்ட&lt;/span&gt; &lt;span&gt;எல்லா&lt;/span&gt; &lt;span&gt;நகரங்களும்&lt;/span&gt; &lt;span&gt;சுழியத்தின்&lt;/span&gt; &lt;span&gt;நகரங்களே&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நகரங்களும்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஓசைகளும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;நகரம்&lt;/span&gt; &lt;span&gt;அதன்&lt;/span&gt; &lt;span&gt;ஓசைகளால்&lt;/span&gt; &lt;span&gt;தீர்மானிக்கப்படுகிறது&lt;/span&gt;. &lt;span&gt;நகரத்திற்கும்&lt;/span&gt; &lt;span&gt;ஓசைகளுக்குமான&lt;/span&gt; &lt;span&gt;தொடர்பு&lt;/span&gt; &lt;span&gt;புரியாத&lt;/span&gt; &lt;span&gt;ஆதியின்&lt;/span&gt; &lt;span&gt;தன்மையினது&lt;/span&gt;. &lt;span&gt;இவ்வுலகில்&lt;/span&gt; &lt;span&gt;உள்ள&lt;/span&gt; &lt;span&gt;எல்லா&lt;/span&gt; &lt;span&gt;நகரங்களும்&lt;/span&gt; &lt;span&gt;ஒரே&lt;/span&gt; &lt;span&gt;ஓசையின்&lt;/span&gt; &lt;span&gt;தன்மையிலேயே&lt;/span&gt; &lt;span&gt;அதிர்கின்றன&lt;/span&gt; &lt;span&gt;போலும்&lt;/span&gt;. &lt;span&gt;அந்த&lt;/span&gt; &lt;span&gt;ஓசை&lt;/span&gt; &lt;span&gt;ஒற்றைப்&lt;/span&gt; &lt;span&gt;பெருங்குரலாய்&lt;/span&gt; &lt;span&gt;எல்லாக்&lt;/span&gt; &lt;span&gt;காலங்களின்&lt;/span&gt; &lt;span&gt;எல்லா&lt;/span&gt; &lt;span&gt;நகரங்களுக்குள்ளும்&lt;/span&gt; &lt;span&gt;துடித்துக்&lt;/span&gt; &lt;span&gt;கொண்டிருக்கிறது&lt;/span&gt;. &lt;span&gt;நகரங்களுக்கும்&lt;/span&gt; &lt;span&gt;ஓசைகளுக்கும்&lt;/span&gt; &lt;span&gt;உள்ள&lt;/span&gt; &lt;span&gt;உறவைப்&lt;/span&gt; &lt;span&gt;புரியாமல்&lt;/span&gt; &lt;span&gt;உன்&lt;/span&gt; &lt;span&gt;நகரத்தின்&lt;/span&gt; &lt;span&gt;கதையை&lt;/span&gt; &lt;span&gt;நீ&lt;/span&gt; &lt;span&gt;அறிவதெப்படி&lt;/span&gt;? &lt;span&gt;ஓசைகளின்&lt;/span&gt; &lt;span&gt;கதை&lt;/span&gt; &lt;span&gt;நகரங்களின்&lt;/span&gt; &lt;span&gt;கதையை&lt;/span&gt; &lt;span&gt;விடவும்&lt;/span&gt; &lt;span&gt;சிக்கலானது&lt;/span&gt;. &lt;span&gt;எல்லா&lt;/span&gt; &lt;span&gt;திசைகளிலும்&lt;/span&gt; &lt;span&gt;அதிர்கிற&lt;/span&gt; &lt;span&gt;ஒற்றைப்&lt;/span&gt; &lt;span&gt;பேரோசை&lt;/span&gt; &lt;span&gt;தனியாய்&lt;/span&gt; &lt;span&gt;மாறுகிற&lt;/span&gt; &lt;span&gt;இடமும்&lt;/span&gt; &lt;span&gt;எல்லாக்&lt;/span&gt; &lt;span&gt;காலங்களுக்குமான&lt;/span&gt; &lt;span&gt;எல்லா&lt;/span&gt; &lt;span&gt;நகரங்களுக்குள்ளும்&lt;/span&gt; &lt;span&gt;தனித்தன்மை&lt;/span&gt; &lt;span&gt;கூடுகிற&lt;/span&gt; &lt;span&gt;இடமும்&lt;/span&gt; &lt;span&gt;ஒரே&lt;/span&gt; &lt;span&gt;விதியால்&lt;/span&gt; &lt;span&gt;கட்டப்பட்டிருக்கிறதோ&lt;/span&gt; &lt;span&gt;என&lt;/span&gt; &lt;span&gt;நான்&lt;/span&gt; &lt;span&gt;ஐயுறுகிறேன்&lt;/span&gt;. &lt;span&gt;எல்லா&lt;/span&gt; &lt;span&gt;ஓசைகளும்&lt;/span&gt; ‘&lt;span&gt;அ&lt;/span&gt;, &lt;span&gt;இ&lt;/span&gt;, &lt;span&gt;உ&lt;/span&gt;, &lt;span&gt;எ&lt;/span&gt;, &lt;span&gt;ஒ&lt;/span&gt;’ &lt;span&gt;எனத்&lt;/span&gt; &lt;span&gt;துவங்கி&lt;/span&gt; ‘&lt;span&gt;ம்&lt;/span&gt;’ &lt;span&gt;என&lt;/span&gt; &lt;span&gt;முடிவதாக&lt;/span&gt; &lt;span&gt;சொல்கிறது&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;பாடம்&lt;/span&gt;. ‘&lt;span&gt;ம்&lt;/span&gt;’ &lt;span&gt;ல்&lt;/span&gt; &lt;span&gt;துவங்கி&lt;/span&gt; ‘&lt;span&gt;ம்&lt;/span&gt;’&lt;span&gt;ல்&lt;/span&gt; &lt;span&gt;முடிகிறது&lt;/span&gt; &lt;span&gt;சுழியத்தின்&lt;/span&gt; &lt;span&gt;ஓசை&lt;/span&gt;. &lt;span&gt;சுழியத்தின்&lt;/span&gt; &lt;span&gt;ஓசையே&lt;/span&gt; &lt;span&gt;நகரத்தின்&lt;/span&gt; &lt;span&gt;ஓசை&lt;/span&gt;. &lt;span&gt;ஏனெனில்&lt;/span&gt; &lt;span&gt;எல்லா&lt;/span&gt; &lt;span&gt;நகரங்களும்&lt;/span&gt; &lt;span&gt;சுழியத்தின்&lt;/span&gt; &lt;span&gt;நகரங்களே&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;நகரங்களும்&lt;/span&gt; &lt;span&gt;வாசனைகளும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;வாசனைகள்&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;நகரத்தின்&lt;/span&gt; &lt;span&gt;இயப்பூக்கமாக&lt;/span&gt; &lt;span&gt;இருக்கிறது&lt;/span&gt;. &lt;span&gt;நகரத்தின்&lt;/span&gt; &lt;span&gt;மர்மங்களை&lt;/span&gt; &lt;span&gt;அடைவதற்கான&lt;/span&gt; &lt;span&gt;நல்ல&lt;/span&gt; &lt;span&gt;கதவுகளில்&lt;/span&gt; &lt;span&gt;அதன்&lt;/span&gt; &lt;span&gt;வாசனையும்&lt;/span&gt; &lt;span&gt;ஒன்று&lt;/span&gt;. &lt;span&gt;உண்மையில்&lt;/span&gt; &lt;span&gt;வாசனைகளின்&lt;/span&gt; &lt;span&gt;கதை&lt;/span&gt; &lt;span&gt;என்பது&lt;/span&gt; &lt;span&gt;காதல்களின்&lt;/span&gt; &lt;span&gt;கதையே&lt;/span&gt;. &lt;span&gt;நகரங்களின்&lt;/span&gt; &lt;span&gt;வாசனைகள்&lt;/span&gt; &lt;span&gt;என்பது&lt;/span&gt; &lt;span&gt;நகரங்களின்&lt;/span&gt; &lt;span&gt;காதல்களே&lt;/span&gt;. &lt;span&gt;நகரங்களின்&lt;/span&gt; &lt;span&gt;காதல்&lt;/span&gt; &lt;span&gt;என்பது&lt;/span&gt; &lt;span&gt;மனிதர்களின்&lt;/span&gt; &lt;span&gt;காதலைப்&lt;/span&gt; &lt;span&gt;போலவே&lt;/span&gt; &lt;span&gt;சுயநலமும்&lt;/span&gt; &lt;span&gt;ஆதிக்க&lt;/span&gt; &lt;span&gt;மனோபாவமும்&lt;/span&gt; &lt;span&gt;கொண்டவை&lt;/span&gt;. &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;நகரம்&lt;/span&gt; &lt;span&gt;எப்போதும்&lt;/span&gt; &lt;span&gt;காதலித்துக்&lt;/span&gt; &lt;span&gt;கொண்டேயிருக்கிறது&lt;/span&gt;. &lt;span&gt;அது&lt;/span&gt; &lt;span&gt;எதைக்&lt;/span&gt; &lt;span&gt;காதலிக்கிறது&lt;/span&gt; &lt;span&gt;என்பதற்கு&lt;/span&gt; &lt;span&gt;அதன்&lt;/span&gt; &lt;span&gt;வாசனைகளே&lt;/span&gt; &lt;span&gt;சாட்சி&lt;/span&gt;. &lt;span&gt;நகரத்தின்&lt;/span&gt; &lt;span&gt;காதல்&lt;/span&gt; &lt;span&gt;வேறு&lt;/span&gt; &lt;span&gt;அதன்&lt;/span&gt; &lt;span&gt;குடிகளின்&lt;/span&gt; &lt;span&gt;காதல்&lt;/span&gt; &lt;span&gt;வேறு&lt;/span&gt; &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;சொல்வதற்கில்லை&lt;/span&gt;. &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;நகரம்&lt;/span&gt; &lt;span&gt;அதன்&lt;/span&gt; &lt;span&gt;குடிகளை&lt;/span&gt; &lt;span&gt;தேர்தெடுப்பது&lt;/span&gt; &lt;span&gt;போலவே&lt;/span&gt; &lt;span&gt;குடிகளும்&lt;/span&gt; &lt;span&gt;தங்களின்&lt;/span&gt; &lt;span&gt;நகரத்தைத்&lt;/span&gt; &lt;span&gt;தேர்ந்தெடுக்கிறார்கள்&lt;/span&gt;. &lt;span&gt;இது&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;பரஸ்பர&lt;/span&gt; &lt;span&gt;சம்மதம்&lt;/span&gt;. &lt;span&gt;எனில்&lt;/span&gt; &lt;span&gt;எது&lt;/span&gt; &lt;span&gt;நகரத்தின்&lt;/span&gt; &lt;span&gt;காதலோ&lt;/span&gt; &lt;span&gt;அதுவே&lt;/span&gt; &lt;span&gt;அதன்&lt;/span&gt; &lt;span&gt;மக்களின்&lt;/span&gt; &lt;span&gt;காதல்&lt;/span&gt;. &lt;span&gt;வாசனைகளின்&lt;/span&gt; &lt;span&gt;கதை&lt;/span&gt; &lt;span&gt;என்பது&lt;/span&gt; &lt;span&gt;காதல்களின்&lt;/span&gt; &lt;span&gt;கதை&lt;/span&gt; &lt;span&gt;மட்டுமல்ல&lt;/span&gt;. &lt;span&gt;காதலின்மைகளின்&lt;/span&gt; &lt;span&gt;கதையும்&lt;/span&gt;, &lt;span&gt;வெறுப்புகளின்&lt;/span&gt; &lt;span&gt;கதையும்தான்&lt;/span&gt;. &lt;span&gt;காதல்களும்&lt;/span&gt; &lt;span&gt;காதலின்மைகளும்&lt;/span&gt; &lt;span&gt;வெறுப்புகளும்&lt;/span&gt; &lt;span&gt;சேர்ந்தே&lt;/span&gt; &lt;span&gt;வாசனைகளின்&lt;/span&gt; &lt;span&gt;கதையை&lt;/span&gt; &lt;span&gt;தீர்மானிக்கின்றன&lt;/span&gt;. &lt;span&gt;தன்&lt;/span&gt; &lt;span&gt;ஆன்மாவில்&lt;/span&gt; &lt;span&gt;மோசமான&lt;/span&gt; &lt;span&gt;வாசனையுடைய&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;நகரம்&lt;/span&gt; &lt;span&gt;எப்போதும்&lt;/span&gt; &lt;span&gt;வசீகரமாகவே&lt;/span&gt; &lt;span&gt;இருக்கும்&lt;/span&gt;. &lt;span&gt;ஏனெனில்&lt;/span&gt; &lt;span&gt;நகரங்களும்&lt;/span&gt; &lt;span&gt;குடிகளும்&lt;/span&gt; &lt;span&gt;வாசனைகளின்&lt;/span&gt; &lt;span&gt;அடிமைகள்&lt;/span&gt;. &lt;span&gt;வாசனையோ&lt;/span&gt; &lt;span&gt;காதல்களின்&lt;/span&gt; &lt;span&gt;அடிமை&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;தொடரும்&lt;/span&gt;...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-1864653733922883469?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/1864653733922883469/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/03/blog-post_21.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/1864653733922883469'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/1864653733922883469'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/03/blog-post_21.html' title='சுழியத்தின் நகரம் - நாவல்'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-7721833469929101022</id><published>2010-02-01T17:21:00.002+05:30</published><updated>2010-02-01T17:26:36.476+05:30</updated><title type='text'>ஜெயமோகனின் கோவை சந்திப்பு</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;கடந்த 23.01.2010 அன்று மாலை கோவை சன்மார்க்க சங்க கட்டிடத்தில் வாசகர் சந்திப்புக்காக ஜெயமோகன் வந்திருந்தார். அங்கு அவரிடம் நான் கேட்ட கேள்வியையும் தொடர்ந்து நடந்த இணையவழி உரையாடாலையும் இங்கு பதிந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள ஜெ,&lt;br /&gt;&lt;br /&gt;நலமா? கோவையில் உங்களை தனியாக சந்தித்து பேச ஆசைப்பட்டேன் முடியவில்லை. அந்த கூட்டத்தில் நீங்கள் பேசிய விஷயங்கள் தொடர்பாக எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன நேரமிருந்தால் பதில் எழுதுங்கள் மகிழ்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டேன் “ ஒரு சமூக அசைவியக்கத்தின் உள்ளார்ந்த கூறுகள்தான் அந்த சமூகத்தின் மேல்தள அரசியலை (ground Politics) தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. மேல்தள அரசியலானது அச்சமூகத்தின் உள்ளார்ந்த கூறுகளை (கலை, பண்பாடு போன்ற அனைத்தையும்) ஓர் எல்லை வரை பாதிக்கவே செய்கிறது. இவை பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்தும் முரண்பட்டும் இயங்கும் சக்திகளாக இருக்கும் போது ஒரு கலைஞன் மேல்தள அரசியலை பேசமாட்டேன் எனச் சொல்வது எந்த அளவிற்கு சரி? “ என்று கேட்டேன் அதற்கு நீங்கள் அளித்த பதிலானது ஏற்கனவே உங்களது கட்டுரைகளில் நீங்கள் கூறியதாகவே இருந்தது. மேல்தள அரசியலின் போக்குகள் பற்றி ஒரு  அரசியல்வாதி, ஒரு சமூக விஞ்ஞானி போன்றோர் கூறும் கருத்துகள் போலத்தான் ஒரு விளைந்த கலைஞனாலும் சொல்ல இயலுமா? ஒருசமூகத்தின் உள்ளார்ந்த ஆன்மாவை மேல் தள அரசியல் எவ்வளவு பாதிக்கிறது என்பதை ஒரு கலைஞனை விட யார் அறிந்து கொள்ள முடியும்?   அவ்வாறு தன்னை பாதிக்கும் விஷயத்தின் இயல்பை பற்றி பேச வேண்டியது ஒரு கலைஞனாக நமது கடமையல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;2.தனக்கு தெரியாத விஷயங்களைக் கூட கலைஞனால் எழுதி விட முடியும் என்று கூறினீர்கள். என் அனுபவத்திலும் நான் உணர்ந்திருக்கிறேன் அது உண்மை. ஆனால் ஒரு கலைஞன் தன் கற்பனையால் (கற்பனை அல்லது தாரணை எது சரி?) எழுதுகிற அனைத்தும் உண்மையே என்று சொல்லிவிட முடியுமா? அல்லது நாம் இப்படி சொல்லிப்பார்க்கலாம் ஒரு இயற்பியல் விஞ்ஞானி கூறுகிற அனைத்தும் சரியாக இருக்க இயலுமா? ஆரியபட்டர், காளிதாசன் இருவர் சொல்வதில் யார் சொல்வது சரி எனில் காளிதாசன் சொல்வது சரி என்றீர்கள். அது ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கான தீர்ப்பாக வேண்டுமானால் இருக்க இயலும். காளிதாசன்கள் சொல்வதெல்லாம் உண்மை, ஆரிய பட்டர்கள் சொல்வதெல்லாம் தவறு என இருக்க முடியுமா? கலை, அறிவியல் என்ற இரண்டு மானுட அறிதல் முறைகளும் சமபலமானவை என்றே நான் கருதுகிறேன். நவீன இயற்பியல் 50+50=99.99 என்றே கூறுகிறது. இறுதி உண்மை என்பதை அவ்வளவு தீர்க்கமாக தர்க்கத்தாலோ தாரணையாலோ நெருங்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;3.கடந்த பத்து ஆண்டுகளில் என்னை பாதிக்கும் கவிதைகள் ஏதும் வரவில்லை என்றும் முகுந்த் நாகராஜன் என்னை கவர்ந்த கவிஞர் என்றும் கூறினீர்கள். எனக்கு அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் கவிதை சில முக்கியமான மாற்றங்களை அடைந்திருக்கிறது. அது விரிவான பொறுப்பான ஒரு ஆய்வுக்குப்பின் பேசப்பட வேண்டிய விஷயம். தமிழ்க் கவிதை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பன்மைதுவத்தால் நிரம்பி வழிவது கடந்த பத்து ஆண்டுகளாகத்தான். அதில் முகுந்த் நாகராஜன் ஒரு முகம் அவ்வளவே. அது போல எண்ணற்ற முகங்கள் தற்போதைய நவீன தமிழ் கவிதைக்கு உண்டு. தற்போதைய தமிழ் சூழலின் பலமாகவும் பலவீனமாகவும் இந்த பன்மைத்துவமே உள்ளது.  உண்மையில் எல்லா தசமங்களைப் போலவே இந்த தசமத்திலும் சில நல்ல கவிஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். உங்களைப் போன்ற ஒரு மூத்த எழுத்தாளர் சூழலை சற்று அவதானித்து ஒரு கட்டுரை எழுதுவது எங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும்.   வணக்கத்துடன்&lt;br /&gt;இளங்கோ கிருஷ்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள இளங்கோ கிருஷ்ணன்,&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கேள்விகளுக்கு என் நோக்கில் பதில் சொல்ல முனைகிறேன்.&lt;br /&gt;                 &lt;br /&gt;1. 'எனது அரசியல்' என்ற கட்டுரையில் நீங்கள் கேட்ட இக்கேள்விக்கான என் பதிலை தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். பிறிதொரு கேள்விக்குப் பதிலாக கோவையிலும் அதையே சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளன் அவன் எழுத்தாளன் ஆனதனால், அவனைக் கவனிப்போர் இருப்பதனால், எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லவேண்டுமென்பதில்லை. அது ஒருவகை அதிகப்பிரசங்கித்தனம். ஓர் எழுத்தாளானக நின்று மட்டுமே அவன் பேசவேண்டும். குடிமகனாக அவன் பேசும் விஷயங்கள்  எல்லா குடிமக்களும் பேசும்  சாதாரண விஷயங்களாகவே இருக்கும். அவற்றை அவன் எழுத்தாளன் என்ற அடையாளத்துடன் சொல்ல வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் எழுத்தாளன் உணர்ச்சிகரமானவனாக, சஞ்சலங்கள் கொண்டவனாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பல தளங்களில் ஐயங்கள்  அல்லது தடுமாற்றங்கள் கொண்டவனாக அவன் இருக்கலாம். அந்நிலையில் அவன் மௌனமாக இருப்பதே நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றாட அரசியல் சார்ந்த தளங்களில் ஓர் அரசியல்விமரிசகன் சொல்லும் விஷயங்களுக்கு சீரான ஒரு வளர்ச்சிப்போக்கும் முழுமையும் இருக்கும். அந்த அரசியல்விமரிசகனின் தரப்பு இன்னது என நீங்கள் வகுத்துக்கொள்ள முடியும். எழுத்தாளன் அவ்வப்போது நிகழ்பவற்றுக்கு தன் ஆன்மாவை திறந்து வைப்பவனாகவே இருப்பான்.  அவனது எழுத்து உடனடியாக நிகழ வேண்டிய ஒன்று. ஆகவே அவனிடம் முரண்பாடுகள் அதிகம் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்தையும் விட முக்கியமாக ஒன்றுண்டு. எழுத்தாளன் எழுதும்போது அந்தப் படைப்பூக்கக் கணத்தில் அடையும் உச்சமே அவன். மற்ற நேரத்தில் அவன் சாமானியன். அந்தச் சாமானியன் அரசியல் குறித்தெல்லாம் சொல்லும் கருத்துக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. உதாரணமாக தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமான அனைவருமே நெருக்கடிநிலையை ஆதரித்தார்கள் -சுந்தர ராமசாமியைத் தவிர.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, அரசியல் போன்றவற்றில் எழுத்தாளன் ஈடுபடச் சாத்தியமான இடம் மிகக்குறைவான ஒன்று. அரசியலில் உள்ள விழுமியங்கள் குறித்து அவன் பேசலாம். அது பண்பாட்டுத்தளத்தை தீண்டும் இடங்களைப்பற்றிப் பேசலாம். அப்போதுகூட அவனை ஒருவிஷயம் சீண்டி உணர்வெழுச்சி பெறச்செய்யுமென்றால் மட்டுமே அவன் பேச வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதையே எழுத்தாளனின் அரசியல் என்கிறேன். எழுத்தாளனாக மட்டுமே நின்று கொள்ளும் தரப்பு அது. அது உறுதியான கோட்பாடுகள் அல்லது நிலைபாடுகளை நம்பியது அல்ல. ஒரு நல்ல கதையை எழுதும்போது ஏற்படும் அதே மன எழுச்சியுடன் ஓர் அரசியல் சிக்கலை அவன் எதிர்கொள்ளும்போது உருவாகும் அரசியல் அது. படைப்பைப்போலவே அங்கும் தன் மனசாட்சியை, ஆழ்மனதையே அவன் திறந்து வைக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறு அவன் சொல்லும் கருத்துக்கள் அரசியல் ஆய்வாளர்கள், இதழாளர்கள் சொல்லும் கருத்துக்கள் நிரப்பாத ஓர் இடத்தை நிரப்பக்கூடியனவாக இருக்கும். அவற்றுக்கென ஒரு தனித்தன்மை இருக்கும். சமயங்களில் தர்க்கமற்ற ,அபத்தமான கருத்துக்களாகவும் அவை இருக்கலாம். ஆனாலும் அவை முக்கியமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி  அரசியலை எழுதிய மலையாள எழுத்தாளர்களான  'ஆனந்த்' 'ஓ.வி.விஜயன்' போன்றவர்களையே நான் எனக்கு முன்னுதாரணமாகக் கொண்டு வருகிறேன். அந்த வழியில் தொடர்ச்சியாக அரசியலைப்பற்றி எழுதியும் வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2 .கலைஞன் சொல்வதே சரி, பிறர் சொல்வது அல்ல என்று நான் சொல்லவில்லை. காவியகர்த்தனுக்கும் சாஸ்திர ஆசிரியனுக்கும் இடையே முரண்பாடு தெரிந்தால் காவியகர்த்தனையே பிரமாணமாகக் கொள்ளவேண்டும் என்று நம் மரபு சொன்னதென்றால் காவியகர்த்தனை வெறுமே கற்பனாவாதி என்று அது பார்க்கவில்லை என்றே பொருள். அதற்காகவே கோவையில் அதைச் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காவியகர்த்தன் இருஅம்சங்களால் சாஸ்திர ஆசிரியனுடன் வேறுபடுகிறான்.&lt;br /&gt;1. தன் ஆழ்மனதை அவன் கருவியாக்குகிறான். பழைய மொழியில் சொல்வதானால் ஆன்மாவால் அறிகிறான் 2. அவன் ஒட்டுமொத்தமாகப் பார்க்கிறான். பகுப்பாய்வுசெய்வதில்லை. அதாவது அவனுடையது ஆய்வுண்மை அல்ல தரிசன உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இதை இப்படிச் சொல்லலாம், ·ப்ராய்டா தஸ்தாயெவ்ஸ்கியா என்றால் எவரை நான் நம்புவேன்? கண்டிப்பாக தஸ்தாயெவ்ஸ்கியைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இது அறிவியலை நிராகரிப்பதாகாது. அறிவியல் செயல்படும் தளங்கள் வேறு. அங்கே அதன் கொடைகளும் வேறு. நல்ல இலக்கியம் சமகால அறிவியலின் சாரத்தை தன்னுள் வாங்கித்தான் முன்னேற முடியும். அறிவியல் அறிவது அறிவியலுண்மை. இலக்கியம் அறிவது இலக்கிய உண்மை என்று சொல்லலாம். உண்மைகள் எப்போதும் ஒன்றல்ல. அவற்றின் தன்மைகள் பல.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்முழு உண்மை என்ற ஒன்று உண்டா?&lt;br /&gt;உண்டு என நம்புகிறவன் நான். An Absolutist. அது முழுமையான அறிதல் மூலம் சாத்தியமாவது.  அந்த முழுமை நோக்கிய பயணத்தில்  அறிவியலும் இலக்கியமும் துணைவரலாம். இலக்கியம் ஒருபடி மேலாக. ஏனென்றால் அதில் உள்ள முழுமைசார் அணுகுமுறை இன்றைய அறிவியலில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;3 இலக்கியம் குறித்து, அல்லது இந்திய தத்துவம் குறித்து ஓர் நான் ஒரு கருத்தை எங்கு எப்படிச் சொன்னாலும் அதற்குப்பின்னால் 'பொறுப்பான' பல ஆண்டுக்கால அவதானிப்புகளும் ஆய்வும் உண்டு என நம்புங்கள். கவிதை குறித்தும் அப்படியே. என்னளவுக்கு தமிழ்க்கவிதையை வேறு யாரும் கவனிக்கிறார்கள் என்பதற்கு எழுத்தில் ஆதாரமில்ல்லை&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பத்தாண்டுகளில் என்னைப்பாதிக்கும் கவிதை ஏதும் வரவில்லை என்று நான் சொல்லவில்லை. பல கவிதைகளைப்பற்றி எழுதியிருக்கிறேன். கவிஞர் என எவரும் வரவில்லை என்றே சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கான விளக்கங்கள் பல. ஒன்றைமட்டும் சொல்கிறேன். கவிதையின் ஆதாரமான செயல்பாடுகளில் ஒன்று பரிச்சயமழிப்பு. சொல்லும் விஷயங்களில் அது உருவாக்கும் பரிச்சயமழிப்பே கவிதையனுபவத்தின் முதல் மனஎழுச்சியை அளிக்கிறது. அதேபோல கவிமொழியில், கவி வடிவில் உள்ள பரிச்சயமழிப்பும் முக்கியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற பத்தாண்டுகளில் வந்த கவிதைகள் எதுவும் மன எழுச்சியூட்டுமளவுக்கு புதுமொழியுடன், புது வெளிப்பாட்டுடன் அமையவில்லை என்பதே உண்மை. இதை விமர்சன மொழியறியா வாசகன் அத்தனை கவிதைகளும் ஒன்றுபோலிருக்கின்றன என்று , சரியாகத்தான், குறிப்பிடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;கலாப்ரியா வந்தபோது, தேவதேவன் நுழைந்தபோது, சுகுமாரன் அறியப்பட்டபோது, ஏன் மனுஷ்யபுத்திரன் ஆரம்பித்தபோது புதியகவிமொழியின் ஒளியால்தான் அவர்கள் கவனம்பெற்றார்கள். இன்று கவிதைமொழியின் தனித்துவத்தால் தன்னை அடையாளம் காட்டும் எந்த இளம்கவிஞரும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவேதான் முகுந்த் நாகராஜன் முக்கியமானவராக ஆகிறார். அவரது கவிதைகளின் முதல் இயல்பே அவற்றின் புத்தம் புதிய தன்மை. அதுகொடுக்கும் பிரகாசம். அவரது மொழியில் இருக்கும் சரளம் இன்றைய கவிதைகளின் சவால்களில் ஒன்று. நவீனக் கவிதை உலகமெங்கும் படிமங்களை விட்டு விலகி நுண்சித்தரிப்புகளால் ஆனதாக ஆகிக்கொண்டிருக்கிறது.  தமிழில் அழகிய நுண்சித்தரிப்புகள் கொண்ட கவிதைகள் முகுந்த் நாகராஜன் எழுதுபவை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புதுமொழியை செயற்கையாக உருவாக்கிக் கொள்ள முடியாது. இது கவிதையின் பாடுபொருளுடன் இணைந்திருக்கிறது. நம்முடைய கவிதை இன்றும் நவீனத்துவ யுகத்திலேயே நின்றுகொண்டிருக்கிறது. 'தனிமனிதனின் அந்தரங்க சிந்தனைகள்' என்ற ஒரு பொத்தாம்பொதுவான வரையறைக்குள் ஏறத்தாழ எல்லா கவிதைகளையும் அடக்கிவிடலாம். அதற்குள் படிம உருவாக்கம், உருவக மொழி என கவிதை உருவாக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நாளும் கவிதை வாசிப்பவன் நான். இருபத்தைந்தாண்டுகளாக! பெரும்பாலான கவிதைகள் சலிப்பையே அளிக்கின்றன. முன்னரே வாசித்தவையாக&lt;br /&gt;, வேறு ஒருவர் எழுதி விட்டவையாக தோற்றம் அளிக்கின்றன. ஒருபோதும் கவிதை அந்த உணர்வை அளிக்கக்கூடாது. அதன் முதல் இயல்பே  பிறிதொன்றிலாததன்மை -- அல்லது அந்த உணர்வை ஏற்படுத்தும் தன்மைதான். [அனன்யத என்று அதை பழைய இலக்கணம் சொல்லும்] அதுவே முதல் பரவசத்தை உருவாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழின் மிகப்பெரும்பாலான நவீனக்கவிதைகள் செயற்கையான இறுக்கம் கொண்டவையாக, மொழிச்சிடுக்குகள் கொண்டவையாக, போலியான தத்துவத்தோரணையுடன் [அதே இருத்த்லியல் சோகம்] உள்ளன. விதிவிலக்குகள் கூட சிறிய அளவில்தான் விதிவிலக்காகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் நல்ல கவிதைகள் வருகின்றனவா? ஆம். ஆனால் அவை பெரும்பாலும் சிறு வேறுபாடுகளை, சிறு நுட்பங்களை  மட்டுமே கொண்டுள்ளன. ஒருகவிஞனுக்கும் இன்னொரு கவிஞனுக்கும் இடையே உள்ளது சிறிய வேறுபாடு. அவனுடைய ஒருகவிதைக்கும் இன்னொன்றுக்கும் இடையே உள்ளதும் அதேபோல சிறிய வேறுபாடே.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கவிஞனிடம் அதிகமாக எதிர்பார்ப்பவன். அவன் மொழியின் முன்னோடி விசை என எண்ணுபவன். சில்லறை நுட்பங்களை உருவாக்குபவனாக அவனைக் கண்டு திருப்தி கொள்பவனல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஷயங்களைப்பற்றி மிக விரிவாக எழுதியிருக்கிறேன். 'உள்ளுணர்வின் தடத்தில்', 'நவீனத்துவத்திற்குப் பின் கவிதை- தேவதேவனை முன்வைத்து' 'ஈழ இலக்கியம்' போன்ற  விமரிசன நூல்களில். துரதிருஷ்டவசமாக பெரும்பாலான கவிஞர்கள் எதையுமே வாசிப்பதில்லை. ஆகவே அவர்களின் எல்லைகளும் பலவீனங்களும் அவர்களுக்கே தெரிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;விமரிசகனின் நிராகரிப்பை எதிர்பார்ப்பாக விளங்கிக் கொள்ளுங்கள். அது ஒர் அறைகூவலும்கூட&lt;br /&gt;&lt;br /&gt;ஜெ    &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள ஜெ,&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பதிலுக்கு நன்றி!. உண்மையில் உங்கள் பதில் என்னைச் சற்று பதற்றமடையச் செய்திருக்கிறது. ஆனால் நிச்சயம் சோர்வடையவில்லை. நான் சோர்வடையவும் மாட்டேன் ஏனெனில் நான் உங்கள் மாணவன். உங்களை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. ஒரு விமர்சகனாக ஒரு கவிதையியல் மாணவனாக நீங்கள் குறிப்பிடுகிற விஷயங்களை நான் ஓர் எல்லை வரை உடன்படுகிறேன். தமிழில் தற்போது எழுதப்படும் கவிதைகளில் (என் கவிதைகள் உட்பட) இருத்தலிய சிக்கல்களே எழுதுவதற்கான மன உந்தத்தை அதிகமும் வழங்கி வருகிறது. ஆனால் மீண்டும் சொல்கிறேன். அதிலிருந்து விடுபடுவதற்கான திமிறல்கள் நிறைந்த இளங்கவிஞர்கள் இருக்கவே செய்கிறார்கள். (என் கவிதை உலகமோ, இசை, நரன், செல்மா பிரியதர்ஸன் போன்றோர் கவிதை உலகமோ வெறும் இருத்தலிய சிக்கல்களால் நிறைந்தது அல்ல அதனாலேயே அவைகள் புதிய சொல்லாடகள் புதிய வடிவம் போன்றவற்றை கொண்டிருக்கிறது என்பதும் உண்மை) நீங்கள் சொல்கிற விஷங்களை பற்றிய புரிதல் நிரம்பிய இளைஞர்கள் தமிழில் இப்போது வந்து கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கத்துடன் -- elango krishnan&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள இளங்கோ கிருஷ்ணன்&lt;br /&gt;வற்றாத ஊக்கமே கவிஞனை உருவாக்குகிறது. நீங்கள் சோர்வடையவில்லை என்பதே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் சொன்ன கருத்துக்கள் விவாதத்துக்காகவே. இன்றைய உலகக் கவிதையின் போக்குகள் குறித்து, இன்று வடிவரீதியாக கவிதை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து என் கட்டுரைகளில் நிறையவே எழுதியிருக்கிறேன். புதிய கவிஞர்களிடமிருந்து எனக்கு எதிர்வினைகளே வந்ததில்லை. சிறு உதாரணம், எம்.டி.வி போன்ற ஓர் காட்சி ஊடகம் படிமங்கள் என்ற வடிவையே ஓர் அன்றாடப்பொருளாக ஆக்கி , மிதமிஞ்சிப் பெருக்கி, அர்த்தமிழக்கச் செய்துவிட்டது. அதற்கு எதிராகவே உலகமெங்கும் வெற்றுக்கவிதை [பிளெயின் பொயட்ரி]என்ற வடிவம் உருவாகி வந்தது. சட்டென்று அதுவும் சலித்து நுண் சித்தரிப்புகளினாலான கவிதை நோக்கி கவிதை நகர்ந்தது... இதைப்பற்றிய கவனமெல்லாம் நம் கவிஞர்களிடம் இருக்கிறதா என்ற ஆழமான ஐயம் என்னிடம் இருக்கிறது..&lt;br /&gt;நான் தொடர்ச்சியாக கவிதை குறித்த உரையாடல் அரங்குகள் நிகழ்த்தியிருக்கிறேந்- அவை விரிவாக பதிவாகியும் உள்ளன. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நாம் இவற்றைப்பற்றிப் பேசலாம்.&lt;br /&gt;என்ன பிரச்சினை என்றால், நம் கவிஞர்களில் பெரும்பாலானவர்கள் குடித்துவிட்டு பேசுவதையே கவிதைவிவாதம் என நினைக்கிறார்கள். கவிதை குறித்த விவாதம் என்பது மிகுந்த பிரக்ஞைவிழிப்பு நிலையில், பயன்படுத்தப்படும் சொற்களைப்பற்றிய அபாரமான கவனத்துடன் நிகழ்த்தப்பட வேண்டிய ஒன்று. சொல்லப்போனால் ஒருமுழுநாள் பேசிய பிரகே ஒருவர் சொல்ல வருவதென்ன என்று இன்னொருவருக்குப் புரியும். தப்பான ஒரு நபர் இடையே புகுந்துவிட்டால் மொத்த விவாதமும் சீரழியும். அந்நிலையில் ஆரம்பிக்கும்போதே முழுப்போதையில் இருந்தால் என்ன பேச்சு நிகழும்? நான் பல அராங்குகளில்  அந்த கேலிக்கூத்தைக் கண்டிருக்கிறேன். பின்னர் தோன்றியது தங்கள் இயலாமையைத்தான் நம் சில்லறைக் கவிஞர்கள் குடியில் மறைக்கிறார்கள் என...&lt;br /&gt;ஏதேனும் ஒரு தருணத்தில் தெளிவுடன் அமர்ந்து நாம் விவாதிக்கலாம்&lt;br /&gt;ஜெ&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-7721833469929101022?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/7721833469929101022/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/02/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/7721833469929101022'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/7721833469929101022'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/02/blog-post.html' title='ஜெயமோகனின் கோவை சந்திப்பு'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-2051637544747948223</id><published>2010-01-29T19:01:00.002+05:30</published><updated>2010-01-29T19:04:58.387+05:30</updated><title type='text'>என் இரண்டு கவிதைகள்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/S2Lj91VZzGI/AAAAAAAAAEQ/VyKwLJ2KRuw/s1600-h/n710660234_195013_8330[1].jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5432154751990615138" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 218px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/S2Lj91VZzGI/AAAAAAAAAEQ/VyKwLJ2KRuw/s320/n710660234_195013_8330%5B1%5D.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;எங்கள் ஆறு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;எங்களுக்கும் ஒர் ஆறுண்டு&lt;br /&gt;வெறுமணல் பரப்பாய் விரிந்து கிடக்க&lt;br /&gt;ஒணான்கள் முட்டையிட&lt;br /&gt;கள்ளிகள் பிழைத்திருக்க&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகள் விளையாட&lt;br /&gt;பெண்டுகள் ஒதுங்கிட&lt;br /&gt;பன்றிகள் மேய்ந்திருக்க&lt;br /&gt;&lt;br /&gt;வானத்தில் மேகமுண்டு&lt;br /&gt;சூரியனில் மழையுண்டு&lt;br /&gt;காகமோ குருவியோ&lt;br /&gt;நிழல் ஒதுங்க&lt;br /&gt;ஆறெங்கும் முள் மரமுண்டு&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கும் ஒர் ஆறுண்டு&lt;br /&gt;ஆற்றுக்கோர் ஊருண்டு&lt;br /&gt;ஊருக்கோர் சனமுண்டு&lt;br /&gt;வாழ்வைப் போல் ஒன்றுண்டு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குளம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெற்றிப்பொட்டில்&lt;br /&gt;நினைவு நிறுத்தி&lt;br /&gt;நெஞ்சுக்குள்&lt;br /&gt;நிலவு வளர்க்கும்&lt;br /&gt;குளத்தின் ஆழத்தில்&lt;br /&gt;ஒயாது சலம்புகிறது&lt;br /&gt;ஒரே ஒரு மீன்&lt;br /&gt;&lt;br /&gt;பெளர்ணமியில் நீந்தும் வெறியில்&lt;br /&gt;பாய்ந்து ஒரு கணம்&lt;br /&gt;வானத்தில் நீச்சல்&lt;br /&gt;சரிந்து மறுகணம்&lt;br /&gt;நீருக்குள் பறத்தல் என&lt;br /&gt;ஒரு நொடியும்&lt;br /&gt;ஒயாத சலனம்&lt;br /&gt;&lt;br /&gt;தளும்பலில்&lt;br /&gt;கரையேறி கரையேறி&lt;br /&gt;திரும்பும் குளம்&lt;br /&gt;&lt;br /&gt;நீரெங்கும் சிதறி&lt;br /&gt;நிலவு-முகம் சேர்வதற்குள்&lt;br /&gt;மீண்டும் ஒரு பாய்தல் மீண்டும் ஒரு &lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;சரிதல்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span class=""&gt;நன்றி: 'உயிர்மை' இதழ்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-2051637544747948223?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/2051637544747948223/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/01/blog-post_29.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/2051637544747948223'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/2051637544747948223'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/01/blog-post_29.html' title='என் இரண்டு கவிதைகள்'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/S2Lj91VZzGI/AAAAAAAAAEQ/VyKwLJ2KRuw/s72-c/n710660234_195013_8330%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-5630242149150242770</id><published>2010-01-24T17:23:00.002+05:30</published><updated>2010-01-24T17:26:41.060+05:30</updated><title type='text'>குறள் – ஓர் உரையாடல்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/S1w1Zva0sGI/AAAAAAAAAEI/CiAJjHbvjxo/s1600-h/thiruvalluvar[1].jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5430273967043948642" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 290px; CURSOR: hand; HEIGHT: 309px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/S1w1Zva0sGI/AAAAAAAAAEI/CiAJjHbvjxo/s320/thiruvalluvar%5B1%5D.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஒரு முறை சேலத்தில் தங்கியிருந்த போது ஒரு இளம் கவிஞரிடம் திருக்குறள் நீதி நூலா? கவிதை நூலா? எனக் கேட்டேன் அவர் சற்றும் யோசிக்காமல் நீதி நூல் என்றார். நான் அவரிடம் “இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்... “ என்ற குறளை குறிப்பிட்டு அதில் உள்ளது கவிதையில்லையா அந்த அறச்சீற்றம் கவிஞனுக்கானது இல்லையா என்றேன் அவர் நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டார். ஏதேனும் ஒன்றிரண்டு பாடல்களில் கவிதைத்தன்மை இருக்க கூடும் மற்றபடி ஒட்டு மொத்தமாக அது கவிதை நூல் எனக் கூறுவது கடினம் என்றார். வேறொரு சந்தர்ப்பத்தில் மகாகவிகள் பற்றி கோவை ஞானியிடம் உரையாடிக்கொண்டிருந்த போது அவரும் திருக்குறள் பற்றி இதைப்போலவே ஒரு கருத்து சொன்னார். கடந்த பதினைந்து ஆண்டுகளில் நான் திரும்ப திரும்ப படித்துக் கொண்டிருக்கும் செவ்வியல் நூல்களில் திருக்குறள் பிரதானமானது. என்னுடைய இருபதாவது வயதில் நானும் திருக்குறள் ஒரு கவிதை நூல் அல்ல என்றே நம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திருக்குறள் பற்றிய இந்த உரையாடல் காலகாலமாக தமிழ் சூழலில் நடந்து வந்திருக்கிறது. இதற்கு காரணம் ஒவ்வொரு குறளிலும் ஒரு கருத்து கூறப்படுவதுதான் என்பதை சொல்ல வேண்டியதில்லை. நவீன கவிதையியல் கருத்தாக மட்டுமே சொல்லப்படும் எதையும் கவிதை இல்லை என்றே பெரும்பாலும் வாதிடுகிறது. அதற்கு முன்வைக்கப்படும் தர்கங்களும் கூட நியாமானதே. கவிதை என்பது ஒரு போதும் அறிவார்ந்த ஒரு கூற்றை மேல்மனதிலிருந்து கூறுவதாக இருக்க முடியாது. ஒரு நல்ல கவிதையானது உணர்வுபூர்வமாக கதறுவதே அன்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு பிரசங்கம் அல்ல. அப்படியானால் கவிதையில் கருத்து சொல்லப்பட கூடாதா எனில் சொல்லப்படலாம் அதுவும் உணர்வுபூர்வமான ஒரு வெளிப்பாடாக இருக்க வேண்டுமே அன்றியும் போதமனதின் சொல்லாக அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;அடிப்படையில் எல்லா விஷயங்களையும் ஒரு தகவலாக ஒரு செய்தியாக அறிவார்த்தமான ஒரு நடவடிக்கை வழியாகவே சேகரித்துக் கொள்கிறோம். பின்பு மெல்ல எண்ணற்ற காரணங்களால் அந்த தகவல் அல்லது செய்தியானது உணர்வு பூர்வமாக மாறுகிறது. உதாரணம்: அம்மா, மனைவி, குழந்தைகள் மற்றும் நண்பர்களை பற்றிய நம் மனப்பதிவுகளை சொல்லலாம். நமக்கு மிகவும் வேண்டிய ஒருவரின் மரணம் ஒரு செய்தியாகவே கிரகிக்கப்படுகிறது. பின்பு அவர்களைப்பற்றிய நினைவுகள் அவரது மரணத்தை பற்றிய அறிவார்த்தமான செய்தியால் தூண்டப்பட்டு உணர்வுப்பூர்வமாக நாம் மாறி விடுகிறோம். கவிதை என்பது உணர்வுபூர்வமாக நாம் மாறும் தருணத்தில் நிகழ்கிற ஒரு சமாச்சாரம் எனவே உணர்வுபூர்வமாக மாறிவிட்ட செய்தியின் அளவிற்கே ஒரு கருத்து அதில் நிற்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;‘சுழன்றும் ஏர் பின்னது உலகம்’ என்கிறார் வள்ளுவர். இந்த குறளில் வள்ளுவர் கூற வந்தது என்ன ஏரின் பெருமையைதானே. ஆனால் இதில் ஒரு தகவலை நமக்கு சொல்லி விடுகிறார். உலகம் சுழன்று கொண்டிருக்கிறது என்பதை சொல்லி விடுகிறார். உண்மையில் உலகம் சுழன்று கொண்டிருக்கிறது என்பது வாசிப்பு அல்லது கேட்டல் வழியாக ஒரு தகவலாகவே வள்ளுவரிடத்து வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஏரின் பெருமையை சொல்ல நேர்ந்த போது உலகம் சுழன்று கொண்டுதான் இருக்கிறது எதன் பின் என்றால் ஏரின் பின் என்கிறார். ஒரு தகவல் ஒரு கவிதையில் இப்படித்தான் கவிஞனின் பிரக்ஞை இல்லாமல் வந்து சேரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;திருக்குறள் என்ற நூலில் உள்ள எல்லா வெண்பாக்களுமே இப்படியான பிரக்ஞையின் அனுமதியற்ற கருத்துகளாகவே இருக்க ஏலும். அல்லது ஒரு கருத்தைப்பற்றிய உணர்வுபூர்வமான நிலைப்பாடுகளாக இருக்க கூடும். தன்னுள் தளும்பித் தத்தளிக்கும் கோடான கோடி கருத்தியல்களின் நீண்ட போரட்டமே திருக்குறள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பல்லாக்கு போகிறது ஒருவன் அமர்ந்து செல்கிறான். நால்வர் தூக்கிச் செல்கிறார்கள். வள்ளுவனுக்கு மனம் பதைக்கிறது. இது பாவம் என்கிறான். இதெல்லாம் ஏன் என்று எண்ணுகிறான். இது அவர்கள் விதி, வினைப்பயன் என்று தர்க்கம் சொல்கிறது. என்ன விதியென்றாலும் மனிதர் நோக மனிதர் சுகிப்பதோ என மறுகுகிறான். காரண காரியங்களை புரிந்து கொள்ள முயன்று தோற்கிறான். அறம் எதுவென தவிக்கிறான். இதுதான் அறம் என சொல்ல நான் யார் நான் இதுதான் அறம் என ஒன்றை சொல்ல இறுதி உண்மை வேறொன்றாக இருந்தால் என்ன செய்வதென தயங்குகிறான். இனம் புரியாத குற்ற உணர்வில் “அறத்தாறு இதுவென வேண்டா” என தன் மனதிற்கு சொல்கிறான். இதை கவிதை இல்லை என நாம் சொல்ல முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;தத்துவமோ கலையோ கொதி நிலையில் செயல்படுகிற போது மனித மனம் ஒன்று போன்ற அனுபவத்தையே உணர்கிறது. தனித்தனி உடல்செல்களாக பிரிவதற்கு முன் அனைத்தும் ஸ்டெம் செல்களாக இருப்பது போலவே அறிவு உணர்வென பிரிவதற்கு முன் அனைத்து அனுபவங்களும் ஒன்றாக இருக்கிறது போலும். இப்படியான ஒரு மையப்புள்ளியில் இருந்து கிளம்பியே குறள் போன்ற படைப்புகள் வெளிப்படக்கூடும் என நம்புகிறேன். அனைத்து மத நூல்களும் கவிதைக்கு நெருக்கமான உரையாடல் மொழி கொண்டிருப்பதையும் இதனோடு இணைத்து நாம் யோசிக்கலாம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;உலக இலக்கிய வரலாற்றில் இப்படி தத்துவங்களின் தர்கங்களுக்கும் கவிதைக்கும் இடையில் சிக்கிக் கொண்ட மேதைகள் நிறைய உள்ளனர் வள்ளுவர் முதல் நீட்ஷே வரை. யாருக்கு எப்படியோ நான் அவர்களை கவிஞன் என்றே அழைப்பேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-5630242149150242770?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/5630242149150242770/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/01/blog-post.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/5630242149150242770'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/5630242149150242770'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/01/blog-post.html' title='குறள் – ஓர் உரையாடல்'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/S1w1Zva0sGI/AAAAAAAAAEI/CiAJjHbvjxo/s72-c/thiruvalluvar%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-2259500981696706589</id><published>2009-12-17T18:38:00.003+05:30</published><updated>2009-12-17T18:44:05.322+05:30</updated><title type='text'>இரண்டு இந்தியக் கவிதைகள் – மொழிபெயர்ப்பு</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/SyouaNmKCMI/AAAAAAAAADg/6knwQDh4XfU/s1600-h/ayyappa+panicker.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5416192529727621314" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 78px; CURSOR: hand; HEIGHT: 94px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/SyouaNmKCMI/AAAAAAAAADg/6knwQDh4XfU/s320/ayyappa+panicker.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;அய்யப்ப பணிக்கர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நான்கு கம்பீரக் குதிரைகள்&lt;br /&gt;பாய்ந்தோடிக் கொண்டிருந்தன&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று வெள்ளை நிறத்தது, ஒன்று கருப்பு&lt;br /&gt;ஒன்று சிவப்பு, ஒன்று பழுப்பு&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றிற்கு நான்கு கால்கள்&lt;br /&gt;ஒன்றிற்கு மூன்று&lt;br /&gt;ஒன்றிற்கு இரண்டு&lt;br /&gt;நான்காவதிற்கு ஒரு கால்&lt;br /&gt;&lt;br /&gt;ஒற்றைக்கால் குதிரை சொன்னது:&lt;br /&gt;இது நடனத்திற்கான நேரம்&lt;br /&gt;இனிய நண்பர்களே&lt;br /&gt;ஒற்றைக்காலில் நடனமிடுவோம்&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்தும் ஒப்புக் கொண்டன&lt;br /&gt;நடனம் துவங்கியது&lt;br /&gt;நான்கு கால் குதிரை தளர்ந்து வெளியேறியது&lt;br /&gt;மூன்று கால் குதிரை தடுமாறி விழுந்தது&lt;br /&gt;இரண்டு கால் குதிரை நிலைகுலைந்து விழப்போனது&lt;br /&gt;ஒற்றைகால் குதிரை மட்டுமே&lt;br /&gt;நடனமாடிக்கொண்டிருக்கிறது. ஆடிக்கொண்டே இருக்கிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5416191912180757474" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 150px; CURSOR: hand; HEIGHT: 236px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syot2RDgs-I/AAAAAAAAADY/L0d5qeBf2-8/s320/naryana+reddy.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாரயண ரெட்டி&lt;br /&gt;&lt;br /&gt;நான் உனக்கொரு சமுத்திரத்தை தருவேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நான் உனக்கொரு சமுத்திரத்தை தருவேன்&lt;br /&gt;அதை உடலெங்கும் போர்த்திக் கொள்&lt;br /&gt;பிறகு பார்&lt;br /&gt;அடி ஆழமற்ற சிந்தையாக நீ இருப்பாய்&lt;br /&gt;மிகுந்த நம்பிக்கையாளனாகவும்&lt;br /&gt;&lt;br /&gt;நான் உனக்கொரு சாலையை தருவேன்&lt;br /&gt;அதை கால்களில் அணிந்து கொள்&lt;br /&gt;பிறகு பார்&lt;br /&gt;கோபத்தின் முஷ்டியாக நீ இருப்பாய்&lt;br /&gt;பசி நோக்கி அணிவகுக்கும் ஒரு கூட்டமாகவும்&lt;br /&gt;&lt;br /&gt;நான் உனக்கொரு வானத்தை தருவேன்&lt;br /&gt;மடித்து அதை உன் தலைக்குள் செருகிக் கொள்&lt;br /&gt;பிறகு பார்&lt;br /&gt;கோள்கள் பூம் பூம் மாடென உன் இசைக்கு ஆடும்&lt;br /&gt;விண்மீன்கள் வெண்ணைத் துண்டென உன் கைகளுக்கு வரும்&lt;br /&gt;&lt;br /&gt;நான் உனக்கொரு கொடியை தருவேன்&lt;br /&gt;விரித்து அதை உன் சுவாசத்தில் நிறைத்துக் கொள்&lt;br /&gt;பிறகு பார்&lt;br /&gt;கம்பங்கள் ஜோதியென ஊர்வலம் போகும்&lt;br /&gt;குடிசைகள் குகைகளாக பிரதிபலிக்கும்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;(கே.சச்சிதானந்தன் தொகுத்த ‘GESTURES’ Poetries of SAARC Countries என்ற நூலில் இருந்து தமிழாக்கம் இளங்கோ கிருஷ்ணன்)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-2259500981696706589?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/2259500981696706589/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2009/12/blog-post_17.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/2259500981696706589'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/2259500981696706589'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2009/12/blog-post_17.html' title='இரண்டு இந்தியக் கவிதைகள் – மொழிபெயர்ப்பு'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/SyouaNmKCMI/AAAAAAAAADg/6knwQDh4XfU/s72-c/ayyappa+panicker.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-7733627026254760459</id><published>2009-12-01T22:14:00.002+05:30</published><updated>2009-12-01T22:17:20.055+05:30</updated><title type='text'>கவிதைகள்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/SxVIecZ3ZXI/AAAAAAAAADM/wdGpCgTCmZ8/s1600/snake_river.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5410310215213475186" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 234px; CURSOR: hand; HEIGHT: 317px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/SxVIecZ3ZXI/AAAAAAAAADM/wdGpCgTCmZ8/s320/snake_river.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;அதற்கே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஒரே ஒரு மதுப்போத்தல்&lt;br /&gt;அதற்கே நான் வந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;நகரெங்கும் படுகளம்&lt;br /&gt;ஊரே பிணக் காடு&lt;br /&gt;ஆனாலும் வந்தேன்&lt;br /&gt;அதற்கே நான் வந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;நிலமெங்கும் கொடுநாகம்&lt;br /&gt;நீளும் வழி பாதாளம்&lt;br /&gt;ஆனாலும் வந்தேன்&lt;br /&gt;அதற்கே நான் வந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;குன்றெங்கும் எரிமலை&lt;br /&gt;குறும்புதரில் கொள்ளிவாய்கள்&lt;br /&gt;ஆனாலும் வந்தேன்&lt;br /&gt;அதற்கே நான் வந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;கடலெங்கும் பேய் அலைகள்&lt;br /&gt;கரையெல்லாம் முதலை&lt;br /&gt;ஆனாலும் வந்தேன்&lt;br /&gt;அதற்கே நான் வந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;வனமெல்லாம் புலிக்கூட்டம்&lt;br /&gt;மரந்தோறும் வேதாளம்&lt;br /&gt;ஆனாலும் வந்தேன்&lt;br /&gt;அதற்கே நான் வந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;வானெங்கும் விஷக்காற்று&lt;br /&gt;திசையெல்லாம் மின்னல்&lt;br /&gt;ஆனாலும் வந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஒரு மதுப்போத்தல்&lt;br /&gt;அதற்கே நான் வந்தேன்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காப்பி நதி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;காப்பி நதியின்&lt;br /&gt;கரையில்&lt;br /&gt;அமைந்துள்ளது&lt;br /&gt;உன் நகரம்&lt;br /&gt;கரையெங்கும்&lt;br /&gt;கிளைக்கும் தாவரங்கள்&lt;br /&gt;காய்ந்தபின்&lt;br /&gt;காப்பி நிறத்திற்கே&lt;br /&gt;திரும்புகின்றன&lt;br /&gt;காப்பி வாடை வீசும்&lt;br /&gt;மனிதர் உதடுகளில்&lt;br /&gt;உருள்வது&lt;br /&gt;காப்பியின் மொழி&lt;br /&gt;காப்பி வண்ண மண்ணில்&lt;br /&gt;அனைத்தும்&lt;br /&gt;காப்பியின் ரூபம்&lt;br /&gt;சந்திர சூர்யர் ஒளியில்&lt;br /&gt;காப்பியின் பிசுப்பு&lt;br /&gt;மின்னலின் ருசியில்&lt;br /&gt;காப்பியின் கசப்பு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;காப்பி நதி குடிக்க வயிறு உண்டோ யயாதி&lt;br /&gt;காப்பி நதி கடக்க தோணி உண்டோ யயாதி&lt;br /&gt;காப்பி நதி கடந்தால் காலம் உண்டோ யயாதி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;19ம் நாள் யுத்தம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இரவு வெகுநேரம்&lt;br /&gt;கதவு தட்டப்பட&lt;br /&gt;திறந்தேன்&lt;br /&gt;நின்றிருந்தது&lt;br /&gt;என் பிரேதம்&lt;br /&gt;இன்றைய யுத்தத்தின்&lt;br /&gt;வரவு செலவு அறிக்கையை&lt;br /&gt;விவாதிக்கத் துவங்கினோம்&lt;br /&gt;இறுதியில் எஞ்சியிருந்தன&lt;br /&gt;மாலை சூரியனும்&lt;br /&gt;கொஞ்சம் கையெறி குண்டுகளும்&lt;br /&gt;குற்றுயிரான நம்பிக்கையும்&lt;br /&gt;சில முளைக்காத சொற்களும்&lt;br /&gt;தீக்கிரையான நகரத்தில்&lt;br /&gt;பிணங்களின் சென்செக்ஸ்&lt;br /&gt;இன்று சரிந்திருந்தது&lt;br /&gt;இன்றைய புகாரின் சூத்திரம்&lt;br /&gt;என்ன என்றேன்&lt;br /&gt;நமது திருவிழாக்களை&lt;br /&gt;வழிப்பறி செய்யும்&lt;br /&gt;ஆரலைக் கள்வர்கள்&lt;br /&gt;என் மதுக்குடுவையை&lt;br /&gt;பிடுங்கிக்கொண்டார்கள் என்றது&lt;br /&gt;பிறகு யுத்தத்தின் முடிவைப் பற்றி&lt;br /&gt;வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம்&lt;br /&gt;நான் இறக்கும் வரை &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-7733627026254760459?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/7733627026254760459/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2009/12/blog-post_01.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/7733627026254760459'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/7733627026254760459'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2009/12/blog-post_01.html' title='கவிதைகள்'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/SxVIecZ3ZXI/AAAAAAAAADM/wdGpCgTCmZ8/s72-c/snake_river.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-5452230763466499434</id><published>2009-11-14T17:07:00.002+05:30</published><updated>2009-11-15T15:12:12.051+05:30</updated><title type='text'>லெவி-ஸ்டிராஸின் மரணம்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Sv6XC-VTW4I/AAAAAAAAADE/6gymATT6ea4/s1600-h/strauss2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5403922680239053698" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 225px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Sv6XC-VTW4I/AAAAAAAAADE/6gymATT6ea4/s320/strauss2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;உலகின் தலைசிறந்த மானுடவியல் ஆய்வாளரும் நவீன மானுடவியலின் தந்தை எனப் போற்றபடுபவரும் 3 தலைமுறைகளாக ஐரோபிய அறிவுச் சூழலை பெரிதும் பாதித்திருப்பவருமான கிளோது லெவி-ஸ்டிராஸ் கடந்த 3ம் தேதி தனது 101 வயதில் பிரான்சில் காலமானார்.&lt;br /&gt;&lt;br /&gt;லெவிஸ்டிராஸ் என்ற பெயர் எனக்கு சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு அறிமுகமானது. எங்கெல்ஸின் ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு’ என்ற நூலை படித்திருந்த சமயம் அது என்னை மிகவும் பாதித்திருந்தது. சமூகம் சார்ந்த என் பார்வைகளை கூர்மையாக்கிய முக்கியமான நூல்களில் அதுவும் ஒன்று. அந்த நூலை படித்தது முதல் மானுடவியல் எனக்கு மிகவும் ஈர்ப்புடைய துறைகளில் ஒன்றாகிப் போனது. தொடர்ந்து அது சார்ந்த நூல்களை தேடத் தொடங்கிய போது நான் லெவிஸ்டிராஸிடம் வந்து சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;லெவிஸ்டிராஸ் தொன்மவியல் பற்றி பேசிய விஷயங்கள் எனக்கு தொன்மங்களின் மேல் அளவுகடந்த காதலை உருவாக்கியது. இன்று வரை என்னால் தொன்மங்களின் மீதான வசீகரத்திலிருந்தும் லெவிஸ்டிராஸிடமிருந்தும்  முழுதாக வெளிவர முடியவில்லை. அவர் எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகளில் ஒருவராக இருந்ததிற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு என நான் கருதுகிறேன். எனக்குள்ள பைத்தியங்களில் சில அவருக்கும் உண்டு. அதாவது: தத்துவம், வரலாறு, இலக்கியம், இசை.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியம், இசை போன்ற கலை சார்ந்த வடிவங்கள் அவருள் ஏற்படுத்திய ஆழமான பாதிப்புகள் தத்துவ ஆர்வம் அவருக்கு வழங்கிய தர்க்கம் ஆகியவையால் அவரால் தொன்மங்களை மிக அழகாக விளக்க முடிந்தது. ஒவ்வொரு தொன்மமும் ஒரு  மொழியின் அமைப்பை கொண்டது எனச்சொல்லும் லெவிஸ்டிராஸ் வரலாறு என்பதே ஒரு புனைவுதான் என்கிறார். பழங்குடி வாழ்வின் மீது அவருக்கிருந்த ஆழமான அவதானம் மானுடவியல் சார்ந்த பல முக்கியமான தெளிவுகளை வழங்கியது. அவரது பல நிலைபாடுகள் மானுடவியலாளர்களை மட்டுமல்லாது. தத்துவம், வரலாற்றியல், சமூகவியல் போன்ற பல துறைகளில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. சார்த்தருக்கும் அவருக்கும் நடந்த கருத்து யுத்தம் வரலாற்று புகழ் பெற்றது. உலகம்  முழுதையும் இருத்தலியம் பிசாசை போல் உலுக்கி கொண்டிருந்த போது ஒரு மதங்கொண்ட பசித்த யானை காட்டுக்குள் நுழைவதைப்போல் தத்துவத்துக்குள் நுழைந்தன அவரின் அமைப்பியல்வாத கருத்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘என்ன இருந்தாலும் அவர் ஒரு எதிர்-மார்க்சியர் தானே?’ என்று கேட்டார் ஒரு தோழர். உண்மைதான். மார்க்சியத்தின் வரலாற்று வாதம் போன்ற விஷயங்களை லெவிஸ்டிராஸ் கடுமையாக மறுத்தார் என்ற போதும் அடிப்படையில் அவர் ஒரு இடதுசாரி சுபாவம் உடையவர். ஆனால் பெரும்பாலான இடதுசாரிகளைப் போல வறட்டு கார்டீசிய அணுகுமுறைகளோ பேகனிய பார்வைகளோ அவரிடத்தில் இல்லை. தத்துவங்களுள் உள்ள கலையார்ந்த அம்சங்களையும், கலைப்படைப்புகளுள் உள்ள தத்துவார்த்தமான பகுதிகளையும் பற்றிய ஒரு தெளிவான புரிதலோடுதான் இயங்கினார். மனிதன் என்ற ஜீவராசியை ஒரு அல்ஜீப்ரா போல விளக்கிவிட முடியும் என்று அவர் நம்பினார். அதற்கான வழியை வெறும் தர்க்க-கணிதமுறைமைகளில் அவர் தேடவில்லை மாறாக கலையின் தன்மை மிகுந்த முறைமைகளை கையாண்டார். தத்துவார்த்தமான சாரம்சத்தோடு கலைநடவடிக்கைகளில் ஈடுபட்டவர் சார்த்தர் எனில் கலையார்தமான சாரம்த்தோடு தத்துவ நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் லெவிஸ்டிராஸ் என நான் புரிந்து கொள்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வருடம் நவம்பர் மாதம் லெவிஸ்டிராஸ் இறந்து விட்டது போலவும் அச்செய்தியை நான் நாளிதழில் படிப்பது போலவும் ஒரு கனவு வந்தது. என் நண்பர்கள் ந.முத்துவிடமும், இசையிடமும் இன்னும் ஒரு வருடமாவது இருந்திருக்கலாம் 100 வயதை பார்த்திருப்பார் என்று அங்கலாய்துக் கொண்டிருந்தேன். நான் கண்ட அந்தக் கனவு அவருக்கு எப்படி தெரிந்ததோ சரியாக ஒராண்டுகள் கழித்து இந்த நவம்பரில் இறந்திருக்கிறார். ஒரு நேர்காணலில் அவரே சொன்னது போல லெவிஸ்டிராஸ்தான் இறந்திருக்கிறார் அவர் பயணம் இன்னும் உள்ளது. மானுடகுலத்தின் ரகசியங்களை குறியீடுகளாக மினுக்கியபடி பண்பாடுகள் தோறும் உறைந்துள்ளன எண்ணற்ற தொன்மங்கள். தன் முதிர்ந்த அனுபவத்தாலும் மேதமையாலும் அவைகளை வாசித்து விளக்க அந்த மனிதர்தான் இல்லை. “ஆசுஆகு எந்தை யாண்டுளன் கொல்லோ”.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1218047861640282781-5452230763466499434?l=ilangokrishnanthewriter.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/feeds/5452230763466499434/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2009/11/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/5452230763466499434'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1218047861640282781/posts/default/5452230763466499434'/><link rel='alternate' type='text/html' href='http://ilangokrishnanthewriter.blogspot.com/2009/11/blog-post.html' title='லெவி-ஸ்டிராஸின் மரணம்'/><author><name>இளங்கோ கிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/06070685100912921738</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Syup0KjU4-I/AAAAAAAAADo/zv9WeCCeec4/S220/SDC10653.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_PC5r_Z2RKxY/Sv6XC-VTW4I/AAAAAAAAADE/6gymATT6ea4/s72-c/strauss2.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1218047861640282781.post-3709052935168566423</id><published>2009-10-13T21:34:00.001+05:30</published><updated>2009-10-13T21:44:42.801+05:30</updated><title type='text'>கோவை ஞானி – நேர் காணல் -4</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;இந்தியாவில் மார்க்சியம் பெரும் சரிவை சந்தித்ததிற்கு முக்கிய காரணம் என்ன?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;காரணங்கள் மிக விரிவானவை. எனினும் சிலவற்றை இங்கு சொல்ல முடியும். இந்தியாவிற்கு சோசலிசம் இன்றியமையாதது. என்று நம்பிய நேரு இக்கொள்கை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் இடம் பெறச் செய்தவர். இந்துத்துவ சார்புடைய வல்லபாய் படேல், கோவிந்த் வல்லவ பந்த், டான்சன் முதலியவர்கள் காங்கிரஸ் கட்சிக்குள் கம்யூனிச எதிர்ப்பாளர்களாகவும் வலிமை பெற்றவர்களாகவும் இருந்த காரணத்தால் காங்கிரஸ் இயக்கத்தை சோசலிசம் நோக்கி நடத்த நேருவால் இயலவில்லை. இந்திய-சீன எல்லைச் சிக்கலை தீர்ப்பதில் சீனாவை போலவே நேருவுக்கும் இருந்த அக்கறை படேல் முதலியவர்களுக்கு உடன்பாடில்லை. ஆகவே சீனாவுக்கும் இந்தியாவுக்கும் ஏற்பட்ட மோதலை கம்யூனிச எதிர்ப்பாக இவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். சீனாவோடு பகை வளர்த்துக் கொண்ட ரஷ்யா சீன எதிர்ப்புக்கு இந்தியாவை தூண்டியது. இந்தியாவில் முதலாளிய சக்திகளுக்கு இவையாவும் தேவையாகவும் இருந்தது. இந்தியாவை அரைக் காலனி, அரை நிலப்பிரபுத்துவம் என்றும் இந்திய முதலாளிகள் தரகு முதலாளிகள் என்றும் இந்தியாவை வர்க்க வரையறை செய்து ஆயுதப்போராட்டத்தை தொடங்கிய நக்சல்பாரி இயக்கத்தையும் பின்னர் இன்று வரை இந்தியாவின் பல மாநிலங்களில் உறுதியாக செயல்படுகின்ற மார்க்சிய லெனினிய இயக்கங்களை கடுமையாக ஒடுக்குவதிலும் மைய, மாநில அரசுகளோடு இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் குரூரமாக செயல்படுகின்றன. கம்யூனிச பாதையை மக்கள் கடைபிடிக்கக் கூடாது என்பதில் இவர்களுகிருக்கிற அக்கறை சொல்லி முடியாது. அரசியல் அதிகாரதில் இடம் பெறவும் தொழிற்சங்கவாதம், பொருளாதார வாதம் ஆகியற்றை கடை பிடிப்பதிலும் விடாப்பிடியாக இருக்கிற மார்க்சியக் கட்சிகளின் மக்கள் விரோதக் கொள்கை இன்னும் ஒரு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் வர்க்க வரையறை முதலிய ஆய்வுகளை கறாராக செய்வதில் மார்க்சியர் எப்போதுமே தவறி வந்தனர். சுய சிந்தனையோடு இவர்களது ஆய்வுகள் இல்லை. மார்க்ஸ் முன்வைத்த ஆசிய உற்பத்தி முறை என்பதை இவர்கள் இன்று வரை புறக்கணிக்கின்றனர். தொடக்கத்தில் தேசிய இனம் என்று பேசிய மார்க்சியர் பின் முற்றாக இக் கொள்கையை கைவிட்டதோடு இந்திய தேசியத்தைப் பேசுவதிலும் முனைப்பாக உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை திராவிட இயக்கம் மற்றும் தமிழ் இயக்கங்களோடு இவர்கள் முரண்பட்டுச் செயல்படுவதன் மூலம் தமிழ் மக்களின் நலன்களைப் புறக்கணிக்கின்றனர். தமிழீழ மக்களின் விடுதலை இவர்களுக்கு கசப்பதன் காரணம் புதிராகத்தான் இருக்கிறது. காவிரிச் சிக்கல், முல்லை பெரியாறு அணைச்சிக்கல் ஆகியவற்றிலும் தமிழர்களின் நலன்கள் இவர்களுக்கு முதன்மையாகப் படுவதில்லை. தொகுத்துச் சொன்னால் மார்க்சியத்தை இந்தியமயப்படுத்துவதிலும், தமிழ்மயப்படுத்துவதிலும் இவர்கள் மக்கள் நெஞ்சைக் கவரவில்லை. மக்களுக்கான விடுதலை என்பதை மார்க்சியம்தான் சாதிக்கும் என்பதில் எனக்கு மாறுபாடு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உலகமயமாதல் முதலிய இன்றைய சூழலில் மார்க்சியத்திற்கு இனி என்ன எதிர்காலம் இருக்க முடியும்?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;உண்மைதான். அமெரிக்கா முதலிய மேற்கத்தியர் தம் பொருளியல் ஆதிக்கத்தோடு அரசியல் ஆதிக்கத்தையும் தெற்கு மற்றும் கிழக்கு நாடுகள் மீது தொடர்ந்து திணிப்பதில் விடாப்பிடியாக இருக்கிறார்கள். இவர்களின் நவீன அறிவியலும் தொழிநுட்பமும் இவற்றோடு அவர்களின் மூலதனமும் இல்லாமல் மூன்றாம் உலக நாடுகள் தம்மை வாழ்வித்துக் கொள்ள இயலாது என்று சொல்கிறார்கள். நம் தேசத்து அ
